இரண்டாவது பெண்ணை விண்வெளிக்கு அனுப்பும் சீனா!

விண்வெளி ஆராய்ச்சி க்காக அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் விண்ணில் நிரந்தர ஆய்வு மையங் களை அமைத் துள்ளன. இதே போல் சீனாவும் தனியாக ஒரு ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. 
இதற்காக பயிற்சி பெற்ற வீரர்களை அனுப்பி பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகி ன்றன.  கடந்த ஆண்டு ஒரு பெண் மற்றும் 2 ஆண்கள் விண்வெ ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொ ண்டனர். தற்போது 2-வது பெண்ணை நாளை அனுப்ப உள்ளது.

உள்ளூர் நேரப்படி நாளை பிற்பகல் 5.38 மணிக்கு லாங் மார்ச் என்ற ராக்கெட் மூலம் ஷென்சூ-10 விண்கலம் விண் வெளிக்கு புறப்ப டுகிறது.

இந்த விண் கலத்தில் வாங் யாபிங் (வயது 35) என்ற விண் வெளி வீராங்க னையுடன், நீ ஹைஷெங், ஜாங் ஜியாகாங் ஆகிய வீரர்களும் விண் வெளிக்கு செல்கின் றனர்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த வாங் யாப்பிங் கடந்த ஆண்டு வாய்ப்பை இழந்தார்.

விமானப் படையில் விமானி யாக பணி யாற்றி வரும் யாப்பிங், விண் வெளிக்கு செல்லும் முதல் பெண் என்ற பெருமையை பெறுவார் என்று எதிர் பார்க்கப் பட்டது.

ஆனால், கடந்த ஜூன் மாதம் சென்ற விண்க லத்தில், சக விமானியாக பணியா ற்றிய லியூ யாங் விண்வெ ளிக்கு சென்றது குறிப்பிட த்தக்கது.

நாளை புறப்படும் ஷென்சூ-10 விண்கலம் 15 நாட்கள் பயணம் மேற் கொண்டு விண் வெளியில் சோத னைகளை மேற்கொ ள்ளும்.

சினாவின் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கும் பணிகள் 2020-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings