மேலாடை இல்லாமல் பிரேசில் பெண்கள் ஆர்ப்பாட்டம் !

மேலாடை இல்லாமல் பெண்கள் சூரிய குளியல் செய்ய கூடாது என்கிற சட்டம் பிறேசில் நாட்டில் தற்போது கடுமையாக அமுல் படுத்தப் பட்டு வருகின்றது.
ஆயினும் இச்சட்ட த்தை வாபஸ் பெற கோரி அரசுக்கு எதிராக பெண்கள் மேலாடை இல்லாமல் ஆர்ப் பாட்டம் ஒன்றை கடற்கரை ஒன்றில் முடுக்கி விட்டனர்.

இதில் பல்லாயிரக் கணக்கில் பெண்கள் பங்கேற் பார்கள் என்று பரவலாக எதிர் பார்க்கப் பட்டு இருந்தது. 

ஆயினும் சிறிய தொகை யினரே பங்கேற்றனர். இருப்பினும் இவர்களை படங்கள் எடுக்க நூற்றுக் கணக்கான புகைப்படப் பிடிப் பாளர்கள் வந்திருந்தனர்
பெண்கள் கடற்கரை யில் வைத்து மேலாடை களை கழற்றி, அரை நிர்வாண மாக தோன்றி னார்கள்.

இதில் மிக ஊக்கமாக ஈடுபட்ட வர்களில் 73 வயது பாட்டியும் ஒருவர். மேலாடை கள் இல்லாமல் பெண்கள் தோன்று கின்றமை அநாகரிக மான செயல் என்கிறது பிறேசில் அரசு.
நிர்வாண த்துக்கு எதிரான சட்டம் 1940 ஆம் ஆண்டுக்கு முன் பிறேசிலில் கொண்டு வரப்பட்டது. நிர்வாண மாக தோன்று கின்றமை இங்கு ஒரு வருட சிறைத் தண்டனை க்கு அல்லது அபராத த்துக்கு உரிய குற்றம்.

ஆனால் பெண்களின் மார்புகள் ஆபத்தான பொருட்கள் அல்ல, பெண்கள் மேலாடை இன்றி நடமாட முன்பு சட்டத்தால் அனுமதிக்கப் பட்டு இருந்தனர் என்று ஊடகங் களுக்கு ஆர்ப்பட்டக் கார பெண்கள் கூறினார்கள்.
Tags:
Privacy and cookie settings