ஸ‌தகா என்ற தர்மம் !

நீங்கள் விரும்பும் பொருள்க ளிலிருந்து செலவு செய்யாத வரை அல்லாஹ் விடத்தில் நன்மையை அடைய முடியாது என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன் 3:92)
ஸ‌தகா
இந்த உலகத்தில் மனிதன் விரும்பக் கூடிய முக்கியமா னவைகளில் முதலாவது செல்வம் தான்! 

எனவே செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாத வரை நன்மையை அடைய முடியாது என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதரத்தைப் பெற்றிருக்கும் ஒரு மனிதன்,அந்த பொருளா தாரத்தில் தனக்கும் தன் குடும்பத் தாருக்கும் செலவு செய்தது போக மீதம் உள்ளதில் அவனால் இயன்ற அளவிற்கு தன்னுடைய உறவின ர்களுக்கும் நெருங்கிய வர்களுக்கும்

அனாதைக ளுக்கும் வறியவர் களுக்கும் ஏழைக ளுக்கும் அவர்களின் கண்ணீர் துடைக்கும் விதமாக, துயர் போக்கும் விதமாக‌ தர்மம் வழங்குவது இஸ்லாத்தின் பார்வையில் அவசியமாகும். 

ஆனால், பொருளாசை நிறைந்த இந்த உலகில் தர்மம் செய்வது என்பது மிகவும் அரிதாகி விட்டது.

மரணித்த பிறகு எந்தப் பலனும் தராத செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதை விட, சேர்த்து வைப்பதில் தான் மனிதன் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறான்.

எனவேதான், மனித சமுதாயத்தின் ஒப்பற்ற வாழ்க்கை நெறியான இஸ்லாம், மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்ப தற்காகவும் மனித நலனை கருத்தில் கொண்டு

அவர்களுக்கு மத்தியில் சகோதரத்து வமும் நல்லிணக்கமும் ஏற்பட வேண்டும் என்பதற் காகவும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மம் வழங்குவதை கட்டாய மாக்கி இருக்கிறது.

பொருளாதாரம் என்பது இறைவனின் அருள். 

இவ்வுலகில் பொருளாதாரம் வழங்கப் பட்டவர்களின் நிலைமை யையும் பொருளாதாரம் வழங்கப் படாதவர்களின் நிலைமை யையும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம். 

வசதி படைத்தவர் களைவிட வசதி அற்றவர்கள் கல்வி, அறிவு, திறமை, கூர்மையான சிந்தனை போன்ற வற்றில் உயர்ந்து இருக்கிறார்கள். 

இருந்த போதிலும் அவர்கள் ஏழைக ளாகவும் அன்றாட‌ம் பணத்திற்கு திண்டாடு பவர்களாவும் இருக்கிறார்கள். 
எனவேதான் பொருளாதாரம் என்பது என்ன தான் திறமை, அறிவு இருந்தாலும் இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.

அதனால்தான் நபித்தோழர்கள் தர்மம் வழங்கும் விஷயத்தில் நான்-நீ என்று போட்டி போட்டார்கள். அவர்களில் செல்வம் படைத்தவர்கள், அதிகமதிகமாக தர்மம் செய்தார்கள். 

செல்வம் இல்லாதவர்கள் அதை செய்வதற்கு இயலாமல் போனார்கள். 

தர்மம் செய்ய இயலாம‌ல் ஏழைகளா களாக இருந்த‌ நபித்தோழர் களுக்கு (தர்மம் செய்வதற்கு ஈடான நன்மை தரக்கூடிய) ஒரு துஆவை நபி (ஸல்)அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அந்த துஆவையும் வசதி படைத்த சஹாபாக்களும் கற்றுக் கொண்டு ஓதத் துவங்கி விடுகிறார்கள். இதைக் கண்ட ஏழை சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடம் முறை யிட்டார்கள். 

அப்போது நபி (ஸல்) அவர்கள் இது அல்லாஹ்வின் அருள் கொடையாகும். அதை அவன், தான் நாடியவருக்கு கொடுப்பான் என்று குறிப்பிட்டார்கள். நூல்: முஸ்லிம் (ஹதீஸின் சுருக்கம்)

ஆக, செல்வம் என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றாகும். அல்லாஹ் நமக்கு செல்வத்தை கொடுத்து,

அதை அல்லாஹ்வுக் காகவே தர்மம் செய்யக் கூடிய மனதையும் நமக்கு கொடுப்பதற்காக, அல்லாஹ் விடம் அதற்கான‌ எண்ணங் கொண்டு நாம் பிரார்த்திக்க வேண்டும். 

அவன் கொடுத்த வற்றிலிருந்து நாம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை விரும்பி மனதார தர்மம் செய்ய வேண்டும். 

வசதி படைத்தவர் களாகிய நாம் வசதி இல்லாதவர் களுக்கு எந்த வகையில் உதவினாலும் அதன் மூலம் நாம் முழுமையான பலனை அனுபவிப்போம் 

என்பதையும், அது மறுமையின் (நம்முடைய நன்மை) அக்கவுண்ட்டில் சேரக்கூடிய தொகையாகும் என்பதையும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடு கிறீர்கள்; நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே
அது முழுமையாக வழங்கப்படும்; நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன்: 2:272)

செல்வம் படைத்தவர்கள் தான தர்மங்கள் செய்து அல்லாஹ் விடத்தில் நன்மையை அடைந்து விடுகிறார்கள். 

ஆனால் நாம் எவ்வாறு தான தர்மங்கள் செய்வது, அந்த நன்மைகளை எவ்வாறு அடைவது என்று வசதியில்லா தவர்கள் நினைக்கலாம்.
ஸ‌தகா என்ற தர்மம் !
1 லட்ச‌ ரூபாய் இருக்கும் ஒருவர் 1000 ரூபாய் தர்மம் செய்வதை விட, வெறும் 100 ரூபாய் வைத்திருப்பவர் தன்னைவிட கஷ்டப் படுபவருக்கு 50 ரூபாய்க்கு செய்யும் தர்மம் தான் மேலானதாகும். 

ஏனெனில் இறைவன் கொடுத்த‌ தன்னுடைய உடமையில் பாதியை அவர் கொடுத்து விடுகிறார். 

ஆக தர்மம் செய்வதற்கு அதிகமான வசதி தான் இருக்க வேண்டும் என்று நினைக்கத் தேவையில்லை. அவரவர்களும் தன்னால் இயன்றளவுக் காவது தான தர்மங்களை செய்ய வேண்டும். 

அதற்கும் கூட‌ சக்தி பெறாத பரம ஏழைகள் மற்றும் வறிய‌வர்கள் ஸதகாவின் நன்மையை அடைவதற்காக‌, நபி (ஸல்) அவர்களின் உபதேசங்கள் எவ்வாறு கைக்கொடுக்கின்றன, சுப்ஹானல்லாஹ்!

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின் றார்கள், இறைவனின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள், இறைவனின் தூதரவர்களே! 

செல்வச் செழிப்புள்ளவர்கள் இறைவனிடம் மிகுந்த நற்கூலியை (தான தர்மத்தின் மூலம்) சம்பாதித்துக் கொண்டார்கள். 

அவர்கள் நாங்கள் தொழுவது போலவே தொழுகிறார்கள்; நாங்கள் நோன்பிருப்பது போலவே நோன்பிருக் கின்றார்கள்; 
அவர்கள் தங்களது தேவைக்குப் போக மிகுதியா யுள்ள செல்வத்தி லிருந்து தர்மம் செய்கிறார்கள் என்று கூறிய போது, 

பெருமானார் (ஸல்) அவர்கள், அல்லாஹ் உங்களுக்கும், தான தர்மங்கள் செய்திட தேவையா னவைகளைத் தரவில்லையா? எனக் கேட்டு விட்டு சொன்னார்கள்,

உண்மையிலேயே ஒவ்வொரு தஸ்பீஹும் ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தஹ்மீதும் ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தஹ்லீலும் ஒரு தர்மமாகும். 

ஒரு நல்ல செயலைச் செய்யத் தூண்டுவதும் ஒரு சிறந்த தர்மமாகும். ஒரு தீய செயலைத் தடுப்பதும் ஒரு தர்மமாகும். நீங்கள் உங்கள் மனைவியரோடு வீடு கூடுவதும் ஓர் தர்மமாகும்” என்று கூறினார்கள்.

அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவியிடம் தன் இச்சையை நிறைவு செய்துக் கொள்ளும் போது அதற்காகவும் அவருக்கு நற்கூலி உண்டா? எனக் கேட்டார்கள். 

பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், இதில் தடுக்கப்பட்ட (விபச்சாரத்) தை செய்பவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீகளா? 

ஆகவே இதில் ஆகுமான முறையில் நடந்துக் கொள்பவர் களுக்கும் நற்கூலி உண்டு    நூல்:முஸ்லிம்

இன்னொரு ஹதீஸிலே,

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், தொழுகைக் காக எடுத்து வைக்கக் கூடிய ஒவ்வொரு அடியும் ஸதகா, பாதையில் இருந்து தீங்கு தருபவற்றை அகற்றுவதும் ஸதகா, உன் சகோதரனைப் பார்த்துப் புன்முறுவல் பூப்பதும் ஸதகா என்று கூறியுள்ளார்கள்.

இரு மனிதர்களுக் கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும்.

அது போலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். 

தொழுகைக் காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதை யிலிருந்து அப்புறப் படுத்துவதும் ஒரு தர்மமாகும். நூல்கள்: புகாரி, முஸ்லிம்
ஆக, அன்றாடம் உண்ணும் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் மக்கள் கூட‌ இவ்வாறாக ஸதகாவின் நன்மைகளை அடைந்துக் கொள்வதற்கு இஸ்லாம் அழகிய நல்லொழுக்கங் களை வழிமுறை களாக ஆக்கிக் கொடுத்தி ருக்கிறது. 

அதே சமயம் சஹாபாக்கள் செய்த தர்மங்களி லிருந்தும் இங்கே நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டி யுள்ளது.

அபூபக்கர் (ரலி) அவர்களைக் குறித்து நபி(ஸல்) அவர்கள் “இவருடைய செல்வம் இஸ்லாத்திற்கு உதவியது போல் வேறு யாருடைய செல்வமும் எனக்கு உதவிய தில்லை” என்று கூறினார்கள்.

அதாவது, தபூக் யுத்தத்தின் போது நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டால் இங்கு பொருத்தமாக இருக்கும்.

தபூக் யுத்தத்திற்காக நபி(ஸல்) அவர்கள் பொருள் சேகரிக்க அறிவிப்பு கொடுக்கி றார்கள். ஒவ்வொரு முறையும் அபூபக்கர் (ரலி) அவர்கள் தன்னிடம் உள்ள பொருள்கள்

அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பது வழக்கமான ஒன்று. உமர் (ரலி) அவர்கள் இந்த முறை தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்து,  

அபூபக்கர் (ரலி) அவர்களை முந்திவிட வேண்டும் என்று நினைத்து நபி (ஸல்) அவர்களிடம் வந்து கொடுத்த போது, நபி (ஸல்) அவர்கள் உங்களுடைய குடும்பத்தி னருக்காக ஏதாவது வைத்துள்ளீர்களா? என்று கேட்கிறார்கள். 

“சிலதை என்னுடைய குடும்பத்தி னருக்காக மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்தை யும் கொடுத்து விட்டேன்” என பதில் அளிக்கிறார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கொடுத்த போது உமர் (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை நபி (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள். 

அப்போது “அல்லாஹ்வும் அவனது தூதரும் எனது குடும்பத்தி னருக்குப் போதுமான வர்களாக உள்ளனர்” என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறியபோது,

உமர் (ரலி) அவர்கள் “அபூபக்கர் (ரலி) அவர்களை என்னால் ஒருபோதும் கொடுப்பதில் முந்தி விட முடியாது” என்றார்கள்.சஹாபாக் களிடையே கொடுப்பதில் அந்த அளவுக்குப் போட்டி இருந்தது.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்…? யாராவது நம்மிடம் உதவி கேட்டு வரும் போது நம்முடைய மணிபர்ஸில் உள்ள பெரிய நோட்டுகளை யெல்லாம் விட்டு விட்டு, சில்லரையாக தேடிப்பிடித்து கொடுக்கக் கூடியவர் களாக உள்ளோம். 

நம் செல்வம் பிறருக்கு சென்று விடா வண்ணம், நம் செல்வத்தோடு கை விலங்குப் போட்டுக் கொள்வதையே நம்மில் அதிகமானோர் விரும்புகிறோம்.
ஸ‌தகா என்ற தர்மம் !


நம்மிடம் இருக்கும் எல்லா வற்றையும் கொடுக்கா விட்டாலும் நம்மால் முடிந்த அளவு தாராளமாக கொடுத்து, அந்த தர்மம் நம் பாவங்களை அழித்து, நரகத்தை விட்டும் நம்மை தடுக்கக்கூடிய கேடய மாகும்படி ஆக்கிக் கொள்ள வேண்டாமா?

“பேரீத்தம் பழத்தின் ஒரு கீற்றை (தர்மம் செய்வதைக்) கொண்டாவது உன்னை நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்” என நபி (ஸல்) அவர்கள் கூறி யுள்ளார்கள். அறிவிப்பாளர்: அதிய்யுப்னு ஹாதம் (ரலி); நூல்:புகாரி

அதாவது, தன்னால் இயன்றது ஒரு பேரீத்தம் பழத்தின் கீற்று தான் என்றாலும் அதையாவது தானமாக கொடுத்து, நரகத்தை விட்டும் தப்பித்துக் கொள்ளும்படி நபி (ஸல்) அவர்கள் கூறியிருக் கிறார்கள் என்றால்,

‘இது நான் சம்பாதித்த சொத்து, என்னுடைய செல்வம், நான் மட்டுமே இதை அனுபவிக்க வேண்டும், 

இதிலே என்னைத் தவிர யாருக்கும் உரிமை யில்லை என்றெல்லாம் எண்ணி, கொடுக்கும் கரங்களைப் பெற்றிருக்க வேண்டிய எத்தனையோ செல்வந்த‌ர்கள்,

தன்னுடைய செல்வங்களை தன் கரங்களு க்குள் இறுக்கிப் பிடித்தவர்களாக வாழ்கி றார்களே, அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நரக நெருப்பையும் இவர்கள் அஞ்சவேண்டாமா?

ஒரு மனிதன் தான் செய்யும் சில தவறுகளின் காரணத்தி னால் மறுமையில் நரகத்திற்கு செல்லக் கூடிய அவல நிலை ஏற்படும். 

அந்த நேரத்தில் அவன் தன்னை நரகைவிட்டும் காத்துக் கொள்வதற்கு தர்மத்தை ஒரு துணைச் சாதனமாக அல்லாஹ் ஆக்கி இருக்கிறான். 

ஒரு பேரீத்தம் பழத் துண்டு கூட சில நேரங்களில் நம்மை நரகை காப்பாற்றும் கேடயமாக அமைந்து விடும். 

எனவே அற்பமானது என்று எண்ணி தர்மம் செய்யாமல் இருந்து விடாமல் நம்மால் முடிந்த அளவு தர்மம் செய்து மறுமையில் அல்லாஹ்வின் தண்டனை யிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். 

அதை விடுத்து யாருடைய ஆதரவுமற்ற அந்த‌ மறுமை நாளில் ‘இன்னும் ஏதாவது ஒரு சிறிய நன்மை இருந்தால் போதுமே, 

அதைக் கொண்டு நரகத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாமே’ என ஆதங்கப் பட்டாலும், திரும்பி இந்த உலகத்துக்கு வந்தா நாம் தர்மம் செய்து நன்மை தேட முடியும்? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இது போன்றவர் களைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறுகிறான், உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கிய வற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! 

“இறைவா! (இன்னும் கொஞ்சம்) குறைந்த காலலமாவது எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே” என்று அப்போது (மனிதன்) கூறுவான்.(அல்குர்ஆன் 63:10)

மேலும் அல்லாஹ் தன்னுடைய திருமறையில், “குழந்தை களும், செல்வங்களும் இந்த உலகத்தில் உங்களுக்கு சோதனைக ளாகவே தரப்பட்டுள்ளது” என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 8:28) 

அந்த சோதனையில் இருந்து தப்பித்து வெற்றிபெற வேண்டு மெனில், அந்தச் செல்வத்தை நம்மால் இயன்றவரை அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்தால் மட்டுமே ஈடேற்றம் பெற முடியும்.

ஆக, ஏழை எளிய மக்களுக்கு நாம் பெரிதாக வீடு வாசல் கட்டி மறுவாழ்வு அளிக்க இயலா விட்டாலும், அடுத்த வேளை உணவுக்கு அவர்களுக்கு என்ன வழி பண்ணுவோம் என்றாவது நாம் சிந்திக்க வேண்டும்.

தர்மம் செய்வதால் நம்முடைய செல்வம் குறைந்து விடுமா?:-

நாம் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் மூலம் நம்முடைய செல்வம் குறைந்து விடுகிறது என சிலர் எண்ணிக் கொண்டிருக்கி றார்கள்.
ஸ‌தகா என்ற தர்மம் !
ஆனால் நாம் வழங்கும் தர்மம் மறுமையில் அல்லாஹ்வால் பல மடங்கு உயர்த்தப்பட்டு மிகப் பெரிய கூலியாக வழங்கப்படும். அல்லாஹ் தன் திருமறையில்,

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடு வோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. 

தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 2:261)

ஆக, ஒவ்வொரு முறையும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போது 1×7×100=700 மடங்கு நன்மைகளை அல்லாஹ்த ஆலா நமக்கு அள்ளித் தருகிறான்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீத்தம் பழத்தின் மதிப்புக்கு தர்மம் செய்தாரோ, அல்லாஹ் பரிசுத்த மானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை; 

அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலது கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரை குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைப் போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று நபி(ஸல்) 

அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூ ஹூரைரா(ரலி); நூல்: புகாரி

மேலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத் திற்காக தான தர்மங்கள் செய்பவருக் கான உவமானம்:

“அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறா ர்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; 

அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப் பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யா விட்டாலும் 

பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதை யெல்லாம் பார்க்கின்ற வனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன் 2:265)

நம்முடைய செல்வத்தை விசாலப்படுத்த வேண்டு மென்றால், தான தர்மங்கள் செய்ய வேண்டும் என குர்ஆனும் ஹதீஸும் நமக்கு அறிவுறுத்து கின்றன‌.

இதை வலுப்படுத்தும் வகையில், அல்லாஹுத்த ஆலா நம்முடைய செலவினங் களை தான் கவனித்துக் கொள்வதாக ரசூல்(ஸல்) கூறும் இன்னொரு ஹதீஸ்:

ஆதமுடைய மகனே நீ (கொடு) செலவிடு! உனக்கு நான் செலவிடு கிறேன் (கொடுக்கிறேன்) என்று அல்லாஹ் சொல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); நூல்:புகாரி

ஆக, நாம் ஸதகா செய்யும் போது இறைவனும் நமக்கு பொருளா தாரத்தை வழங்குவான். கொடுக்க கொடுக்க நம் செல்வத்தை
ஸ‌தகா என்ற தர்மம் !
நாம் அறியாத புறத்திலிருந்து இறைவன் வளர்த்து தான் கொடுப்பானே தவிர, நமது செல்வம் தான தர்மங்களால் குறைவ தில்லை என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

தான தர்மங்களை வாரி வழங்குதல்:-

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்,

“நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர் களாக இருந்தனர். ஜிப்ரீல் (அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி (ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள்.

ஜிப்ரீல் (அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் – ரமலான் முடியும் வரை – நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். 

நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல் (அலை) தம்மைச் சந்திக்கும் போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்.” நூல்:புகாரி

எனவே எனதருமை சகோதர சகோதரிகளே! நன்மைகள் பெருக்கிக் கொடுக்கப்படும் இந்த ரமலானிலும்,

வருஷத்தின் மற்ற நாட்களிலும் நாம் அல்லாஹ்வின் பாதையில் அதிகமதிகம் செலவு செய்து அல்லாஹ் விடத்தில் கிடைக்கும் நன்மைகளை அடைந்துக் கொள்ள முழுமையாக முயற்சி செய்வோமாக!
Tags:
Privacy and cookie settings