உங்கள எப்படி கூப்பிடுறது சொல்லுங்க?





உங்கள எப்படி கூப்பிடுறது சொல்லுங்க?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
அஞ்சலிலியை எதுக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் அழைத்து வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. அவளுக்கு உதவி செய்கிறேனா, பிரச்சனை கொடுக்க போகிறேனா என்பது கூட புரியவில்லை.
அவள் கேட்டாள் என்பதற்காக அவளுக்காக செய்கிறேன். "என்ன கல்யாணம் பண்ணிக்க தான் கூட்டிட்டு போறீங்களா ?"
இதை கேட்டதும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. இருந்தாலும் அவளின் உடல் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. பதினாறு, பதினெழு வயது தான். யாராக இருந்தாலும் அவளை திருமணம் செய்து கொள்ள ஆசை வரும்.

"எதுக்கு சிரிக்கிறீங்கனு தெரியது. நா கல்யாணத்த பத்தி ஆசப் படக்கூடாதா ?"

 "அப்படியில்ல. சும்மா தான் சிரிச்சேன்."

"நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது” என்று சொல்லி, கொஞ்ச நேரத்தில் “உங்கள எப்படி கூப்பிடுறது ?" என்றாள்.

என்னுடன் வந்ததில் இருந்து பல முறை இந்த கேள்வியை கேட்டு விட்டாள். அவளாகவே அதற்கு பதில் சொல்லிக் கொண்டாள். நான் எதுவும் பேசவில்லை. சொல்லவும் விருப்பமில்லை.

"உங்க பேரு சங்கர் தானே. சங்கர் கூப்பிடட்டா !! " நான் அவளை பார்த்து முறைத்தேன். எனக்கு இருபத்தியெட்டு வயதாகிறது. என்னைவிட சிறிய பெண் பெயர் சொல்லி அழைப்பதை என்னால் ரசிக்க முடியவில்லை.

"அண்ணானு கூப்பிட முடியாது. சார் சொன்னா உங்களுக்கும் மத்தவங்களுக்கும் வித்தியாசம் இருக்காது. எப்படி கூப்பிடட்டும் நீங்களே சொல்லுங்க ?"
"நீ எதுக்கு என்ன கூப்பிடனும். உன்ன பஸ் எத்திவிட்டுறேன். அதுக்கப்புறம் நீ யாரோ நா யாரோ"

"அப்போ எதுக்காக எனக்கு எச்.ஐ.வி டெஸ்ட் எல்லாம் எடுத்தீங்க...?" அஞ்சலி கேட்டாள்.

"சங்கர் ! ஃப்ரீயா இருக்கியாடா?" மதன் குரலில் ஓர் எதிர்பார்ப்பு கலந்து இருந்தது.

"ஃப்ரீயா தான்டா இருக்கேன் ! "

"சரஸக்கா வீட்டுல புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கு, சூப்பர்  கம்பேனி தரா. நானே ரெண்டு வாட்டி போனேன். நீ வரீயா."

"போடா ! நானே டென்ஷன்ல இருக்கேன்."
"என்னாச்சு ?"

"ரெண்டு வாரம் முன்னாடி பாண்டிக்கு போகும் பொது சூப்பர் பிகர் கம்பேனி கொடுத்தா. காண்டம் கட்டானது கூட தெரியாமா பண்ணியிருக்கேன். அப்போ தெரியல. இப்போ நினச்சா பயமா இருக்கு."

"ஒண்ணுமாகாது. இப்போ எல்லாம் நம்பல விட பொண்ணுங்க உஷார். டென்ஷனாகாத. சரஸக்கா வீட்டுல இருக்குற பொண்ண இரண்டு வாரத்துல சிங்கப்பூர் பேக்-அப் பண்ணுறாங்க. ஒரு வாட்டி ஜாலிய இருந்துட்டு வரலாம்."
சங்கர் மனசு சபலப்பட்டது. இரண்டு வாரம் முன்பு நடந்தை நினைத்து கிடைக்க வேண்டிய சந்தோஷத்தை விட மனமில்லை.

 "சரிடா போகலாம்."

"அக்கா... அக்கா..."

"போடா தேவுடியா மகனே. இன்னொரு வாட்டி அந்த பொண்ண பத்தி பேசிட்டு இங்க வந்த உன்ன கொன்னுடுவேன்."

சரஸ்வதி அக்கா கோபமாக போனை வைத்தாள். 'அக்கா' அப்படி சொல்லி பழகிவிட்டது. அந்த வார்த்தைக்கு அவள் தகுதியற்றவள். மாமா வேலை செய்பவள். இருந்தாலும்,

என்னை போன்ற திருமணமாகாவதர்களின் உடல் பசியை தீர்த்து வைக்க பல பெண்களை வைத்திருக்கிறாள். அதற்காகவது அவளை 'அக்கா' என்று அழைக்க வேண்டியதாக இருக்கிறது.

அங்கு இருக்கும் எல்லா பெண்களை நிர்வாணமாக பார்த்திருக்கிறேன். ஆனால், அஞ்சலியிடம் நிர்வாணத்தை மீறி என்னை பாதித்திருக்கிறது. கண்டிப்பாக காதல் இல்லை.

இப்போது, அதற்கு தகுதியானவன் நான் இல்லை. ஆனால், என்னால் அவள் பாதிக்கப்பட்டிருக்கிறாளா என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.

"இன்னொரு தபா அந்த சங்கர் பய வந்தா சேத்துகாதீங்க..." கோபமாக லோகுவிடம் சொல்லிவிடு சாரஸ்வதி தனது இரண்டு அடியாட்களோடு சிங்கப்பூர் பார்ட்டியை பார்க்க வெளியே சென்றாள்.

எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. சரஸ்வதி அக்காவை சந்திக்க அவள் இடத்திற்கே சென்றுவிட்டேன்.

"டேய் ! உன்னதா அக்கா வர வேண்டாம் சொல்லிட்டாங்கள. அப்ப எதுக்கு மறுதாப வந்த..." லோகு என்னை வழி மறித்தான்.
"இல்ல அண்ண. போன வாட்டி பணம் தரல. அந்த கோபம் தான் அக்காவுக்கு. இதோ பாருங்க போன வாட்டி வந்ததும் சேர்த்து இப்போ பணம் கொண்டு வந்திருக்கேன்."
"சரி... சரி.. கொடு." என்று பணத்தை வாங்கி லோகு எண்ணி பார்த்தான்.

"எதுக்கு 5000 அதிகமா கொடுத்திருக்க."

"அந்த அஞ்சலி பொண்ண ஒரு நாள் கூட்டிட்டு பொய் ஜாலிய இருக்கலாம் தான்."

"என்னது ஓவுட்டிங்க.. அப்போன 10000 ரூபாய் அச்சே."

"என்ன அண்ணே ! ரெகுலர் கஸ்டமர் அட்ஜஸ்ட் பண்ணமாட்டிங்களா..?"

"வேணும்னா இங்கையே இராத்திரி புல்லா இரு. வெளியே அனுப்ப முடியாது"

முடியாத காரியம். எப்படியாவது அஞ்சலியை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும். வேறு வழியில்லை அவன் கேட்கும் பணத்தை கொடுத்தேன். இது வரை செய்து வந்த பாவத்திற்கு அது பிராயிசித்தம்.

"என்ன சார் ஹோட்டல்லுக்கு போகலையா. இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க ?"

"ஒரு டெஸ்ட் எடுத்துட்டு போகலாம்..." என்றேன். அஞ்சலி உள் மனதில் சந்தோஷம்.

"அப்போ என்ன காப்பாத்த போறீங்களா...?"

"உனக்கு ப்ளட் டெஸ்ட் தான் கூட்டிட்டு வந்தேன். நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காத."
அஞ்சலி உள்ளுக்குள் நம்பிக்கையிருந்தது. எப்படியாது இந்த நரகத்தில் இருந்து விடுபடுவோம் என்று.

சங்கர் தன்னை காப்பாற்றுவான் என்று நம்பினாள். தன்னை திருமணம் செய்துக் கொண்டால் சரி. வைத்துக் கொண்டாலும் சரி. பிரச்சனையில்லை. வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது. அவ்வளவு தான்.

ஒரு வேளை சரஸ்வதி மாதிரி வேறு யாரிடமாவது தன்னை விற்றுவிட்டால் என்ன செய்வதென்று யோசித்தாள். அது பிரச்சனையாக இருக்க போவதில்லை. இப்போது வாழ்கிற வாழ்க்கையை இன்னொரு இடத்தில் வாழப்போகிறோம்.
சேது பந்த சர்வாங்காசனம் எப்படி செய்வது?
ஆனால், சரஸ்வதி வீட்டில் இருந்தால் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும். தனது இளமையும், பணத்தை முழுவதுமாக அபகரிக்கப்படும். மீண்டும் இந்தியாவுக்கு வருவது, தனது அம்மாவை தம்பியை பார்ப்பது நடக்காத காரியம்.

அதனால், தன்னிடம் வரும் கஸ்டமர்களை ஒவ்வொரிடம் இங்கிருந்து அழைத்து செல்லும் படி கெஞ்சுவாள். அவர்கள் சொல்லுவதை எல்லாம் செய்வாள்.

ஆனால், அவளால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. சரஸ்வதிக்கு நெருக்கமானவர்கள் அவள் சொன்னதை போட்டுக் கொடுத்துவிடுவார்கள். ஒரு சிலர் அவள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் முடிந்தவரை அவளை அனுபவிப்பார்கள்.

இப்போதைக்கு அஞ்சலிக்கு ஒரே வழி சங்கர் நம்பித்தான் ஆக வேண்டும். ப்ளேட் டெஸ்ட் ரிஸல்ட் வந்தது. சங்கர் நிம்மதி பெருமூச்சு விட்டான். அஞ்சலியை தனது பைக்கில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்றான்.

"அறிவுக்கெட்ட முண்டோம். அந்த சங்கர இங்க சேக்காத சொன்னா. ஒக்காலி அவன் கூட அனுப்பி வச்சிருக்க..."

"இல்லக்கா ! அவ போன வாடி தர வேண்டிய பணத்த கொடுத்தான்."

"ஓ....தா.. அவள சிங்கப்பூர் பார்ட்டிக்கு இரண்டு லட்சம் விலை பேசி வச்சிருக்கேன்"

"எங்கக்கா போகப் போறான். ஆச தீர்ந்ததும் இங்க வந்து விட்டாகனும்."

"மயிரு... அவன் ஆசப்பட்டு கூட்டிட்டு போகல. காப்பாத்தனும் கூட்டிட்டு போயிருக்கான். அவன் பிரண்ட் மதன் தெரியும்ல."

 "தெரியும்க்கா..."

"அவன வச்சி அந்த பையன தேடுங்க.. பஸ் ஸ்டெண்ட், ரயில்வே ஸ்டேஷன் இருக்குற நம்ப ஆளுங்க கிட்ட சொல்லிவை. ஓடுகாலி சிறுக்கி இன்னைக்கு இராத்திரிக்குள்ள வந்தாகனும்"

"உங்கள என்ன கூப்பிடுறது?" அஞ்சலி கேள்விக்கு எப்படி சொல்வது.

அண்ணா' என்று சொல்ல முடியாது. எங்கள் உறவு அப்படியில்லை. பண்ணிரண்டு வயது இடைவேளை உள்ள ஆண், பெணுக்கு அண்ணன், தங்கை தவிர
ஆரோக்கியமாக செயல்பட உணவே காரணம் !
வேறு நாகரிகமாக உறவு சமூகத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். வண்டி கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் வந்து நின்றது.

"என்ன கல்யாண பண்ணிக்க தான் கூட்டிட்டு போறீங்களா ?"

"எதுக்கு சிரிக்கீறீங்கனு தெரியது. நா கல்யாணத்த பத்தி ஆசப் படக்கூடாதா ?" 

"அப்படியில்ல. சும்மா தான் சிரித்தேன்."

 "நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது” என்று சொல்லி, கொஞ்ச நேரத்தில் “உங்கள எப்படி கூப்பிடுறது ?" என்றாள். 

"உங்க பேரு சங்கர் தானே. சங்கர் கூப்பிடட்டா" நான் அவளை பார்த்து முறைத்தேன். 
எனக்கு இருபத்தியெட்டு வயதாகிறது. என்னைவிட சிறிய பெண் வைத்து அழைப்பது என்னால் ரசிக்க முடியவில்லை. 

"அண்ணானு கூப்பிட முடியாது. சார் சொன்னா உங்களுக்கும் மத்தவங்களுக்கு வித்தியாசம் இருக்காது. எப்படி கூப்பிடட்டும் நீங்களே சொல்லுங்க ?" 

 "நீ எதுக்கு என்ன கூப்பிடனும். உன்ன பஸ் எத்திவிட்டுறேன். அதுக்கப்புறம் நீ யாரோ நா யாரோ" 

"அப்போ எதுக்காக எனக்கு எச்.ஐ.வி டெஸ்ட் எல்லாம் எடுத்தீங்க...?" 

அஞ்சலி கேட்டாள். என்னால் பதில் கூற முடியவில்லை. பதில் கூற நேரமும் இல்லை. சரஸ்வதி அக்காவுக்கு பஸ் ஸ்டெண்டிலும், ரயில் நிலையத்திலும் ஏஜெண்ட்டுகள் அதிகம்.

நிறைய கஸ்டமர்கள் இங்கிருந்து தான் பிடிப்பாள். நாங்கள் வந்திருபது கண்டிப்பாக இந்நேரம் அவளுக்கு தெரிந்திருக்கும். அதற்குள், அஞ்சலியை பாதுகாப்பாக ஒரு பஸ்ஸில் ஏற்றி விட வேண்டும்.

"நீ எந்த ஊருக்கு போக ஆசைப்படுற..."

"உங்க ஊருக்கு தான்."

"நா உன் கூட வரல. வரவும் முடியாது. இந்தா பணத்த வச்சிக்கோ.." என்று என் கையில் இருக்கும் ஐயாயிரத்தை தந்தேன்.
"இந்த தொழில விட்டு நல்ல படியா வேற வேலைய பாத்துக்கோ. சரஸ்வதி அக்கா மாதிரியான ஆளுங்க உன் வயசையும், உடம்பையும் எப்படி பணம் பண்ணலாம் தான் யோசிப்பாங்க..."

"உங்களுக்கு என்கிட்ட இருந்து எதுவுமே வேண்டாம்னா. எதுக்கு என்ன காப்பாதுனீங்க..." அவள் தடுமாற்றம் தெரிந்தது. கொஞ்சம் காதல் கலந்திருப்பதாக தெரிந்தது.

ஆனால், அதையெல்லாம் உணர்ந்து அவளிடம் அன்பாக பேச நேரமில்லை. சரஸ்வதி அக்காவின் ஆட்கள் வருவது போல் தெரிந்தது. அஞ்சலியை ஆந்திராவுக்கு போகும் பஸில் ஏற்றிவிட்டேன்.

அவளின் கண்கள் கலங்கி இருந்தது. அதை துடைக்கவோ, ஆறுதல் சொல்லவோ தோன்றவில்லை. அவள் பாதுகாப்பாக சென்றாள் போதும். சரஸ்ஸக்காவின் ஆட்கள் என்னை பார்த்து விட்டார்கள்.

இங்கிருந்து நான் ஓட வேண்டும். அப்போது தான் என்னை துறத்திக் கொண்டு வருவார்கள். அஞ்சலிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஓடத் தொடங்கினேன்.

சரஸ்வதியின் ஆட்களும் என்னை தொரத்தத் தொடங்கினர்.அவர்களை ஏமாற்றிவிட்டு என் வண்டியை எடுக்க சென்றேன். என் வாண்டியை அவர்கள் நோட்டம் விட்டிருப்பார்கள் என்பதை நான் யோசிக்கவில்லை.

கழுத்தில் பலமாக ஒருவன் தாக்கினான். நான் மயக்கமானேன். அவர்களின் மாருதி வண்டியில் ஏற்றினான். அங்கிருந்த பயணிகளும், காவலர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தண்ணியடித்தவனை தூக்கிக் கொண்டு செல்வது போல் சென்றனர்.
சரஸ்வதி அக்கா அந்த வண்டியில் இருந்தாள். கோபமாக என்னை அறைந்தாள்.

"தேவிடியா மவனே... பத்து நிமிஷம் படுத்தானு அவள காப்பாதுறீயா. எங்கடா அவ."

 "சொல்ல முடியாது."

மீண்டு அடிவிழுந்தது. நெற்றி போட்டில் லோகு துப்பாகி வைத்தான். அப்பவும் சொல்லவும் முடியாது என்றேன்.

"அவள விலை பேசிட்டேன். உனக்கு வேண்ணும்னா வேற பொண்ண எடுத்துக்க. வீணா லவ்வு கிவ்வு சொல்லி, அவளுக்காக அடி வாங்கி சாகதடா..."
எனக்கு சிரிப்பு தான் வந்தது.  ’காதல்’ அந்த வார்த்தைக்கு தகுதியற்றவன் நான்.

"இன்னும் கொஞ்ச நாள்ல எயிட்ஸால சாகப்போறேன். எனக்கு லவ்வா... போடி. தேவுடியா முண்டோம்" என்று அலட்சியமாக சொல்லி, என் தலையில் வைத்த லோகுவின் துப்பாக்கியை நானே அழுத்திக் கொண்டேன்.

வண்டியில் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு பஸ் நிலையத்தில் இருந்த போலீஸ் அங்கு வந்தனர்.

'உங்கள எப்படி கூப்பிடுறது' என்ற அவளின் குரல் மட்டும் என் காதில் ஒளித்துக் கொண்டே இருக்கிறது. எனக்கும் அவளுக்கும் இருக்கும் உறவுக்கு நாகரிகமான பெயரை நீங்களாவது சொல்லுங்கள் !
Tags: