விபத்தில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்.. ஜெயலலிதா !

கடலில் விமானம் மூழ்கி உயிரிழந்த 3 கடலோர காவல்படை வீரர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
 விபத்தில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்.. ஜெயலலிதா !
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவ து:– 

சிறப்புமிக்க இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த இளம் வீரர்களான வித் யாசாகர், எம்.கே.சோனி, சுபாஷ் சுரேஷ் ஆகியோர்

கடந்த 8.6.2015 அன்று டோர் னியர் ரக சிறிய விமானம் மூலம் கடலோர காவல் கண் காணிப்பு ஒத்திகை பணியில் ஈடுபட்டி ருக்கும் போது விமான த்துடன் காணாமல் போயினர்.

நீண்ட நெடிய தேடுதலுக்கு பிறகு காணாமல் போன வீரர்களின் எலும்புகள் கடலுக்கு அடியில் இருந்து மீட்டெடுக் கப்பட்டு, உரிய பரிசோதனை களுக்கு

பின்னர் மூன்று இந்திய கடலோர காவல் படை வீரர்களின் மறைவு உறுதி செய்யப் பட்டிருப்பதை அறிந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா மிகுந்த மன வேதனை அடைந்ததோடு,
விபத்தில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்.. ஜெயலலிதா !
உயிரிழந்த அப்படை வீரர்களின் குடும்ப த்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாப த்தையும் தெரிவித்துக் கொண்டு,

அவ்வீரர் களின் குடும்பத்தி னருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப் படும் என்று 10.8.2015 அன்று அறிவித் திருந்தார்.

அதன்படி, பணியின்போது உயிரிழந்த இந்திய கடலோர காவல்படை வீரர் எம்.கே.சோனியின் மனைவி அம்ருதா சோனி யிடமும், சுபாஷ் சுரேஷின் மனைவி தீபலட்சுமி ரவிச்சந்திர னிடமும்,

வித்யா சாகரின் மனைவி டி.சுஷ்மா சார்பில் கமாண்டன்ட் சந்திரமவுலி மற்றும் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பி.ஷர்மா ஆகியோ ரிடமும்,
 விபத்தில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்.. ஜெயலலிதா !
தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சத்து க்கான காசோலை களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று (நேற்று) வழங்கி ஆறுதல் கூறினார்.

நிதி உதவியைப் பெற்றுக் கொண்ட இந்திய கடலோர காவல்படை வீரர்களின் குடும்ப த்தினர், முதல்– அமைச்சர் ஜெயலலிதா வுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Tags:
Privacy and cookie settings