மாரடைப்பு... ஸ்டென்ட் சிகிச்சை உண்மையில் வரப்பிரசாதம் !

ஸ்டென்ட் சிகிச்சையும் மாரடைப்பும் யாருக்காவது மாரடைப்பு வந்து விட்டால் நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர் ஆஞ்சியோ பண்ணிடலாம், ஸ்டென்ட் வைத்து விட்டால் போதும் என்பார். 
மாரடைப்பு... ஸ்டென்ட் சிகிச்சை உண்மையில் வரப்பிரசாதம் !
மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க ஸ்டென்ட் சிகிச்சை கை கொடுக்கிறது என்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உறுதி செய்துள்ளனர்.

ஸ்டென்ட் சிகிச்சை  என்று தான் கூற வேண்டும். இந்தியாவில் பெரும்பாலும் இதயரத்த நாளங்களில் அடைப்பை நீக்க ஸ்டென்ட் டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர். 

அதில் நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அதன் பின் தேவைப்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்கின்றனர். 

பெரும்பாலானோருக்கு ஸ்டேன்ட் பொருத்திய பின் மருந்து மாத்திரையில் சீராக்கி விட முடிகிறது. 
ஸ்டென்ட் என்றால் என்ன? 
மாரடைப்பு... ஸ்டென்ட் சிகிச்சை உண்மையில் வரப்பிரசாதம் !
ஸ்டென்ட் என்பது மிகச்சிறிய வலைகுழாய், உடலில் எந்த பாகத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டாலும், ரத்த ஓட்டத்தை சீராக்க இந்த வரை டியூப் ரத்த குழாயில் செருகப்படுகிறது.

இதற்காக தான் ஆஞ்சியோ பிளாஸ்டி என்ற சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது. ஆஞ்சியோவின் முக்கிய கட்டம்தான் ஸ்டென்ட் வைப்பது. 

ரத்தக் குழாயின் ரத்தம் ஓட்டம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு மட்டுமின்றி ரத்தக் குழாய் பலவீனமாக இருந்து அது வெடிப்பதை தடுக்கவும் ஸ்டென்ட் தயாரிக்கப் படுகிறது. 

சிலவகை ஸ்டென்ட்கள் மருந்து தடவிய தாகவும் இருக்கும். இதயத்துக்கு பாதுகாப்பு அவசியம். இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்கள் சீராக இருப்பது முக்கியம். 
அதில் ரத்தம் செலுத்தப்பட்டு, பின்னரே மற்ற உறுப்புகளுக்கு செல்கிறது. இதய ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது நெஞ்சுவலி, அதைத் தொடர்ந்து மாரடைப்பு ஏற்படுகிறது. 

இதைத் தான் ஆஞ்சினோ என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இதைத் தடுக்க ஆஞ்சியோ பிளாஸ்டிக் செய்யப் படுகிறது. ஸ்மென்ட் பொருத்தப் பட்டவுடன் ரத்த நாளத்தில் அடைப்பு நீக்கப்படுகிறது. 

வலைடியூப் வழியாக ரத்தம் சீராக பாய்கிறது. ஸ்டென்ட் பொருத்தா விட்டால் மீண்டும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். 
மாரடைப்பு... ஸ்டென்ட் சிகிச்சை உண்மையில் வரப்பிரசாதம் !
பக்க வாதத்தையும் தடுக்கும் வலது இடது கழுத்தில் கரோடைட் என்ற ரத்தக் குழாய்கள் உள்ளன. இதயத்தில் இருந்து செலுத்தப்படும் ரத்தம் இந்த ரத்த நாளங்கள் வழியாகத் தான் மூளைக்கு செல்கின்றன. 

இதிலும் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்கவும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை பயன்படுகிறது. ஸ்டென்ட் வைத்தவுடன் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகி பக்கவாதம் தவிர்க்கப் படுகிறது.
தோள்பட்டை வலியை போக்க இயற்கை வழிகள் என்ன?
இதய ரத்தக் குழாய்களில் பலன் தரும் ஸ்டென்ட் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது என்பதை அமெரிக்க, ஐரோப்பிய நிபுணர்கள் சமீபத்தில் உறுதி செய்துள்ளனர்.
Tags: