தீயில் கருகிய பெண்.. கடன் தொல்லையால் தற்கொலை !

வலங்கைமானில் தீயில் கருகிய நிலையில் பெண் ஒருவர் பிண மாக கிடந்தார். இது பற்றி போலீசார் நடத் திய விசாரணயில் அந்த பெண் கடன் தொல்லை காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அம்பலமாகி யுள்ளது.
தீயில் கருகிய பெண்.. கடன் தொல்லையால் தற்கொலை !
தீயில் கருகிய நிலையில் பெண்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி கம்மாள தெருவை சேர்ந்தவர் தனபால் (வயது 55). இவருடைய மனைவி ராணி (45). 

இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து கோவிந்தகுடி கிராம நிர்வாக அதிகாரி நேசமணி வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். 

இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலங்கைமான் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடன் தொல்லையால் தற்கொலை

இது பற்றி வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப் பட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் ராணி ஏலச்சீட்டு நடத்தி வந்ததும், இதனால் ஏற்பட்ட கடன் தொல்லை காரணமாக சம் பவத்தன்று அருகே இருந்த வாய்க்காலுக்கு சென்று மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் அம்பலமாகி யுள்ளது.

கடன் தொல்லை காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்தது வலங்கைமான் கோவிந்தகுடி பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
Privacy and cookie settings