ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கான டிப்ஸ் !

எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர் வழிகளின் நடமா ட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதி விலக்கல்ல.
ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கான டிப்ஸ் !
முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்று வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார் பி.கே. 

ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணனா ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே  செய்கின்றன.

போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என சில விஷயங்கள் இதில் உள்ளன. 
கடந்த மார்ச் மாதம்கூட TimTara என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணைய தளத்தின் நிறுவனர் ஏமாற்று நடவடிக்கை களால் கைது செய்யப் பட்டார்.

அந்த இணையதளமும் அதன் பின்னர் மூடப்பட்டது. இது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.

கவர்ச்சி விளம்பரங்கள் !
கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, ரூ.50,000/-   மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் 500 ரூ பாய்க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும்.

இதை நம்பி பலரும் அந்தப் பொருளை வாங்க போட்டிபோட கடைசியில், யாராவது ஒருவருக்கு மட்டுமே அந்தப் பொருள் கிடைக்கும் என்று சொல்லி விடும். 

ஆனால், ஏற்கெனவே கட்டிய பணத்தைத் திரும்பத் தர மாட்டோம், அதற்கு பதில் ஏதேனும் பொருள் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லும்.

வேறு வழியில்லாமல் நாம் வாங்கும் இப்பொருள், கடையில் விற்கும் விலையை விட அதிகமா க இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இரண்டு நிமிட நிபந்தனை!

இந்த ஏமாற்று வித்தையில் வேடிக்கையான விஷயம்,  வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும் போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்து முடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒரு டெக்னிக்கை பின் பற்றுகின்றன.

அதாவது, பொருளைவாங்க 2 நிமி டங்களே அவகாசம் தரும். இதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும்.

இல்லை யெனில், இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைக்காது என்று சொல்வதால், நாம் பரபரப்புக் குள்ளாவோம்.  ஏற்கெனவே பணம் கட்டி விட்டோம். 

எனவே, 2 நிமிடத்தில் பொருளை வாங்கி விட வேண்டும். இல்லா விட்டால் கட்டிய பணம் போய் விடும் என்கிற அவசரத்தில் தான் நாம் செயல்படுவோம். இந்த இரண்டு நிமிடத்தில் பொருட்களை சரியாக புக்செய்ய முடியாமல் பணத்தை இழக்கிறார்கள் பலர்.
வெஜ் கீமா மசாலா செய்வது எப்படி?
மறைமுக கட்டணங்கள்!

இன்னும் சில இணைய தளங்கள் Free Trail, Half Price, போன்று பல ஆஃபர்களை தருகின்றன. இதிலும், பெரும்பாலும் நடப்பது மோசடியே. 

உண்மையில் இவர்கள் மறை முக கட்டணங்கள் (Hidden Charges) என்ற பெயரில் அதிகமான பணத்தை உங்களிட மிருந்து கறந்து விடுவார்கள்.

உண்மை யாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைக் கேட்க மாட்டார்கள்.

இதே போல, திடீரென இலவசபோன், கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டு கொள்ளவே கூடாது.

 ஷிப்பிங் கட்டண மோசடி !
ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கான டிப்ஸ் !
உண்மையாக வாடிக்கை யாளர்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் தளங்கள், டிவி வாங்கினால் கூட அதை கொண்டு வந்து தருவதற்கு எந்தக் கட்டணத்தையும் கேட்காது.

அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும். பொருளை கொண்டு வந்து தர அதிக கட்டணம் கேட்கும் இணைய தளங்களை  நம்பக் கூடாது.

இதில் இபே மட்டும் விதி விலக்கு, காரணம், அத்தளத்தில் பொருட்களை விற்பவர்கள் பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விலை குறைவாக தருவதால் பொருட்களை கொண்டு வந்து சேர்க்க கட்டணம் கேட்கலாம்.

நோ ரிட்டர்ன், ப்ளீஸ் !
ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கான டிப்ஸ் !
பொருட்களைத் திரும்ப எடுத்துக் கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும் பாலான தளங்கள் மோசடி செய்கின்றன.

ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும்போது அளவு சரியாக இல்லை என்றால், அதைத் திரும்ப அனுப்பும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இதற்கு என்ன விதி முறைகள் என்பதையும் அறிவது அவசியம்.

ஆனால், ஆர்டர் செய்த பொருளைத் திரும்ப அனுப்பும் முன் நீங்கள் அதை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைத்திருப்பது எப்படி?
விதிமுறைகளில் மோசடி!

சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயே விதி முறைகளை பட்டியல் போட்டிருப் பார்கள். மிக முக்கியமான விதி முறைகளை நம் கண்ணுக்கு தெரியாதபடி போட்டிருப் பார்கள். 

அந்த விதி முறையை நாம் கவனிக்கத் தவறி விட்டு, பொருட்களை வாங்கிய பின்னர் அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெரிவித்தால், நாங்கள் தான் விதி முறைகளை ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம் என்பார்கள்.

பெரும்பாலும் பொருட்களை ரிட்டர்ன் எடுத்துக் கொள்வதிலேயே இந்தப் பிரச்னை வரும்.

கூரியர் மோசடி!

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் செய்திருக்கும் பொருளானது கூரியர் மூலமாக நம க்கு அனுப்பப்படும். ஆனால், அந்த கூரியரை பிரித்து பார்க்கும் போது அப்பொருளானது இல்லாமல் கூட இருக்கலாம். 

வீட்டுக்கு வந்த கூரியரில் பொருள் ஏதும் இல்லை எனில், உடனே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு தெரியப் படுத்துவது அவசியம். 

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் வாடிக்கை யாளர்களுக்கு பொருட்களை அனுப்பியதை ஆதாரப் பூர்வமாக நிரூபிக்க முடியாமல் போனால், அதன் பிறகு அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கலாம். 

சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மூன்றாம் நபர் விற்பனை யாளர்களைக் கொண்டு செயல் படுவதால் அவர்களாலும் ஏமாற்றப் படலாம், ஜாக்கிர தை.
ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கான டிப்ஸ் !
வாரன்டி இருக்கிறதா?

பல இணைய தளங்கள் உற்பத்தியாளர் வாரன்டியுடன் தான் (Manufacturer Warranty) பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையை விட மிகக் குறைவாக இருந்தால், உற்பத்தியாளர் வாரன்டி தராமல் மோசடி செ ய்து விடுகின்றன சில நிறுவனங்கள். 

அப்படியே வாரன்டி தந்தாலும் அதற்கான பொறுப்பு அந்த ஆன்லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மை குழப்பி ஏமாற்றி விடும்.

 உஷாரய்யா உஷாரு!

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது இப்படி நடக்கும் மோசடிகளில் நாம் சிக்கி ஏமாறாமல் இருக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

* பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100 அல்லது 200-க்கு தருகிறோம் என்று சொல்லும் தளங்களை ஒதுக்குவது நல்லது.
* பொருள் ஏலத்தில் (Auction, Bid) விற்கப்படும் போது பொருளின் விலை சந்தை விலையை விட சற்றே குறைவாக மட்டுமே இருக்க வேண்டும். மிகஅதிக விலையுள்ள பொருளை, மிக குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்றால் அது போலியாக இரு க்க வாய்ப்புள்ளது.

* நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார்ப்பதும் அவசியம். சில தளங்களில் எழுத்துப்பிழை போன்று இருந்தாலும், அவை போலி பொருட்களை அவ்வாறு விற்கின்றன.

உதாரணம் :  Nokia – Noika, Samsung Galaxy Note – Galaxy Note.

* பொருளை வாங்கும் போது, அதை ஏற்கெனவே வாங்கிய வர்களின் கருத்தை வாங்கும் தளத்திலோ அல்லது இணையத்திலோ தேடிவிட்டு வாங்க வேண்டும்.

* ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்கத் தோன்றும்.

அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியைக் குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனித்து விட்டு, வாங்கு வதற்கான வேலையில் இறங்குவது நல்லது. 

அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். ஆர்டரை கேன்சல் செய்தால் பெரும்பாலும், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்து விடும்.
 ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கான டிப்ஸ் !
* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்து பவர்கள் மிகமிக பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன் படுத்துங்கள்.

இல்லை என்றால், பொருளை வாங்கும் போது பணம் தருகிற மாதிரி (Cash On Delivery) வைத்துக் கொள்ளுங்கள்.

* முதல் முறையாக ஆன்லைன் மூலம் பொருள் வாங்குபவர்கள் அது குறித்து நன்கு பரிச்சய ம் கொண்டவர் மூலம் வாங்கலாம்.

* ஆர்டர் செய்த பின்னர் உங்களுக்கு வரும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்ற வற்றை பொருள் உங்களுக்கு கிடைக்கும் வரை பத்திரமாக வைத்தி ருக்கவும்.
Tags:
Privacy and cookie settings