இளம் நடிகரின் உயர்ந்த உள்ளம் !

தெலுங்கு நடிகர் நாக ஷௌர்யா தீவிரவாதிகளால் கொல்லப் பட்ட ராணுவ குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஜாடுகாடு படத்தின் மூலம் பிரபலமான நாக ஷௌர்யா தற்சமயம் கல்யாண வைபோகமே படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
நந்தினி ரெட்டி இயக்கும் இப்படம் மட்டுமின்றி ரமேஷ் வர்மா இயக்கத்தில் அப்பயதோ அம்மாயி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையி ல் நாக ஷௌர்யா விளம்பர ங்களின்றி ராணுவ வீரரின் குடும்பத்துக்கு உதவியு ள்ளார்.

தீவிரவா திகளால் சுட்டுக் கொல்லப் பட்ட பி.சத்யாவின் குடும்பத்தை நேரில் சந்தித்து 50,000 ரூபாய் பணம் கொடுத் துள்ளார். இது குறித்து அவர் பேச மறுத்து நான் இதை விளம்ப ரத்திற்காக செய்யவி ல்லை என சொல்லி விட்டதாகக் கூறப்படுகிறது.


எனினும் நெருங்கிய வட்டா ரங்களில் விசாரித்ததில் நாக ஷௌர்யாவின் தந்தை சங்கர பிரசாத் நடத்தும் ட்ரஸ்டை இவர் எடுத்து நடத்து வதாகவும் அதன் மூலம் பல உதவிகள் செய்து வருவதாகவும் தகவல்கள் கிடைத் துள்ளன.
Tags:
Privacy and cookie settings