ஷூவில் கமெராவை மறைத்து வைத்து பெண்களை ஆபாசமாக படம் பிடித்த நபர் கைது..!

டெல்லியின் சாகத் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வாலிபர் ஒருவர் ஒவ்வொரு பெண்களையும் பின் தொடர்ந்து செல்வதும் பின்னர் திரும்பி வருவதுமாக இருந்தார்.  

 

அவரது நடவடிக்கையினால் சந்தேகமடைந்த வணிக வளாகத்தின் மேலாளர் அந்த வாலிபரை பிடித்து விசாரிக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தார்.

உடனடியாக மேலாளர் பாதுகாவலர்கள் துணையுடன் அவரை பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தார்.

பின்னர் பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அந்த வாலிபரின் பெயர் ஆஷிஸ் சர்மா என்றும் நொய்டாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக இருப்பதும் தெரியவந்தது.

மேலும் அவர் தனது வலது கால் ஷூவில் ரகசிய கமெராவை மறைத்து வைத்து குட்டை பாவாடை அணிந்து வரும் பெண்கள் பின்னாடி சென்று ஆபாச படங்களை எடுத்ததும் தெரியவந்தது.

ரகசிய கமெரா மூலம் எடுத்த வீடியோக்களை அவர் தனது மொபைல் போனிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து உள்ளார்.

இதையடுத்து அவரிடம் இருந்து ரகசிய கமெரா மற்றும் 16 ஜிபி மெமரி கார்டையும் போலீசார் கைபற்றியுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings