மாதவிடாய் சரியாக வருவதற்கு செம்பருத்தி பூ !

பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வருவதற்கு, 4 செம்பருத்தி பூக்களை அரைத்து பசையாக செய்து கொள்ள வேண்டும். இதை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் 7 நாட்களுக்கு சாப்பிட்டு வரலாம்.
மாதவிடாய் சரியாக வருவதற்கு செம்பருத்தி பூ !
செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி தூளாக்கி , ஒரு தேக்கரண்டி அளவு தூளை காலையிலும் மாலையிலும் 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சரியாக வரும் .

இருமல் தீர 

செம்பருத்தி பூ இதழ்கள் 15 எடுத்து கொள்ள வேண்டும் .அதனுடன் ஆடாதோடை இலை மூலிகை தளிர் இலைகள் மூன்றை சேர்த்து 

நசுக்கி , 2 தம்பளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி அதில் 1 /2  தேக்கரண்டி தேன் கலந்து காலை, மாலையில் 3 நாட்கள் குடித்து வந்தால் இருமல் தீரும் .

தலையில் பேன்கள் குறைய 

செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால் தலை பேன்கள் குறையும் .

இதயம் பலம் பெற 

செம்பருத்தி பூவை பசுமையாகவே  அல்லது உலர வைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை , மாலையில் குடித்து வந்தால் இதயம் பலம் பெறும்.

சிறுநீர் எரிச்சல் குணமாக 
4  செம்பருத்தி இலைகளை 2 தம்பளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி ,வடிகட்டி கொள்ள வேண்டும், இதனுடன் கற்கண்டு சேர்த்து கலக்கி குடித்து வந்தால்  சிறுநீர் எரிச்சல் குணமாகும் .

4  செம்பருத்தி மொட்டுகளை 2 தம்பளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டுடன் சேர்த்து குடித்து வந்தாலும் சிறுநீர் எரிச்சல் குணமாகும் .
Tags: