மேலாடையின்றி புகைப்படம் வெளியிட்ட பெண் !

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தைரியமூட்டும் விதமாக பெண் ஒருவர் மேலாடையின்றி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவின் வேக்ஃபீல்ட் நகரைச் சேர்ந்த எம்மா கிர்க்(38) என்பவர் ஒரு விபத்தில் கருத்தரிக்கு வாய்ப்பை இழந்தவர்.
 
இருப்பினும் தனது கணவருடன் இன்பமாக வாழ்க்கையை நடத்தி வந்த இவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது, ஒரு மார்பகம் மட்டும் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார்.

இருப்பினும், புற்றுநோயின் தாக்கம் மற்றொரு மார்பகத்தையும் தாக்கும் என உணர்ந்த அவர், இரு மார்பத்திற்கும் சிகிச்சை மேற்கொண்டு மார்பகங்களின் முனைப்பகுதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளார்.

விபத்தின் பாதிப்பு, மார்பக புற்றுநோய் என வாழ்க்கையில் துயரங்களை அனுபவித்த எம்மா, துவண்டுபோய்விடாமல், இதர பெண்களுக்கு அறிவுரை கூறிவருகிறார்.
மேலும் மேலாடையின்றி புகைப்படங்களை எடுத்து அதனை வெளியிட்டுள்ளார், புற்றுநோய்க்குப்பின் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ள உடற்பயிற்சி செய்யுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு ஒருபக்கம் ஆதரவும், மறுபக்கம் சிறு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
Tags:
Privacy and cookie settings