ரஜினி மீது நடவடிக்கை எடுப்பேன்.. பைனான்சியர் பேச்சு !

பைனான்சியர் முகுன்சந்த் இயக்குநரும், தனுஷின் அப்பாவும் , ரஜினியின் சம்மந்தியுமான கஸ்தூரி ராஜா மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
ரஜினி பெயரைச் சொல்லி பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக முகுன்சந்த் கொடுத்த வழக்கில் கோரப் பட்டுள்ளது. இதற்கு ரஜினி தரப்பிலிருந்து தற்போது பதில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

அதில் , எனது பெயரைச் சொல்லி என்னிடம் பணம் பறிக்க பைனான்சியர் முகுன்சந்த் முயற்சி செய்வதாக மனுவில் ரஜினி தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து முகுன்சந்த் மீடியாவிற்கு அளித்த பேட்டியில்,நான் ரஜினியிடம் பணம் பறிக்க முயற்சி செய்வதாக மனு தாக்கல் செய்துள்ளனர். அப்படி நான் என்றுமே நினைத்ததில்லை.

கஸ்தூரி ராஜாதான் ரஜினியின் பெயரைச் சொல்லி என்னிடம் கடன் பெற்றார். ரஜினி அவரைத்தான் கண்டிக்கவேண்டுமே தவிர என்மீது அவதூறு சொல்வது சரியில்லை.

நான் தரவில்லை எனில் என் சம்மந்தி கொடுப்பார் என கஸ்தூரி ராஜா தான் கூறினார். என் மீது தாக்கல் செய்த மனுவை உடனே வாபஸ் பெற வேண்டும் இல்லையேல் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பேன் என பைனான்சியர் முகுன்சந்த் பேசியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings