இந்தியா சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை: சுரேஷ் ரெய்னா

இந்தியா-வங்கதேசம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது.


வங்கதேச அணி 49.4 ஓவர்களில் 307 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46 ஓவர்களில் 228 ஓட்டங்களுக்கு சுருண்டது.

வங்கதேசத்திடம் 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறியதாவது, இந்த தோல்வி எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த ஆட்டத்தில் அவர்கள் எங்களை விட நன்றாக ஆடினார்கள் என்பது உண்மை தான்.

ஆனாலும் நாங்கள் இன்னும் சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். ஆனால் நாங்கள் வித்தியாசமான லெவலில் இருக்கிறோம்.

ஒரு போட்டியில் தோற்றதற்காக, இந்த அணி மோசமானது என்று சொல்லி விட முடியாது. இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ள உள்ளன.

சரிவில் இருந்து வலுவாக மீள எங்களது முழு சக்தியையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.
Tags: