ஒட்டல் அழகிக்கு (ஒட்டலிகளுக்குத்) தடை !

உண்டி சுருங்குதல் பெண்டிக்கு அழகுதான். அதற்காக உண்டியே வேண்டாம் என்று யார் சொன்னது? உடைகளுக்கு மொடல்களாக பயன் படுத்தும் பெண்கள் மெலிந்து எலும்பும் தோலுமாக இருப்பது தான் அழகு 
ஒட்டல் அழகிக்கு (ஒட்டலிகளுக்குத்) தடை !
என்ற மாயையை உடைய லங்கார நிலைய ங்கள், அழகு நிலையங்கள், உடை யமைப்பு நிறுவ னங்கள், மொடலிங் மையங்கள் மிகைப் படுத்தி வருகின்றன.

முன்னர் ஒரு அழகான பெண்ணைத் தெரிவு செய்து அவளுக்கு ஏற்றால் போல் உடையை வடிவமைத்து போட்டிக்கு அனுப்பு வார்கள். 

இப்போ தமது கனவில் உடைகளை அமைத்து விட்டு அதற் கேற்றால் போல் பெண்களை வடிவ மைக்கிறார்கள்.

இங்கே உடைகள் வடிவமைக்கப் படுகிறதா? பெண்கள் வடிவமைக்கப் படுகிறார்களா? 

உடைக்கு வியாபாரம் எடைக்கு வியாதிகள் இந்தக் கொடுஞ் செயல்களால் பெண்கள் உணவை மறுப்பதும், வெறுப்பது மாகி நோய் களை மட்டுமே சம்பாதிப் பவர்கள்.

ஆனால் பணச் சம்பாதிப்பில் போட்டி என்பதால் நோய் சம்பாதிப்பு அதிகமாகிறது. இது ஒரு தொற்று நோயாக இளம் பிள்ளை களின் மன ங்களில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.

புலுமியா, அனொரக்சியா போன்ற நோய்களுக்கு உள்ளாகி உணவு உண்ண விரும்ப மின்றியும், உண்ணும் உணவை சத்தி எடுக்கும் நோய்களாக பெற்றுக் கொள்கிறார்கள்.

இவர்கள் தம்மைக் கண்ணாடியில் பார்க்கும் போது வித்தியா சமாகவே உணர்வார்கள். மெலிந்தி ருந்தாலும் தாம் தடிப்பாக உள்ள தாகவே பார்ப்பார்கள்.
இது ஒரு ஆழமான மனநோயாகி விடுகிறது. இப்படியான நோய் கள் பல்லாயிரக் கணக்கான இளம் பெண்களைப் பாதிக்கிறது.

இதைப்பற்றி அனைவரும்,அரசும்,அரசியில்வாதிகளும் பேசினார் களே தவிர யாரும் இதற்கான முயற் சிகளை எடுக்க வில்லை.

ஆனால் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளின் குறியீட்டு நிறைக்குக் குறைந்த வர்களை மொடல்களாகப் பாவிப்பது சட்ட விரோத மானது என்று அறிவித் துள்ளது.

இதையே நாகரீகத்தின் தாயகம் எனத்தம்மை தப்பட்டம் அடித்துக் கொள்ளும் பிராஸ்நாடு அதே சட்டத்தை இன்று அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது

மகிழ்ச்சி யான விடயமே. உலகின் 100க்கு 95 சதவீதமான பெண் மொடல்கள் உணவுத் தொகுதி, சமிபாட்டு நோய்களால் பாதிக்கப் பட்டுள் ளார்கள்.

இந்த மனோவியா தியானது ஆண்மொடல்களுக்கும் ஆரம்பமானது என்பது சந்தேகமி ல்லை. ஆண்களுக்கு வயிற்றில் 6 மடிப்புக்கள்.
துடிப்புள்ள வனுக்கு மடிப்பு என்ற மனநோய் எண்ணத்தை பெண்கள் தலைகளில் விதைக்கப் பட்டதால் மடிப்பில் மாட்டிக் கொள்ள ஸ்ரோய்ட் போன்ற தசை நார்களை ஊதப் பண்ணும் போதைப் பொருட்களை உட்கொள் கிறார்கள்.

இவை நரம்பு மண்டலங் களைப் பாதித்து கல்வி கற்ற முடியாம லும், வாலிபம் உணர் வுகள் இல்லாமலும், வாலிபம் தாண்டியதும் தசைநார் தளர்ச்சி யும், நடுக்கமும், சுயசிந்தனை இன்மையும் ஏற்படுகிறது. ஏனிந்தக் கொலை வெறிகள்?

நெளிவு சுழிவு தான் பெண்களுக்கு அழகு. தற்போது பெண்களும் ஆறு மடிப்புத் தேடுகி றார்கள். உடல்நிறை குறைய உடலில் நிறையேற்றிப் பயிற்சி செய்கிறார்கள். 

இறுக்க ப்பட்ட உடல் ஆண்வடிவம் பெறுவதற்காக ஆண்மைச் சுரப்பு வில்லை களைப் பாவிக்கி றார்கள்.

அவை ரெஸ்தெஸ்ரோன் என்ற ஆண் சுரப்பைத் தூண்டும், பெண்மைக் குரிய ஒஸ்ரொ கேனை தடுக்கும்.

உடலில் நெளிவு சுழிவுடன் பிறந்த பெண்களை அதை பயிற்றில் 6மடிப்பாக மாற்றியின் கடவுள் கொடுத்து கற்பம் கரைக் கப்பட்டு விடும்.

சிலருக்கு மீசை முளைக்க ஆரம்பிக்கும். மாமிக்கு மீசை முளைத்தால் மாமாதானே. சமவுரிமைப் போராட்டம் வெற்றி பெற்று விடும்.

ஆண்கள் போல் இருப்பதும், வாழ்வதும் தானே சமவுரிமை என்று பல பெண்கள் உணரப் பெற்று ள்ளனர். இந்த உடலமைப்பு மாற்றங்கள், சுரப்பு மாற் றங்கள், மனவியலில் பாதிப்பை ஏற்படுத்து வதால் தான்
இந்த தற்பால் சேர்க்கை உருவாகிறதோ என்று எண்ணும் கால் ஒரு விஞ்ஞானக் கட்டுரை என் எண்ணங் களுக்கு சான்றானது.

பூமியில் பாரம் கூடுகிறது, பிள்ளைப் பெறுவதைக் குறைத்தப் பெறுங்கள். குடும்பக்கட் டுப்பாடு செய்யுங்கள் என்றும் போதித்துப் பார்த்தார்கள். சில வளர்ச்சி யடைய மாட்டோ மென அடம் பிடிக்கும் மதங்கள் தடையாக இருந்து வருகின்றன.

இன்று சில நூறு வருடங்களில் புரதச்சத்துக் காக பூச்சிகள், புழுக்களை உண்ண வேண்டிய நிலைவரும் என்ற அச்சத்தை விஞ்ஞானம் வெளியி ட்டுள்ளது.

இந்த இனப்பெருக் கத்துக்கு முடிவு கட்ட இயற்கை தன்னை மாற்றிக் கொள்ளும் வடிவம்தான் தற்பாற் சேர்க்கையோ என எண்ணத் தோன்று கிறது.

தற்பாற் சேர்க்கை, கற்பம் கரைக்கும் பெண்களின் 6 மடிப்பு வயிறுகள், சுரப்பு வில்லைகள் இயற்கையின் சனப் பெருக்கத்தைக் குறைக்கும முன்னேற்பாடா? 

பெண்களுக்கு அனேகமாக அடிவயிறு, தொடை, மார்பகப் பகுதிகளில் அதிக தசைப் பிடிப்புக் கொள்வது இயற்கை யானது.

இதை அனைத்து மிருகங்கள் பறவைக ளிலும் காணலாம். இது இயற்கையின் இனப்பெருக்க யுக்தியே. தாய் உணவு உட் கொள்ளா விட்டாலும் வயிற்றி லுள்ள சிசுவை காப்பாற்றவே இந்த இயற்கையின் ஏற்பாடு.

இதை அனோகமாக 20வயதைத் தாண்டிய பெண்களால் உணர முடியும். ஒரு பெண் பிள்ளை 13 அகவையை எட்டும் போது தாய்மைக் கான தயாரிப்பில் இயற்கை ஊக்கம் கொள்கிறது.

பாலியல் வயதான 19 அகவையை அடையும் போது உடல், உள்ள, முளை முதிர்வுகள் முழுமையாக தாய்மை க்குத் தயாரான நிலையில் இருக்கும்.
இதனால் தான் துறப்பு வயது 21 என அறிவித் தார்கள். அதாவது 21வயதில் தான் பிள்ளைக ளிடன் வீட்டின் பொறுப்பு களை ஒப்படைப்பது என்ற செயல் முறை இன்றும் கொண்டாடப் படு கிறது.

இன்று ஆண்பெண் இருபாலாரும் மது வருந்தும் பழக்கங் களைக் கொண்டி ருந்தாலும் பெண்களே மதுவின் பாதிப்புக்கு விரைவில் உட்கொள்ளப் படுகிறார்கள்.

காரணம் பிள்ளைப் பேற்றுக்காக இயற்கை அவர்களின் உடலில் நீர் தன்மையை அதிகமாகக் கொண்டுள்ளது. இது மதுவின் வீரியத்தை அதிகரி ப்பதால் குடி இவர்களை வெகு விரைவில் குடித்து விடுகிறது.

இதனால்தான் ஆரோக்கியம் பேணும் சமூகங்கள், மதங்கள் பெண்கள் குடிப்பதற்குத் தடை செய்தது. இங்கே ஆண் மட்டும் குடிக்கலாமா என்ற கேள்வி களைப் பெண்ணிய வாதிகள் முன் வைக்கலாம்.

கெட்ட பழக்கங் களுக்குத் தான் சமவுரிமையா என்ற மறுப்புக் கேள்வி யையும் நாம் முன் வைக்கலாம்.

ஆணுக்குள்ள துர்ப்பழக் கங்கள் அவனுடனே அழிந்து விடுகிறது. ஆனால் பெண் கொள்ளும் துர்ப்பழக் கம் பரம்பரை பரம்பரை யாக நிலைத்து நிற்கிறது. உதாரணம் புகைப் பிடித்தல். மதுவும் அப்படியே.

இயற்கை உயிரினங் களுக்கு எது தேவையோ அதைச் சரியாக தேவைக் கேற்ப அமை த்து வைத்துள்ளது. இயற்கையின் விருத்தி இனப்பெரு க்கம் என்பதால் பெத்துக்கொட் டுவது தான் வாழ்க்கை யாகாது.
ஒரு ஆரோக்கி யமான, பலமான, அறிவுஜீவி களான பிள்ளை களை, சமூகத்தை உருவாக் குவதே இயற்கையின் தேவையாக உள்ளது.

உணர்வு, உள்ள, உடலமைப் புகளில் நீங்கள் நீங்களாகவே இருங்கள். இயற்கை எனும் இறைவன் அனைத்தையும் உங்களுக்கு இயற்கை யாகவே தந்துள்ளான்.

கவர்ச் சிக்காக கண்ண நிண்டவற்றை உட்கொள்ளா தீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். உடற் பயிற்சி களையும் உணவு களையும் உடல் நலனுக் காகவே செய்யுங்கள்.

கவர்ச்சியை மட்டும் கண்ணுற்று வருபவர்கள் கவர்ச்சி இழந்ததும் களன்று விடுவான். இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் அழகான வர்களே. நம்புங்கள் இது உண்மை
Tags:
Privacy and cookie settings