இறந்தவர்களின் உடலை அறுத்து கழுகுக்கு வீசும் அகோரம் !

இறந்தவர்களின் உடலை கத்தியால் அறுத்து கழுகுகளுக்கு வீசும் விபரீதமான இறுதிச் சடங்கு முறை சீனாவில் கடந்த பல ஆண்டுகளாக தடை செய்யப் பட்டிருந்தது.
 இறந்தவர்களின் உடலை அறுத்து கழுகுக்கு வீசும் அகோரம் !
அந்த பயங்கர இறுதி சடங்கு முறையை தற்போது ஒரு பிரிவினர் மீண்டும் கடைபிடிக்க தொடங்கி யிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 

இறந்தவ ர்களை எரிப்பது, புதைப்பது என்ற இரு நடை முறைகளே உலகம் முழுவதும் வழக்கத்தில் உள்ளது. கடல் பயணத்தின் போது இறப்பவர்களின் உடலை கடலிலேயே வீசி ‘கடல் சமாதி’ என்று அறிவிக் கின்றனர்.

எரிந்த சாம்பலை நதிகளில் வீசுவது, அதை இன்னும் அதிக வெப்பத்தில் கிரிஸ்டல் நிலைக்கு கொண்டு சென்று உருட்டி மாலையாக்கி இறந்த வர்கள் நினைவாக வைத்துக் கொள்வது போன்ற சடங்குகளை சிலர் கடை பிடிக்கின்றனர். 

இறந்தவர்கள் என்றாவது ஒருநாள் திரும்ப வருவார்கள்’ என்ற நம்பிக்கை யில் பெட்டியில் உடலை வைத்து அதை அப்படியே தூக்கி கொண்டு போய், 

ஆள் நடமாட்டம் இல்லாத மலை உச்சிகளில், இடுக்குகளில், பொந்துகளில் வைக்கும் வழக்கம் சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வருகிறது.
இந்நிலையில், சீனாவில் இறந்தவர்களின் உடலை அடக்கமோ, எரியூட்டவோ செய்யாமல் அப்படியே உடலை வெட்டி கழுகுகளுக்கு இரையாக்கி இறுதி சடங்கு நடத்தும் பயங்கரம் நடக்கிறது.

இதை ‘ஸ்கை பரியல்’ அதாவது, ஆகாய புதைப்பு என்கிறார்கள். சீனாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த முறை பின் பற்றப்பட்டு வந்தது.

உடலை எரிக்க மரங்கள் கிடைக் காததாலும், புதைப் பதற்காக நிலத்தை தோண்டுவது மலைப் பாங்கான பகுதிகளில் கடினம் என்பதாலும் ‘ஆகாய புதைப்பு’ முறையை பின்பற்றி வந்தனர்.

இது மிகவும் அருவரு ப்பானது, சுகாதார மற்றது என்பதால் 1960&களில் சீன அரசு இதற்கு தடை  விதித்தது. 

ஆனால், 1980&களில் இருந்து சீனாவின் சில இடங்களில் மட்டும் இதை புத்தமத இறுதி சடங்கு என்ற பெயரில் மீண்டும் கடை பிடிக்க ஆரம்பித்தி ருக்கின்றனர்.

திபெத்திலும் சீனாவின் சிச்சுவான் மாகாண த்திலும் ‘ஆகாய புதைப்பு’ அதிகளவில் நடக்கிறது. ஊருக்கு ஒதுக்குப் புறமான இடம், மயானம் போல உள்ளது.

இறந்தவ ர்களின் உடல் துணியால் கட்டப் பட்டு இங்கு கொண்டு வரப்படுகிறது. உடலுக்கு புத்தமத பிட்சு ஒருவர் முதலில் வழிபாடு செய்கிறார். அதன் பின்னர், ‘ரோக்யபாஸ்’ என்பவர் வெட்டும் சடங்கை செய்கிறார்.
உடலை ஆங்காங்கே கத்தியால் கிழித்து கூறு போடுகிறார். பின்னர் உடலை அங்கேயே வீசிவிடுகின்றனர்.

இதற்காகவே காத்திருக்கும் ராட்சத கழுகுகள், பருந்துகள், வல்லூறுகள் ஆகியவை கூட்டம் கூட்டமாக குவிந்து உடல்களை கிழித்து தின்கின்றன.

இது அடிக்கடி நடக்கும் காட்சி என்பதால் அப்பகுதியி னருக்கு பழகி விட்டது. ஆனால், வெளி மாநிலங் களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியோடு பார்க்கி ன்றனர்.
Tags:
Privacy and cookie settings