கரப்பான் பூச்சிகளின் மூலம் மின்சாரம் !

கரப்பான் பூச்சிகளை வைத்து ஜப்பான் பல்கலை கழக மாண வர்கள் புதுவித சென்சார் களை உருவாக்கி யுள்ளனர். கரப்பான் பூச்சிக்கு இரு மீசைகள் இருக்கும், 
கரப்பான் பூச்சிகளின் மூலம் மின்சாரம் !
அதாவது இவை களை உணர் உறுப்புகள் (Antennae) என்று அழைக்கி ன்றனர். இதன் மூலம் முன் புறத்தில் ஏதேனும் தடை உள்ளதாக என அறிந்து கொள்ளும்.

இதே போல கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் வேறு வித உணர் உறுப்புகள் (cerci) உள்ளன, பின்புறத்தி லிருந்து தன்னைப் பிடிக்க ஏதேனும் வருகிறதா என்பதை இந்த உறுப்புகள் கண்டறிந்து தெரி விக்கும்.

இதனை கொண்டு ஜப்பானின் ஒசாகா பல்கலை கழகம் புதுவித சென்சார் களை உருவாக்கி யுள்ளது. இந்த சென்சார் களின் மூலம் மிக எளிதாக தகவல் களை பரிமாறி கொள்ள முடியும்.
கரப்பான் பூச்சி களின் முதுகில் சென்சாரும் அதன் கூட 20mm x 15mm அளவுக்கு ஒரு ஃப்யூள் செல்லும் இணைக்கப் பட்டிருக்கும்.

இந்த ஃப்யூள் செல் வேலை செய்ய, கரப்பான் பூச்சியின் உடலில் ட்ரஹலோஸ் (trehalose) என்னும் திரவம் மற்றும் ஒரு சிறிய ஊசியை செலுத்து வார்கள்.

இந்த திரகம் உள்ளே எலக்ட் ரோட்ஸை உருவாக்கும், அதன் மூலம் குளுகோஸ் கிடைக்கும். 

இந்த எலக்ட் ரோட்ஸ் மூலம் ஊசி அனோட் /காத்தோ டாக மாறி நிரந்திர மின்சாரம் கிடை க்கும், இது சென்சாரின் உபயோக த்திற்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

இதற்கு முன்பு சோதனை செய்து பார்த்த போது, ஒவ்வொரு கரப்பான் பூச்சியும் 50.2μW மின்சா ரத்தை தந்ததாம். எப்படியோ, கரப்பான் பூச்சியில இருந்து கரண்ட கண்டுபிடிச்சுடாங்க!
Tags:
Privacy and cookie settings