சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் !

பெரும் பாலான மக்களை பரவலாக அவதிக் குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரை யின் அளவை அசாதார ணமான நிலைக்கு 



உயரச் செய்யும். வாழ் நாள் முழுவதும் தொடரக் கூடிய இந்நோய் இதர பல உடற்கேடு களையும் உண்டாக்கக் கூடியதாகும்.சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக் கூடிய ஒரே வழி, 

சீக்கிரமே இதனை கண்டு பிடித்து, தக்க தடுப்பு முறை களை மேற் கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டு மெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங் களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம்.

ஏனெனில் இத்தகைய மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும். இவ்வாறு உடலில் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படு கிறதா என்று கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை சீக்கிரமே அறிந்து கொள்ளலாம்.

அவ்வாறு அறிந்து கொண்ட பின், தகுந்த மருத்துவ சிகிச்சை மேற் கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்க க்கூடிய விபரீத விளைவு களை தவிர்க்கலாம். இப்போது சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறி களைப் பற்றி தெரிந்து கொள்வோமா!

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படு மாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக் கூடும். சர்க்கரை அளவுகளில் ஏற்படக் கூடிய உயர்வு, 

இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்த்தக் கூடியதான ஓஸ்மொலா லிட்டியை அதிகரிக்கும்.



இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்யும். இதனாலேயே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது.

அதீத தாகம்

சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு எழும். உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப் படுவதினால், அந்த நீர் இழப்பை ஈடுகட்ட வேண்டியது அவசியமாகிறது.

பொதுவாக, அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டு அவஸ்தை களும் இருப்பின், அது சர்க்கரை வியாதி இருப்ப தற்கான உறுதியான அறிகுறி களாகக் கருதப்ப டுகின்றன.

மங்கலான கண் பார்வை

அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளி யின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்று வதினால், அது அவரின் கண் பார்வையை மங்கச் செய்யும். மேலும் இது கண்களின் கூர்ந்து நோக்கும் திறனை பாதிக்கும்.
சர்க்கரை வியாதிக்கு சரியான மருத்துவ கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில், அது கண் பார்வை குறைவை உண்டாக்கும். ஏன் சில சமய ங்களில் கண் பார்வை யை கூட பறித்து விடும்.

எடை குறைதல்

இது டைப்-1 சர்க்கரை நோயின் மிகப் பொதுவான அறி குறியாகும். உயிரணுக் களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்கா ததனால், உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து எடுத்துக் கொள்ள தலைப்படும். இதனால் தான் எடை குறைவு

சோர்வு

சர்க்கரை நோயா ளியின் உடல், சர்க்கரை யை உபயோகித்து தனக்குத் தேவைப் படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லை களுக்கு ஆளாக நேரிடும். 

உயிரணுக் களால், இரத்த ஓட்டத்தில் இருக்கக் கூடிய குளுக்கோஸை, இன்சுலினின் உதவி யின்றி உறிஞ்ச இயலாது. அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து காணப்படும்.

கைகள் மரத்துப் போதல்

இரத்தத்தில் சர்க்கரை யின் அளவு அதிகரிப் பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத் தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும். சர்க்கரை நோய் நீண்ட காலம் வரையில் கண்டு பிடிக்கப் படாமலே இருக்கும் பட்சத்தில், 



அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் அல்லது உணர்வுகள் ஏதுமின்றி மரத்துப் போகச் செய்யும். சிராய்ப்புகள், வெட்டுக் காயங்கள் போன்றவை மெது வாகவே குணமாகும்.

இது சர்க்கரை நோய்க்கான மிகப் பொதுவான அறி குறிகளுள் ஒன்றாகும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை யின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், உடலின் நோய் எதிர்ப்பு மையமானது,

சீராக இயங்கும் ஆற்றலை இழந்து விடும். திசுக்களில் காணப்படும் சீரற்ற நீர் சமன்பாடு, வெட்டுக் காயங்கள் மற்றும் புண்கள் குணம டைவதை தாமதப் படுத்தும்.

சரும வறட்சி

புறநரம்பு மண்டல கோளாறு காரணமாக, வியர்வை சுரப்பியின் சுழற்சி மற்றும் இயக்கம் பாதிக்கப் படும். இதன் காரணமாக மேற்புற சருமம் வறட்சி யடைந்து, அரிப்பு ஏற்படும்.

எப்போதும் பசி இருப்பது போல் தோன்றும்

நீங்கள் எவ்வித கடின உடற்ப யிற்சியை மேற் கொள்ளாத போதும் அல்லது நிறைவாக சாப்பிட்டி ருந்தாலும் கூட, எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறி தான். 


ஏனெனில் சர்க்கரை நோய், குளுக்கோஸை உயிரணுக் களுக்குள் செல்ல விடாமல் தடுக்கும்.

இந்நிலையில் நீங்கள் உண்ணும் உணவை ஆக்க சக்தியாக மாற்றும் திறன் உங்கள் உடலுக்கு இல்லாமல் போய் விடும். அதனால் உங்கள் உயிரணு க்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை உருவாகும்.

வீக்கமடைந்த ஈறுகள்

கிருமிகளில் பெரும் பாலானவை வாய் மூலமாகவே உடலுக்குள் நுழை கின்றன. சர்க்கரை நோய் இத்தகைய கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை குறைக்கும்.



இந்நோய், வலியும் வீக்கமும் மிகுந்த ஈறுகள், தாடை எலும்புகளின் தேய்மானம் மற்றும் நாளடைவில் பற்சிதைவு போன்ற வாய் தொடர்பான ஏராளமான பிரச்சனை களை உண்டாக்கும்.

சில சமயம் வாய்க்குள் புண் களையும் உண்டாக்கும். சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
Tags:
Privacy and cookie settings