ஜெ.க்கு குழந்தை பிறந்தது உண்மை - உறவினர் | The child was born to the truth - relative !

0
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான் என பெங்களூரு வில் இருக்கும் அவரது உறவினர் லலிதா தெரிவித் திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. பெங்களூரு வைச் சேர்ந்த அம்ருதா (37), ‘நான்தான் ஜெயலலிதா வின் உண்மை யான மகள். 
ஜெ.க்கு குழந்தை பிறந்தது உண்மை


என்னை அவரது மகளாக அங்கீகரித்து, ரத்த வாரிசாக அறிவிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட் டோருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த அம்ருதா, ‘‘கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி ஜெயலலிதா வின் மகளாக நான் பெங்களூரு வில் பிறந்தேன். 

ஜெயலலிதா வின் அத்தையான ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். ஜெயலலிதா தனக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் சிறு வயதிலே என்னை பார்த்தசாரதி - ஷைலஜா தம்பதிக்கு தத்து கொடுத்து விட்டார். எனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடைசி வரை என்னை மகளாக அறிவிக்க வில்லை''என நீதி மன்றத்தில் தெரிவித்தார்.

இந்நிலை யில் பிரசவம் பார்த்ததாக சொல்லப் படும் ஜெயலட்சுமி யின் உறவினர் மகள் லலிதா, ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனது அம்மாவின் அண்ணன் மகள். ஜெயலலிதா வின் குடும்பத்தார் எங்களுக்கு குடும்ப த்துக்கு நெருக்க மானவர்கள் என்பதால், சிறு வயதில் இருந்தே பல விஷயங்கள் எங்களுக்கு தெரியும். ஜெயலலிதா நடிகையாக இருந்த போது, அவருக்கு ஒருவருடன் தொடர்பு இருந்தது. 

அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் எனவும் தெரி கிறது. இதன் மூலம் ஜெயலலிதா வுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஜெயலலிதா வின் பேறு காலத்துக்கு அருகில் இருந்து உதவியவர் என் பெரியம்மா ஜெயலட்சுமி தான். இந்த விஷய த்தை வெளியே சொல்லக் கூடாது என ஜெயலலிதா என் பெரியம்மா ஜெயலட்சுமி யிடம் சத்தியம் வாங்கி கொண்டார். இதனால் என் பெரியம்மா இதனை வெளியே சொல்ல வில்லை. 


நெருங்கிய உறவினர் களுக்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும். ஜெயலலிதா தனக்கு பிறந்த பெண் குழந்தையை அவரது நெருங்கிய உறவின ரிடம் வளர்க்க கொடுத்தார். அந்த குழந்தை அம்ருதாவா எனக்கு தெரியாது. சந்தேகம் இருந்தால் டிஎன்ஏ சோதனை செய்து பார்க்க லாம். கடந்த 3 மாதங் களுக்கு முன்பு அம்ருதா என்னை வந்து சந்தித்தார். ஜெயலலிதா வின் மகள் என சொல்லும் அவர் என்னை அத்தை என்று அழைக் கிறார். 

அவருக்கு ஜெயலலிதா வின் சொத்துகள் மீது ஆசை இருப்பதாக தெரிய வில்லை. ஜெயலலிதா வுக்கு மகள் பிறந்தது உண்மை தான். அவரது தாயார் சந்தியா இறந்த தால், மனிதாபி மான அடிப்படை யில் ஜெயலட்சுமி அவரது பிரசவ த்துக்கு உதவி இருக்கி றார்கள்'' என்றார். பெங்களூரு வைச் சேர்ந்த ஜெயலலிதா வின் உறவினர் லலிதா தெரிவித் துள்ள தகவல், மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)