எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !

நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். 
எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !
எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப் படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடி வைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழு வதும் தயிராக மாறி யிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடை ந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்து விடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும்.

அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப் படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு எடுக்கப்ப டும் நெய்யானது வெகு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில் தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

வெந்தய டீ குடிச்சா என்ன நன்மைகள் கிடைக்கும்?

2000 ஆண்டு களுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்து வத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்து ள்ளது.
எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !
மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகை களில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக் கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தா ளர்களால் அழைக்கப் படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கி யத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

இது போல் சித்த மருத்து வத்திலும் மருந்து களுக்கு துணை மருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப் பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

இன்ஸ்டன்ட் இட்லி மாவு யூஸ் பண்றீங்களா?

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந் துள்ளது. ஜீரண சக்தியைத் தூண்ட நெய் வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை சமன் செய்து வயிறு மற்றும்

குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக் குகிறது. நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடை யாது.

இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக் கொள்ளாத வர்கள் நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரி க்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது. நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனா வதைத் தடுக்கிறது. 

அது போல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந் துள்ளனர். இது மூளைக்கு சிறந்த டானிக்.

நெய்யில் 

Saturated fat - 65% 

Mono - unsaturated fat - 32% 

Linoleic - unsaturated fat -3% 

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.

நெய் உருக்கி மோர் பெருக்கி.... 
எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடு வதால் உடலுக்கு குளிர்ச் சியைக் கொடுத்து உஷ்ண த்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணை ய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சண ங்களை உண்ணலாம். மலச் சிக்கலைப் போக்கும்.

வாத, பித்த, கபத்தின் சீற்றங் களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்க த்தைத் தடுக்கும்.

ஞாபக சக்தியை தூண்டும்.

சரும பள பளப்பைக் கொடுக்கும்.

கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும். உடல் வலுவடைய சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள்.

பெண்கள் சாப்பிட வேண்டிய சேனைகிழங்கு !

சிறிது தூரம் நடந்தால் கூட அவர்க ளுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறு வார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

 குடற்புண் குணமாக 
எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச்சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன.

மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற
போதை வஸ்துக்கள் உபயோகிப் பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர் களுக்கும் குடல் புண்ணாகி விடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒரு வித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.
Tags: