ஃபேஸ்புக் அலுவலகம் மீது மர்ம கும்பல் தாக்குதல் !

ஜெர்மனி யில் உள்ள ஃபேஸ்புக் அலுவல கத்தை மர்ம கும்பல் அடித்து நொறுக்கி யதோடு அல்லாமல் 'ஃபேஸ்புக் டிஸ்லைக்' என்ற வாசக த்தை சுவற்றில் எழுதி சென்றனர்.
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஃபேஸ்புக் அலுவலகம் செயல் படுகிறது. இங்கு நேற்று (ஞாயிறு) இரவு கறுப்பு உடையணிந்த சுமார் 20 நபர்கள் நுழைந்து அலுவலக ஜன்னல் களை சூறையா டியதாக புலனாய்வு போலீஸார் கூறினர்.

அதோடு, ஃபேஸ்புக் பேனர்களை மறைக்கும்படியாக கருப்பு மை ஊற்றியும் சுவற்றில் 'ஃபேஸ்புக் டிஸ்லைக்' என்று எழுதியதாக அந்நாட்டு காவல் துறை அதிகா ரிகள் பத்திரிகையா ளர்களிடம் தெரிவி த்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவ தாகவும் அவர்கள் தெரி வித்தனர். இந்தத் தாக்குதலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை என்று அலுவலக செய்தித் தொடர் பாளர் கூறினார்.

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனை வரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம் களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் சமீபத்தில் தெரிவித் திருந்தார்.

அமெரிக்கா வில் முஸ்லிம் குடியேற்ற த்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்ற குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரர் டோனால்டு டிரம்ப்பின் பேச்சைத் தொடர்ந்து மார்க் இவ்வாறு கூறியி ருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
Tags:
Privacy and cookie settings