கணவரின் கள்ளத் தொடர்பை அம்பலப்படுத்திய மனைவி !

தனது கணவரின் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்த மனைவி, அதனை பரபரப்பான சாலையில் விளம்பரப் போர்டில் எழுதி வைத்து ஊருக்கே அம்பலப்படுத்திய சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
கணவரின் கள்ளத் தொடர்பை அம்பலப்படுத்திய மனைவி !
இங்கிலாந்தின் ஷெப்பீல்டு நகரைச் சேர்ந்த லிசா. இவரது கணவர் பாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. 

சமீபத்தில் இதனை கண்டுபிடித்தார் லிசா. அதனைத் தொடர்ந்து தனக்கு துரோகம் செய்த கணவரை அவமானப்படுத்த திட்டமிட்டார் லிசா. 

அதற்காக தினமும் பால் அலுவலகம் செல்லும் பரபரப்பான சாலையில் 15 அடி உயர பெரிய விளம்பரப் பலனை ஒன்றை வைத்தார். 
அதில், ‘பாலின் நம்பிக்கை துரோகத்தைத் தெரிந்து கொண்டதையும், ஆகையால், இனிமேல் அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தார் லிசா.  

இதனைப் படித்த வாகன ஓட்டிகள் பலரும் சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு, லிசாவின் இந்த தைரியமான செயலை பாராட்டியுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings