பாலை எப்படிச் சாப்பிடுவது?

பசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடிப்பது நல்லது. அது சுலபமாக ஜீரணமாகி விடும். கறந்த சூடு ஆறிய பிறகு, அந்தப் பால் கடினமானதாகி விடும். 
பாலை சாப்பிடுவது எப்படி?


அதன் பின் அப்படியே குடித்தால் செரிக்காது. கூடவே, மார்பில் கோழை சேர்ந்து, சளித் தொந்தரவு வரும். எனவே, அதன் பின் கொதிக்க வைத்து அருந்துவதே நல்லது!

காலையில் வெறும் வயிற்றில் பால் சாப்பிடுவது நல்லது. அதன்பின், பசி நன்றாக எடுத்த பிறகுதான் டிபன் சாப்பிட வேண்டும். இருமலோ, தொண்டையில் கிச்…கிச் தொந்தரவோ உள்ளவர்கள், பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டுச் சாப்பிடலாம்.

பால் சாப்பிட்ட பிறகு, புளிப்பான பழங்கள் எதுவும் சாப்பிடக் கூடாது. இரவில் இட்லி, புளிப்பான சாம்பார் என டிபன் சாப் பிட்டபிறகு, உடனே பால் சாப்பிடுவதும் ஆபத்தான பழக்கம்!

பாலில் ரெடிமேட் சத்து பவுடர்களைக் கலந்து குழந்தை களுக்குக் கொடுக்கும் பழக்கம் இப்போது அதிகமாகி இருக்கிறது. குழந்தை களுக்கு ஊட்டம் தர, இந்தச் சத்து பானங்கள் அவசியம்என நினைக்கிறார்கள் பலர்.

பாலில் இந்த பவுடர்கள் சேர்த்த பிறகு, அதன் கடினத் தன்மை மேலும் அதிகரிப்ப தால் அது செரிமானம் ஆகக் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே, அதற்கேற்றாற் போல, மற்ற சாப்பாடு அயிட்டங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

காலை டிபன் கூடவோ, இரவு டிபன் கூடவோ இந்தப் பானத்தைத் தருவதைத் தவிர்க்க வேண்டும். அதிகாலை அல்லது மாலை என உணவு வேளைக்கு இடைப்பட்ட நேரங்களில் தான் குடிக்கத்தர வேண்டும்.
பாக்கெட் பால்


‘வெளுத்த தெல்லாம் பாலுனு நம்பிடுவேன்’ என அப்பாவி களைப் பற்றிக் குறிப்பிடு வார்கள். இப்போது வெளுப்பாக வரும் எதையுமே பால் என்று நம்பிவிடக் கூடாது.

முன்பெல்லாம் ‘பால் சாப்பிட்டால் செரிக்காது’ என்ற ஒரே பிரச்னை மட்டும் தான் இருந்தது. இப்போது ‘பால் அலர்ஜி’ என்ற புதுப் பிரச்னையும் சேர்ந்து கொண்டு விட்டது!

பசு மனசு நிறைந்து கொடுக்கும் பால்தான் அருமருந்து. இப்போது ஹார்மோன் ஊசிகளை எல்லாம் போட்டு, பசுவின் மடியிலிருந்து பாலை உறிஞ்சி எடுக்கி றார்கள். பாலைத் தரும் பசுவைப் புனிதமாக கருதுவது இந்திய கலாசாரம்.

சரி… தயிர், வெண்ணெய், நெய் பற்றி… பால்காரர் எடுத்து வருவதும், பாக்கெட் பாலும் தான் பெரும் பாலான நகரங்களில் கிடைக்கின்றன. அது பசும்பாலா, எருமைப் பாலா அல்லது இரண்டும் கலந்ததா… எதுவுமே தெரியாது!

பலர் இந்தப் பாலை வெறுமனே பொங்கும் வரை கொதிக்க வைத்தால் போதும் என நினைத்து, பொங்கி நுரை கிளம்பி வந்ததுமே அடுப்பில் இருந்து இறக்கி விடுகிறார்கள்.

இது தவறு! பால் கொதித்தால் மட்டும் போதாது… ஒரு பங்கு பாலுக்கு நான்கு பங்கு தண்ணீர் ஊற்றிப் பாலைக் காய்ச்ச வேண்டும்.

‘அது தான் ஏற்கெனவே பால்காரரே தண்ணீரைக் கலந்து விடுகிறாரே’ என ஆதங்கப் படுகிறவர்கள் வேண்டு மானால் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர் சுத்தமாகச் சுண்டி, பழைய ஒரு பங்கு அளவு ஆகும் வரை கொதிக்க விட வேண்டும். (ஆனால், இன்றைய அவசரயுகத்தில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்கிறீர்களா?
பாலுக்கு நான்கு பங்கு தண்ணீர்


இது தான் உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயம்!) கொதித்ததும் ஸ்டவ்வை நிறுத்தி விடக் கூடாது.

ஐந்து முதல் பத்து நிமிடங்கள் லேசான சூட்டில் அப்படியே வைத்திருந்து, அதன் பிறகே ஸ்டவ்வி லிருந்து பாலை எடுக்க வேண்டும். ஆனால், அதற்காகப் பாலை எந்நேரமும் அடுப்பிலேயே கொதிக்க வைப்பதும் தவறு.

டீக்கடைகளில் எப்போதும் அடுப்புச் சூட்டிலேயே இருக்கும் பால் வயிற்றுக்கு ஏகப்பட்ட உபாதைகள் தரும்.

மேலும் சில தனியார் பால் நிறுவனங்கள், பாலில் பல்வேறு ரசாயனங் களையும் கலந்து விற்பனை செய்கின்றன. எனவே, நல்ல தரமான பால் நிறுவனங்களின் பொருட்களை மட்டும் வாங்குவது உடலுக்கு நல்லது.
Tags: