சுகாதாரமான நல்ல இறைச்சி வாங்குவது எப்படி ?





சுகாதாரமான நல்ல இறைச்சி வாங்குவது எப்படி ?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
சென்னை ரயில்களில் வந்த அந்தப் பெட்டிகளைப் பார்த்த போது, அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். முடை நாற்றம் எடுக்க... அழுகிய நிலையில் இருந்தது இறைச்சி.

அடுத்தடுத்த நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சரக்கு ரயில் பெட்டிகளைச் சோதித்த போது மேலும் பல பெட்டிகள் சிக்கின. இப்படிக் கைப்பற்றப்பட்ட இறைச்சியின் மொத்த அளவு எவ்வளவு தெரியுமா? 

உறவின் போது ஆண்களுக்கு வெறுப்பை தரும் பெண்களின் இந்த செயல்கள் !

ஒன்றரை டன். எங்கிருந்து வருகிறது. இந்த இறைச்சி என்பது குறித்து அதிகாரிகளுக்கு இதுவரை துல்லியமாகத் தெரிய வில்லை. ஆனால், அது எங்கே போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது... 

உங்களுடைய வயிறு! ஆமாம். தமிழகத்தில் ஆட்டிறைச்சியின் விலை 400 ரூபாயைத் தாண்டி விட்டது. வெளி மாநிலங்களில் இருந்து அது 200 ரூபாய்க்குள் கிடைத்தால் லாபம் தானே?

இந்த லாப வெறி தான் சாலையோர உணவகங்களில் இருந்து பெரிய உணவு நிறுவனங்கள் வரை இது போன்ற சட்டத்துக்குப் புறம்பான, சுகாதாரமற்ற இறைச்சியை வாங்க வைக்கிறது.

குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்யணும்?

இறைச்சி சாப்பிடும் போது நம்மை நாமே எப்படி பாதுகாத்துக் கொள்வது  ?

பொதுவாக, ஆட்டுத் தொட்டியில் வெட்டப்படும் இறைச்சியை நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பதப்படுத்தாமல் வைத்திருந்தால், இறைச்சி அழுக ஆரம்பித்து விடும். 
சுகாதாரமான நல்ல இறைச்சி வாங்குவது எப்படி ?

குளிர் பதனப் பெட்டிகளில் மைனஸ் 15 முதல் மைனஸ் 18 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு இறைச்சியை ஒரு வாரம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

பொதுவாக, ஆடு மாடு உடலில் கிளாடீரியம், ஸ்டப்லா காகஸ், எக்கினோ காகஸ், ஈகோலி, ஆஸ்காரிஸ் போன்ற ஏராளமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன.

ஆடு மாடு இறந்ததும் இவை அதிக அளவில் பல்கிப் பெருகி அதைச் சிதைக்க ஆரம்பிக்கின்றன. இதனால், இறைச்சி அழுக ஆரம்பிக்கிறது. மேலும், பூஞ்சைத் தொற்றும் ஏற்படலாம்.

எனவே, கால்நடைகளை வெட்டிய அடுத்த சில மணி நேரங்களில் சமைத்துச் சாப்பிடுவது தான் நோய்க் கிருமிகளைத் தவிர்க்க ஒரே வழி. 

கெட்டுப்போன இறைச்சியில் உள்ள கிருமிகள் மனித உடலுக்குள் செல்லும் போது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ரத்தக் குழாய்கள் வழியே சென்று மூளையைப் பாதிக்கும். ஹைடாடிட் என்ற ஒட்டுண்ணியானது கல்லீரலுக்குச் சென்று அங்கு கட்டியை உருவாக்கும்.

இண்டக்சன் ஸ்டவ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

நுரையீரலை அடையும் கிருமிகள் சுவாசப் பிரச்னை, இடைவிடாத இருமல், சளி போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும். தசைகளில் தங்கும் கிருமிகள் தீராத வலியை ஏற்படுத்தும். 

இது தவிர, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவையும் ஏற்படலாம். பாதுகாப்பு இல்லாத இறைச்சியை ஈக்கள் மொய்க்கும் போது காலரா போன்ற நோய்கள் ஏற்படும்

பாதுகாப்பான இறைச்சியை எப்படிப் பார்த்து வாங்குவது?
சுகாதாரமான நல்ல இறைச்சி வாங்குவது எப்படி ?

1. நீங்கள் செல்லும் இறைச்சிக் கடை தினந்தோறும் திறக்கக் கூடியதா?

2. அந்தக் கடைக்கு அரசு உரிமம் உள்ளதா?

3. கடையில் சுத்தமான சூழல் உள்ளதா?

4. இறைச்சி பக்கத்தில் நிற்கும்போது மொஞ்சை (கவுச்சி) வாடை அடிக்கக் கூடாது.

5. இறைச்சி நிறம் மிகவும் சிவப்பாகவோ, மிக அதிகம் வெளுத்துப் போயோ இருக்கக் கூடாது. இறைச்சி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.
தோல் அழற்சி மற்றும் அறிகுறிகளும் காரணங்களும்? #Eczema
6. கறியைத் தொட்டுப் பார்த்தால் ஜில் என இருக்கக் கூடாது. அப்படி ஜில் என இருந்தால் அது குளிர்பதனப் பெட்டியில் வைத்த முந்தைய நாள் இறைச்சியாக இருக்கலாம்.
Tags: