உலக அழிவினை எதிர்த்து பாதுகாக்கப்படும் பொருள்கள் !





உலக அழிவினை எதிர்த்து பாதுகாக்கப்படும் பொருள்கள் !

Anonymous
By -
நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக, வட துருவத்தில் ‘ஸ்வால்பார்ட்’ (Svalbard) எனும் தீவு ஒன்று உண்டு. எங்கு பார்த்தாலும் மலைகளும், அவற்றில் நிறைந்திருக்கும் பனிகளுமாகவே அந்த இடம் எப்போதுமே காட்சியளிக்கும். 


இந்த இடமும் டென்வெர் விமான நிலையத்தைப் போல மிக முக்கிய இடமாக இப்போது இருக்கிறது. அது என்ன தெரியுமா…? சொல்கிறேன்……!

உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகிய வற்றின் விதைகளும் (Seeds),

கிழங்குகளும், தண்டு களும் கோடிக் கணக்கில், டன் டன்னாக அங்கு பாதுகாப்பாக சேர்த்து வைக்கப் படுகிறது.

ஒன்பது மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டு, மலைகளைக் குடைந்து, நிலத்தடிச் சுரங்கமாகக் கட்டப் பட்ட கட்டடத்தில் இந்த விதைகள் பாதுகாக்கப் படுகின்றன.

உலகம் அழிந்தாலும், இவற்றிற்கு எந்தப் பாதிப்பும் வரமுடியாத அமைப்பில் கட்டடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. மாதம் ஒன்றுக்கு ஒன்றரை இலட்சம் செலவு செய்து குளிர் பதனப் படுத்தப்பட்டு இவை பாதுகாக்கப் படுகின்றன.

உலகத்தில் அழிவு ஏற்படும் பட்சத்தில், அதன் பின்னர் உருவாகும் மாற்று உலகத்தில், அழிவிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மீண்டும் மரம் செடிகளை உற்பத்தி செய்ய இந்த ஏற்பாடு செய்யப் படுகிறது.


உண்ண உணவின்றிப் பல நாடுகளில் மக்கள் உயிர்களை விட்டுக் கொண்டிருக்கும் போது,

இல்லாத அழிவு ஒன்றை எதிர் பார்த்து இவ்வளவு செலவில் இப்படி ஒரு பாதுகாப்பு வைப்பகம் எதற்காக? 

இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏன் வட துருவத்தில் செய்யப்பட வேண்டும்?

பூமியின் வட, தென் துருவத்திற்கான அச்சு தனது தடத்திலிருந்து இடம் மாறினால் (Pole Shift), தற்சமயம் வெப்ப வலயப் பிரதேசமாக இருக்கும் இடங்கள், குளிர்ப் பிரதேசங் களாகவும்,

குளிர்ப் பிரதேசங்கள் வெப்ப வலயப் பிரதேசங் களாகவும் மாறும் ஆபத்து உண்டு என்று விஞ்ஞானிகள் அறி வுறுத்துவது ஏனோ ஞாபகத்திற்கு வரவில்லையா?

உலகம் அழியும் ஒரு நிலை ஏற்படுமாயின், மரங்களைப் பாதுகாக்கும் இடம் வெப்ப வலயப் பிரதேசமாக மாறி அங்கு மரங்களை உற்பத்தி செய்யக் கூடியதாக மாறலாம்.


அழிவிலிருந்து காப்பாற்றப்படும் சில மனிதர்களால், வெப்ப வலயமாக மாறியிருக்கும்

இந்த நோர்வே பகுதியில் மீண்டும் ஒரு மனித நாகரீகத்தை உருவாக்கும் திட்டம் யாராலும் உருவாக்கப் பட்டதா?

மனிதர்கள் அங்கே! மரங்கள் இங்கே! என்ற இந்த புத்திசாலித் தனமான செயல்களை எல்லாம் இவர்களுக்குச் செய்வதற்கு கட்டளை யிட்டவர்கள் யார்?

இவை யெல்லா வற்றையும் யார் அமைக்கிறார்கள்? உலகப் பணக் காரர்களையும், அரசியல் வாதிகளையும், பெரும் சக்தி வாய்ந்தவர் களையும் எந்த சக்தி ஒன்றி ணைக்கிறது?

நிச்சயமாக இதை ஒரு பலமான சக்தி இருந்து கொண்டு தான் இணைக்க வேண்டும் அல்லவா? அவர்கள் யார் என்பதையும், அவர்களால் இன்னும் என்ன என்ன சதிவலைகள் பின்னப் படுகின்றன?
Tags: