ஓட்டு கேக்க போய் வாங்கி கட்டி கொண்ட தங்க பாண்டியன் !

0
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக, தேமுதிக, பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இவர்களுக்கு எதிர்த் தரப்பில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் தென் சென்னை வேட்பாளராக தமிழச்சி தங்க பாண்டியன் போட்டி யிடுகிறார்.
ஓட்டு கேக்க போய் வாங்கி கட்டி கொண்ட தங்க பாண்டியன்


தற்பொழுது, பல்வேறு விதமான பிரச்சாரங் களை மேற்கொண்டு வருகின்றார். முன்னதாக அவரது காரில் இருந்து தென் சென்னை மக்களவைத் தொகுதி புதிய வாக்காளர் களின் வேட்பாளர் அடையாள அட்டை கைப்பற்றப் பட்டதாக ஒரு தகவல் வெளியாகியது. மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தமிழச்சி தங்க பாண்டியனை "அழகான வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என புகழ்ந்துள்ளார். 

இந்நிலையில், மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழச்சி தங்க பாண்டியன் தொகுதி மக்களிடம் அவர்களின் பிரச்சினை களை கேட்டு அதனை தீர்த்து வைப்பதாக கூறி வருகிறார். அவ்வாறு, பெண்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எதிர் பாராத விதமாக ஒரு பெண்மணி, "நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க..,! 

எங்களுக்கு எவ்வளவோ பிரச்சனை இருக்கு., ஆனா இத்தனை நாளா வந்து எங்க குறைய கேக்காம எதுக்கு தேர்தல் நேரத்தில மட்டும் எல்லாரும் வரீங்க? சொல்லுங்க" என கேட்டுள்ளார். 

இதனை சற்றும் எதிர்பாராத தமிழச்சி தங்க பாண்டியன் சற்று சாடுமாறி, பின்னர் சமாளித்துக் கொண்டு "உங்களது குறைகள் அனைத்தையும் நான் வெற்றி பெற்ற பின் தீர்த்து வைக்க முயற்சிக்கிறேன்" என கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)