வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது.. எளிதானது இல்லை !

வெளிநாடு போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப சொந்த நாட்டுக்கு வறோம் - வயசு 22 
வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது.. எளிதானது இல்லை !
தம்பி படிக்கிறான், அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும் எப்படியும் ஒரு 3 அல்லது 4 வருஷம் சம்பாதித்தே ஆகனும் - வயசு 24

அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடன அடைக்கனும், அடுத்து தங்கச்சி கல்யாணம் இருக்கு, தம்பி படிப்பு முடிய ரெண்டு வருஷம் இருக்கு அதனால இன்னும் ஒரு 3 வருஷம் - வயசு 26

தம்பி படிப்பு முடிஞ்சி ஒரு வேலைக்கு போகனும் அதனால இன்னும் ஒரு 2 வருஷம் - வயசு 28

அப்பா அம்மா பொண்ணு பார்க்கறாங்க கல்யாணம் பண்ணனும் அதுக்கு பணம் சேர்க்கனும் அதுக்கு ஒரு 1 வருடம் - வயசு 30

கல்யாணத்துக்கு வாங்கின கடன் எல்லாத்தையும் முடிச்சி ஊரு போகனும் அதுக்கு ஒரு 2 வருஷம் - வயசு 32
பிள்ளைய ஸ்கூல் சேர்க்கனும்,அதுக்கு கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கனும் அதுக்கு 2 வருஷம் - வயசு 34

ஒரு வீட்ட கட்டி முடிச்சிடனும் இத்தனை வருஷம் இருந்து ஒன்னுமே சம்பாதிக்கல அதுக்கு ஒரு 6 வருடம் - வயசு 40

புள்ளங்க படிக்குது இப்போ ஊருக்கு போக முடியாது பணம் வேணும் அதுக்கு இன்னும் 10 வருஷம் இருந்தே ஆகனும் - வயசு 50

புள்ளங்க படிப்ப முடிக்க இன்னும் 2 வருஷம் இருக்கு அதனால இன்னும் 3 வருஷம் - வயசு 53
வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது.. எளிதானது இல்லை !
புள்ளைகளுக்கு ஒரு வேலை கிடைக்கனும்,பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் அதனால இன்னும் 4 வருஷம் - வயசு 57

கல்யாணம் பண்ணி கொடுத்ததும் மாப்பிள்ளைகளுக்கு ஒரு தொழில் அல்லது ஏதாவது உதவிகள் செய்து கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது அதனால ஒரு 4 வருடம் - வயசு 61.
இதுக்கு மேல உயிரோடு இருந்தால் ஊருக்கு வந்து நல்ல வேலையா தேடிகிட்டு,புள்ளை குட்டிகளோடு சந்தோசமாக வாழ ஆரம்பிக்கலாம் ?
Tags: