துண்டான கையை காலில் வளர்த்து பொருத்திய டாக்டர்கள் !

சீனாவில் தொழிற் சாலையில் துண்டான கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
துண்டான கையை காலில் வளர்த்து பொருத்திய டாக்டர்கள் !
சீனாவின் ஹூனான் மாகாண த்தில் ஷாங்டே என்ற ஊரை சேர்ந்தவர் ஜியாவோ வெய் (20). இவர் அதே பகுதியில் உள்ள தொழிற் சாலையில் வேலை செய்கிறார்.

கடந்த நவம்பர் 10ம் தேதி தொழிற் சாலையில் வேலை செய்த போது எதிர் பாராத விதமாக ஜியாவோ வெய்யின் வலது கை இயந்திர த்துக்குள் சிக்கி துண்டானது. 

வலியில் அலறி துடித்த வரை, சக தொழிலாளர்கள் மீட்டனர். மணிக் கட்டு வரை துண்டாகி இயந்திரத்துக்குள் விழுந்திருந்திருந்த துண்டனை எடுத்து கொண்டு ஷாங்டேவில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த டாக்ட ர்கள் அவரது கையை காப்பாற் றுவது கடினம் என்று கை விரித்து விட்டனர்.

அங்கிருந்த டாக்டர் களின் அறிவுரைப் படி மண்டல மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் சுமார் 2 மணி நேர பயண த்துக்கு பிறகு மண்டல மருத்துவ மனையில் ஜியாவோ வெய்யை சேர்த்தனர்.

வாலிபரின் நிலையை கண்ட டாக்டர்கள், இது மிகவும் கடின மான சிகிச்சை. எனவே நேரடியாக மணிக் கட்டை கையில் பொருத்த முடியாது. வேறு மாதிரி முயற்சி செய்து பார்க் கலாம் என்று கூறினர்.
அதன்பின் துண்டான அவரது கையை அவரது இடது காலில் கணுக்கால் அருகே ஒட்டு செடியை ஒட்ட வைப்பது போல் வைத்து, அதை உயிர் பெற முயற்சி மேற்கொள்ள ப்பட்டது. 

அதுவரை அவரது வலது கரத்தையும் மருந்து கள் மூலம் பாதுகாத்தனர். சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு துண்டான கையின் அனைத்து செல்களும் உயிர் பெற்றன. 

இதனால் மகிழ்ச்சி அடைந்த டாக்டர்கள், காலில் வளர்ந் திருந்த மணிக் கட்டை மீண்டும் ஆபரேஷன் மூலம் அகற்றி வலது கையில் பொருத்தினர்.

தற்போது ஜியாவோ வெய்யின் வலது கரம் வழக்கம் போல் நன்றாக செயல்ப டுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். 

கை திரும்ப கிடைத்த சந்தோ ஷத்தில் கண்ணீரோடு ஜியாவோ வெய் டாக்டர் களுக்கு நன்றி தெரிவித்தார்.
இது குறித்து இங்கிலாந்து டாக்டர்கள் கூறுகையில், இது ஒரு மருத்துவ அதிசயம். மிகவும் அரிதான முறையில் கையை பிழைக்க வைத்து சீன டாக்டர்கள் சாதனை செய்துள் ளனர் என்று தெரிவித் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings