ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ்களின் புகழும், அதன் வெற்றியும் நாமறிந்ததே. இப்போது டேனியல் கிரேக் நடித்து வரும் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் ஏற்கனவே அவர் இனி என்னால் முடியாது, தகுதியான ஒருத்தர் இந்தக் கேரக்டரை எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதனையடுத்து ஜேம்ஸ் பாண்டாக அடுத்து யார் என தேடுதல் நடக்க ஆரம்பித்துவிட்டது. உலகம் முழுக்க சர்வேக்கள் , வாக்குகள் என நடக்க நம் நாட்டில் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன? பிரபல டிவி சேனல் ஒன்றும் இந்த வாக்குப்பதிவை நடத்தியுள்ளது.
வாக்குப்பதிவில் பொருத்தமான உலகப்புகழ் பெற்ற பலரும் இடம்பெற அதில் பாலிவுட்டின் அக்ஷய் குமார், ஹ்ருத்திக் ரோஷன் பெயர்கள், முக்கியமாக பாகுபலி கொடுத்த வெற்றியால் பிரபாஸின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.
இதில் பலரது தேர்வாக அக்ஷய் குமார் முன்னிலை வகித்துள்ளார். பிரபாஸ் 10% வாக்குகளே பெற்றுள்ளார். எனினும் தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில் ஒருவர் கூடவா இந்த வாக்குப்பதிவுக்கு ஒத்துவரவில்லை என நம்மால் கேட்காமல் இருக்கவும் முடியவில்லை.
நமக்குத் தெரிந்து பாலிவுட் கான் நடிகர்களுக்கு சரிசமமாக தெலுங்கு நடிகர்கள் கூட ட்ரெண்டை உருவாக்கவில்லை. நம்மூர் விஜய், அஜித் ரசிகர்கள் உருவாக்கிய ட்ரெண்டைக் காண்கையில் ஏன் இவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்றே கேட்கத் தோன்றுகிறது.