மழையின் இரகசியம் மற்றும் மழை எவ்வாறு உருவாகின்றது?

எல்லாம் வல்ல ரஹ்மானின் அருள்கொடையான மழையை நாம் ரசிக்கிறோ ம் , மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது , 


நமக்கு வாழ் வாதாரமாக இருக்கிறது இதனை நாம் சிந்தித்து உணர்ந்திருக் கிறோமா ?

அல்லாஹ் குர்ஆனிலே எவ்வளவு தெளிவாக விளக்கியிருக்கிறான் என்பதை கொஞ்சம் படித்து பாருங்கள் ... அல் குர்ஆன் : 24:43. (நபியே!) நீர் பார்க்க வில்லையா?

நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து,

அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்;
கர்ப்ப காலத்தில் குடிக்கும் இந்த பானங்கள் பிரசவத்தில் ஏற்படுத்தும் சிக்கல்கள் !
இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க) ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்;

அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான்.

அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. மேற்காணும் இவ்வசனத்தில் (24:43) 'வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, 

பூமியில் பொழியப்படுகின்றது'என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது.

பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தி யிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.

இம்மேகங்களின் பிரமாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் இன்று கூட அறிந்திருக்க வில்லை. மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, 


ஒன்றோடொன்றாக இழுத்து இணைக்கப்பட்டு ஆலங்கட்டி (பனிக் கட்டி) தொகுப்புகளாக மாற்றப் படுகிறது.

இந்தப் பனிக் கட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல் 30,000 அடிகள் வரை உயர்கின்றது. 
30,000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும்.

இது உலகின் பெரிய மலையான இமய மலையின் உயரத்தை விட அதிகம். இவ்வளவு பெரிய மலையின் அளவுக்கு இந்தப் பனிக் கட்டிகள்,

செங்குத் தாக அடுக்கப்பட்டு, மின் காந்தத் தூண்டுதல் ஏற்பட்டவுடன், பனிக் கட்டி கள் உருகி தண்ணீரைக் கொட்டுகின்றன.
இது மழையின் இரகசியமாகும். மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத் தான் மேலே தந்திருக்கிறோம்.

இதில் கூறப்பட்டுள்ள செய்திகளான, மேகங்களை இழுத்தல், அவற்றை அடுக்கடுக்காக அமைத்தல், மலை உயரத்திற்குப் பனிக் கட்டிகள் செங்குத் தாக நிறுத்தப்படுதல்,

மின்னல் மூலம் மின்காந்தத் தூண்டுதல் ஏற்படுத்துதல் போன்ற அத்தனை விஷயங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக


வரிசையாக இந்த வசனம் (24:43) அப்படியே கூறுவதைப் பார்த்து பிரமித்துப் போகிறோம்.
சுப்ஹானல்லாஹ்.... மாற்று மத சகோதரர்களின் கவனத்திற்கு.... குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு காணப்படும் எண்ணற்ற சான்றுகளில் இதுவும் ஒன்று ...
Tags: