மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவடிக்கைகள் !

மழைக் காலத்தில் உயிரிழப்பைத் தடுப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவடிக்கைகள் !
இது குறித்து, சென்னை வடக்கு கோட்ட மின் ஆய்வாளர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'மழைக் காலங்களில் புயல், வெள்ளம் காரணமாக பொருட் சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படக் கூடும். 

எனவே, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை பொது மக்கள் மேற்கொள்ள வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதன் விவரம்:

* மழைக் காலத்தில் மின்சார விளக்குகளை பொருத் துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். 

* உடைந்த சுவிட்சு களையும், பிளக்கு களையும் உடனே மாற்றி விட வேண்டும். 

* டிவி ஆன்டனா, ஸ்டே ஒயர் மற்றும் கேபிள் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம். 
* வீட்டுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போட்டு அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.

மேலும், சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவை குழந்தை களுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

* மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் சுவிட்சு களை பொருத்த வேண்டாம். 

* மின் கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால் நடைகளை கட்ட  வேண்டாம். மின் கம்பங்களை பந்தல்களாக பயன் படுத்தக் கூடாது. 

* மழைக் காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.
 
* மழை, புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது. இது குறித்து, மின்வாரிய அலுவல கத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். 
* இடி, மின்னல் ஏற்படும் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்ற வற்றை பயன்படுத்த வேண்டாம். 

* இடி, மின்னல் ஏற்படும் போது மின் கம்பங்கள், மரங்கள், மின் கம்பிகள் ஆகிய வற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும்.
Tags: