மக்கள் என்னை கைவிடவில்லை.....நம்பிக்கை வைத்துள்ளனர் !

போயஸ் கார்டனில் அதிமுக,. பொதுசெயலர் ஜெ., நிருபர்களிடம் பேசுகையில்; தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வரவில்லை. அதிமுகவுக்கு மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளனர். 
மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றியை செலுத்த அகராதியில் வார்த்தை இல்லை: ஜெ., 1984 க்கு பின் இப்போது மீண்டும் நடந்திருக்கிறது.

10 கட்சிகள் சேர்ந்து எதிர்த்தாலும், பலமான கூட்டணி இல்லாத நேரத்திலும் நான் ஆண்டவனை நம்பி மக்களுடன் கூட்டணி வைத்தேன். 

மக்கள் குரல் மகேசன் குரல், ஆண்டவன் என்றால் மக்கள் என்றும் எடுத்து கொள்ளலாம். மக்கள் என்னை கைவிடவில்லை. என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நானும் வைத்துள்ளேன். இவ்வாறு ஜெ., கூறினார்.
Tags: