மோட்டார் இன்ஷூரன்ஸில் இழப்பீடு... வாகனம் திருடு போனால் !

வாகனம் திருடு போனால்..! வாகனம் திருடு போய் விட்டால் முதலில் அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் பாலிஸி எடுத்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டும்.
காவல் நிலையத்தின் முதல் தகவல் அறிக்கை, விசாரணை அறிக்கை போன்ற வற்றை இன்ஷூரன்ஸ் நிறுவனம் கேட்டு வாங்கிக் கொள்ளும். திருடு போன வாகனம் கண்டு பிடிக்கப்பட்டு, அதற்கு ஏதாவது சேதம் ஏற்பட்டு இருந்தால், அதற்கு கிளைம் உண்டு.

வாகனத்தைக் கண்டுபிடிக்க முடிய வில்லை என்றால் வாகனத்தின் சந்தை விலை, ஐ.டி.வி-யைப் பொறுத்து இழப்பீடு தருவார்கள். 

அதாவது, காணாமல் போன வாகனத்தின் மறுவிற்பனை விலை தான் இழப்பீடாகக் கிடைக்கும்.

இழப்பீட்டுத் தொகை கொடுக்கப் பட்டதும், வாகனத்தின் பதிவு எண் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பெயரில் மாற்றப்படும். 

மேலும், வாகனம் தொடர்பாக உங்களிடம் உள்ள மாற்றுச் சாவி, இதர ஆவணங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும்.


மேலும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் ஒட்டிய தாளில் கடிதம் ஒன்றும் எழுதிக் கொடுக்க வேண்டும்.

 பழைய வாகனத்தை வாங்கி, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் உங்கள் பெயருக்கு மாற்றி இருப்பீர்கள். 

அதே நேரத்தில், இன்ஷூரன்ஸை மாற்ற பலர் தவறி விடுகிறார்கள். இது தவறு. வாகனப் பதிவு மற்றும் இன்ஷூரன்ஸ் இரண்டும் ஒரே பெயர், முகவரியாக இருக்க வேண்டும். 
அப்படி இல்லாத பட்சத்தில் இழப்பீடு கிடைக்காது. ஆர்.சி புத்தகம் மற்றும் இன்ஷூரன்ஸ் பாலிஸியில் பெயர் மாற்றிக் கொள்வது மிக மிக அவசியம்! தவறு என்றாலும்..!

சாலையில் தவறான பாதையில் சென்று விபத்தில் சிக்கினால் அல்லது சாலை விதியை மீறி (வேண்டும் என்றே இல்லாமல்) விபத்துக் குள்ளானாலும் கிளைம் செய்ய முடியும். 

அதற்காக, இதையே வழக்கமாகக் கொண்டிருந்தால் உங்களுக்கு அடுத்த முறை பிரீமியம் தொகை அதிகரிக்கப் பட்டு விடும்! 

பொது இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் 

நேஷனல் இன்ஷூரன்ஸ் 

ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் 

யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் 

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் 

ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ், 

ஹெச்.டி.எஃப்.சி. 

இ.ஆர்.இ.கோ. ஜெனரல் இன்ஷூரன்ஸ் 

டாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்ஷூரன்ஸ் 

பஜாஜ் அல்லயன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்
ராயல் சுந்தரம் இன்ஷூரன்ஸ் 

இஃப்போ டோக்கியோ ஜெனரல் இன்ஷூரன்ஸ் 

மெடிக்ளைம், தனி நபர் விபத்து பாலிஸியும் அவசியம்! 

மோட்டார் இன்ஷூரன்ஸில் ஒருங்கிணைந்த பாலிஸியை எடுத்திருக்கும் அதே நேரத்தில், விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் சிகிச்சை எடுக்கும் சூழ்நிலை வந்தால்,


அதற்குக் கை கொடுக்கும் மெடிக்ளைம் பாலிஸியை எடுத்துக் கொள்வது அவசியம்.

இதில், விபத்தின்போது பாதிப்பு ஏற்பட்டால், கிளைம் கொடுக்கும் தனி நபர் விபத்து பாலிஸியும் ஒரு பகுதியாக இருக்கும். 
அதே நேரத்தில், விபத்தினால் மரணம் அல்லது கை கால் போன்ற உறுப்புகளை இழந்து ஊனமானால் இழப்பீடு கிடைக்கும்.

தனி நபர் விபத்து பாலிஸியை (Personal Accident Policy) தனியாக எடுத்துக் கொள்வது ரொம்ப நல்லது. 

இந்தப் பாலிஸியை பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் குறைந்த பிரீமியத்தில் அளித்து வருகின்றன.

இவை, ‘ஜனதா தனிநபர் விபத்து பாலிஸி’ என்ற பெயரில் வழங்கப் படுகின்றன. 

இந்த பாலிஸியை எடுத்திருந்தால் உலகில் எங்கு விபத்து நடந்தாலும் இழப்பீடு உண்டு. இந்த தனி நபர் பாலிஸியில் மூன்று வகைகள் இருக்கின்றன.

விபத்தில் இறந்தால் மட்டுமே இழப்பீடு வழங்குவது ஒரு வகை. மற்றொன்று, விபத்தில் மரணம் மற்றும் அடிபட்டால் இழப்பீடு கிடைக்கும். 

கடைசியாகச் சொல்லப்பட்ட பாலிஸியில் பிரீமியம் சிறிது அதிகம் என்றாலும், அது தான் அதிக ஆதாயம் தருவதாக இருக்கும்.

மூன்றாம் வகை, விபத்தினால் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக ஊனம் ஏற்பட்டு, அதனால் பணிக்குச் செல்ல முடியவில்லை என்றால், 
அந்தக் காலகட்டத்தில் வாரம் தோறும் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாகத் தரும் பாலிஸி. சுமார் 100 வார காலத்துக்கு இந்த இழப்பீடு கிடைக்கும். 

இந்த தனி நபர் விபத்து பாலிஸியில் மருத்துவச் செலவு மற்றும் நஷ்டத்துக்கு ஏற்ப இழப்பீடு கொடுக்க மாட்டார்கள்.

விபத்து ஏற்பட்டால் பாலிஸியில் குறிப்பிட்டபடி, இழப்பீட்டுத் தொகையைத் தந்துவிடுவார்கள்.
தனி நபர் விபத்து இன்ஷூரன்ஸில், பாலிஸி தொகை அவரின் வருமானத்தைப் பொறுத்து

இன்ஷூரன்ஸ் நிறுவனத்தால் நிர்ண யிக்கப்படும் என்பதால், பாலிஸிதாரர் தன்னால் பிரீமியம் கட்ட முடியும் என்றாலும்,

அதிகத் தொகைக்கு பாலிஸி எடுக்க முடியாது. பொதுவாக, ஒருவரின் ஆண்டு வருமானத்தை போல் 5-7 மடங்குக்கு இந்தப் பாலிஸியை எடுத்துக் கொள்ள முடியும். 

இதை பொதுவாக 14-70 வயதினர் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக, 45-50 வயதுக்கு மேல் என்றால், மருத்துவப் பரிசோதனை அறிக்கை தேவைப்படும்.

ஜனதா பாலிஸியில் அதிகப்பட்சம் ஒரு லட்ச ரூபாய்க்குத் தான் பாலிஸி எடுக்கும் நிலை இருக்கிறது. ஆண்டு பிரீமியம் சுமார் 60-75 ரூபாய் தான்.

பொதுவான தனி நபர் விபத்து பாலிஸியில் ஒரு லட்ச ரூபாய்க்கு ஆண்டு பிரீமியம் சுமார் 130-150 ரூபாய்தான். 

இதில் கூடுதல் தொகைக்கு பாலிஸி எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறது.

பாலிஸிதாரரின் வயது, பணியின் போது அவருக்குள்ள இடர்பாடு போன்ற வற்றைப் பொறுத்து பிரீமியம் மாறுபடும்.

அலுவலத்து க்குள் வேலை பார்ப்பவரை விட, அடிக்கடி வெளியில் சென்று வருபவருக்கு பிரீமியம் அதிகமாக இருக்கும். 


 யாரிடம், எப்படி புகார் செய்வது?

பொதுவாக, மோட்டார் இன்ஷூரன்ஸில் இழப்பீட்டுத் தொகை குறைவாக வழங்கப்படுவது தொடர்பாகத் தான் அதிக புகார்கள் எழுகின்றன, 

இன்ஷூரன்ஸ் சம்பந்தமான புகாரை, முதலில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தி லுள்ள குறை தீர்ப்பு அதிகாரியிடம் எழுத்து மூலம் கொடுக்க வேண்டும்.

10-15 நாட்களில் பதில் கிடைக்க வில்லை அல்லது பதில் திருப்தி கரமாக இல்லை என்றால், 

இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கோட்ட அல்லது மண்டல அலுவலகத்தி லுள்ள குறை தீர்ப்பு அதிகாரியிடம் புகார் கொடுக்க வேண்டும். 

அப்படியும் பிரச்னை தீரவில்லை என்றால், இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மன் என்ற அமைப்பை தொடர்பு கொள்ளலாம்.
 
சென்னை முகவரி: 

Office of the Insurance Ombudsman, 

Fatima Akhtar Court, 

4th Floor, 

453 (old 312), 

Anna Salai, 

Teynampet, 

CHENNAI – 600 018. 

Tel.:- 044-24333678/664/668 

Fax:- 044-24333664

Email:-insombud@md4.vsnl.net.in 

இந்த ஆம்புட்ஸ்மன் அமைப்பு ரூ.20 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட தனி நபர் பாலிஸி களுக்கான கிளைம் கொடுக்கக் கூடிய வழக்குகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

கட்டணம் எதுவும் செலுத்தத் தேவை யில்லை. தீர்ப்பு பெரும்பாலும் மனிதாபி மான அடிப்படையில் இருக்கும்.


இந்த அமைப்பு அளிக்கும் தீர்ப்பை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்று நிறைவேற்ற வேண்டும். 

உங்களுக்கு இங்கும் திருப்தி இல்லை என்றால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.

இதில், நீதிமன்றம் மற்றும் வக்கீல் கட்டணம் இருக்கிறது. வழக்கு நீண்ட காலத்துக்கு இழுக்கும். 

எதிலும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படவில்லை என்றால், இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை

மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐ.ஆர்.டி.ஏ) பொது மக்கள் குறை தீர்ப்புப் பிரிவுக்கு எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டும். 

Insurance Regulatory and Development Authority, 

3rd Floor, 

Parisrama Bhavan, 

Basheer Bagh, 

HYDERABAD 500 004. 

Andhra Pradesh (INDIA ) 

Ph: (040) 23381100 

Fax: (040) 6682 3334. 

Email:irda@irda.gov.in 

வாகனத்தின் உரிமையாளர் கடந்த ஆண்டுகளில் இழப்பீடு கோரிய விவரம், உரிமையாளர் மற்றும் ஓட்டுநரின் கண் பார்வைத் திறன் மற்றும் உடல் ஆரோக்கியம், 

இரவில் வீட்டு காம்பவுண்டுக்குள் அதற்குரிய ஷெட்டில் நிறுத்துகிறாரா அல்லது வீட்டு முன்பாக சாலையில் நிறுத்துகிறாரா என்பதை எல்லாம் கவனித்து பிரீமியத் தொகையை நிர்ணயிப்பார்கள். 
 


உரிமையாளர் வாகனத்தை ஓட்டாமல் டிரைவர் ஓட்டுவதாக இருந்தால், ‘வொர்க்மேன்ஸ் காம்பென்சேஷன்’ சட்டப்படி கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டுக்குத் தனியே பாலிஸி எடுப்பது அவசியம்.

கூடுதல் பிரீமியம் செலுத்தி இந்த பாலிஸியை எடுத்துக் கொள்ள வேண்டும். 

இதேபோல், வாகனத்தின் உரிமை யாளருடன் குடும்பத்தினர் அடிக்கடி பயணம் செய்பவர்களாக இருந்தால்,

அவர்கள் பெயரையும் பாலிஸியில் பதிவு செய்து, தனி நபர் விபத்து பாலிஸி எடுத்துக் கொள்ளலாம். 

இந்த பாலிஸியில் டிரைவருக்கு அதிக பட்சமாக ஒரு லட்ச ரூயாய்க்கும், மற்றவர் களுக்கு 2 லட்ச ரூபாய்க்கு கவரேஜ் இருக்கும். 

மேலும், காரில் உறவினர்கள் – நண்பர்கள்- அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் என பலர் பயணம் செய்யக் கூடும் என்றால்,

இவர்களுக்கும் பயணிகளுக் கான தனி நபர் விபத்து பாலிஸி எடுத்துக் கொள்ளலாம். 

இந்தப் பயணிகள் பாலிஸி, வாகன உரிமை யாளருக்கும் டிரைவருக்கும் பொருந்தாது.

 வாகனத்தில் சி.என்.ஜி, எல்.பி.ஜி சிலிண்டர் களைப் பொருத்தினால், அவற்றை ஆர்.டி.ஓ-வின் அனுமதியோடு மேற்கொள்ள வேண்டும். 
இந்த விவரத்தை வாகனத்தின் பதிவுப் புத்தகத்தில் சேர்த்து, நகல் எடுத்துக் கொண்டு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் கொடுக்க வேண்டும்.


இதற்கான பிரீமியம், இந்த கிட்டின் மதிப்பில் சுமார் 4 சதவிகிதம் அதிகமாக இருக்கும். 

வெளிநாட்டு கார் என்றால், வாகனப் பொறியாளர் ஒருவரின் மதிப்பீட்டை அடிப்படை யாகக் கொண்டு, அதன் மதிப்பு நிர்ணயிக்கப் பட்டு, அதற்கு ஏற்ப பிரீமியம் இருக்கும். பொதுத்துறை

இன்ஷூரன்ஸில் பிரீமியக் கட்டுப்பாடு 2009, ஜனவரி முதல் நீக்கப்பட்டு விட்டது. 

அதனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கூடுதல் கவரேஜ் அளித்து, அதற்கு ஏற்ப பிரீமியத் தொகையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
Tags:
Privacy and cookie settings