சிறுநீரகப் பையில் புற்று நோய் இருப்பதற்கான அறிகுறிகள் !

0
சிறுநீர்ப்பை புற்றுநோய் என்பது பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வரக்கூடிய ஒரு பொதுவான புற்று நோயாகும் இது ஒவ்வொரு வருடமும் 11,000 ஆண்களும் 5000 பெண்களும் இந்த புற்றுநோயால் பலியாகின்றனர்.  
சிறுநீரகப் பையில் புற்று நோய்
இந்த சிறுநீர்ப்பை புற்றுநோய் ஆனது பொதுப்படையாக ஏற்படும் புற்றுநோய் ஆறாவது இடத்தை பிடிக்கிறது. இந்தப் புற்று நோயின் தொடக்கத்தில் சில அறிகுறிகள் காணப்படுகின்றன (Some symptoms appear at the onset of the cancer.). 

அதனை அறிந்து சிகிச்சை மேற்கொண்டால் மனித உயிரை காப்பது சுலபமாக இருக்கும் இதனை உணர்ந்து செயல்படுவது மிகவும் நல்லது. 

இந்த சிறுநீர்ப்பை புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் சில அறிகுறிகளை பற்றி இந்த செய்தியில் நாம் காணலாம் ..

சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது …
சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது
நம்முடைய சிறுநீரானது திட்டுத்திட்டாக ரத்தம் வெளியேறலாம். சிறுநீர் இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது ரத்தம் உறைந்து காணப்படலாம். இவை யெல்லாம் சிறுநீர்ப்பை புற்றுநோயின் நோயின் அறிகுறிகளாக உள்ளது.   

சிறுநீருடன் ரத்தம் வெளியேறினால் இதனை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் (In case of bleeding with urine, consult a doctor immediately without ignoring it.). 

சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 80% மக்கள் இந்த அறிகுறியை அறிந்திருப்பர். பாதிக்கப்பட்டவர்களில் ஐந்தில் நான்கு பேர் இந்த பாதிப்பினை கொண்டிருக்கின்றனர் .. 

சிறுநீர் வெளியேறும் போது பிங்க் ஆரஞ்சு அல்லது அடர் சிவப்பு நிறத்தில் இருக்கலாம் இது உறைந்த ரத்தமும் வெளியேறும் இப்படி வெளியேறும் போது இது சிறிய அளவாக இருக்கும் போது பரிசோதனை செய்து தெரிந்து கொள்வது நல்லது .

இப்படி இந்த இரத்தக் கசிவால் அது தொடர்ச்சியாக இல்லாத போதும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 

சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரக தொற்று சிறுநீரக கற்கள் போன்றவை ஏற்படும் பொழுது சிறுநீரில் ரத்தம் கசியும் இது போன்ற நோய்களுக்கும் சிகிச்சை மிகவும் அவசியம் .

சிறுநீர் வெளியேறும் போது வலி ஏற்படுவது…
சிறுநீர் வெளியேறும் போது வலி ஏற்படுவது
சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் குழாயில் ஏற்படும் வலியானது சிறுநீர்ப்பை புற்றுநோய் அறிகுறியாக இருக்கும் . சிறுநீரில் இரத்தம் கசிவது போன்ற ஒரு பொதுவான அறிகுறி இல்லை. 

சிறுநீர் கழிக்கும் போது ஒரு விதமான எரிச்சல் நிறைந்த வலி உண்டாகும். சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றானது சிறுநீர்ப்பையில் ஏற்படும். 

வேற இதமான பிரச்சினைகள் போன்றவற்றிலும் இதே அறிகுறி தென்படும் வாய்ப்புகள் அதிகமாகும். இத்தகைய அறிகுறிகளை அலட்சியப்படுத்துவது நன்மையான காரியம் இல்லை (Ignoring such symptoms is not a good thing) .

அடிக்கடி சிறுநீர் கழிப்பது…
அடிக்கடி சிறுநீர் கழிப்பது
உடனடியாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இயல்பை விட அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு போன்ற இந்த அறிகுறிகள் சிறுநீர்ப்பை புற்று நோயின் அறிகுறிகளாகும் .

சாதாரணமாக சிலர் சிறுநீரை அடக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த சூழ்நிலையில் திடீரென்று உடனடியாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வை பெறுவார்கள் .

மேலும் இந்த அறிகுறி வேறு சிறுநீரக தொற்று ஏற்பட வாய்ப்புகள். எனவே இத்தகைய அறிகுறிகளை உடனே கவனிக்க வேண்டியது அவசியம் (Therefore it is important to notice such symptoms immediately.). 

இதோடு சேர்ந்து ரத்தக்கசிவு இருந்தால் அது சிறுநீரக பை புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த சிறுநீர்ப்பை புற்று நோயின் ஆரம்ப கட்டத்தில் சிறிதளவு ரத்த கசிவு மட்டுமே இருக்கும்.  

சிறுநீரின் நிறத்தில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது ஆகவே உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது நல்ல தீர்வு .

பின் முதுகு மற்றும் அடிவயிற்றில் வலி…
பின் முதுகு மற்றும் அடிவயிற்றில் வலி
முதுகின் கீழ்ப் பகுதியிலோ அல்லது அதை வைத்து பகுதியில் ஓர் தாங்க முடியாத அதிகமான அளவில் வலி இருந்தால் இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

மேலும் செரிமான கோளாறு இருந்தாலும் தவறான நிலையில் தூங்கினாலும் (Even if you have a digestive disorder and sleep in the wrong position)  இந்த அறிகுறிகள் பொதுவாக தென்படும் (These symptoms are common.). 
மேலும் இந்தப் புற்று நோயின் அறிகுறிகள் இதுவாகவே இருக்கும் இருந்தாலும் நாம் கவனமாக இருப்பது மிகவும் நல்லது .

எலும்பு வலி / எடை குறைப்பு :
எலும்பு வலி / எடை குறைப்பு
இதுவரை கண்ட எல்லா அறிகுறிகளையும் புற்றுநோயின் ஆரம்ப நிலையில் மட்டுமே குறிக்கும். ஆனால் புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கும் போது இது மற்ற இடங்களையும் தாக்கும் . 

இதனை மெட்டாஸ்டேட்டிக் கேன்சர் என்று கூறுவர். சிறுநீர்ப்பை புற்று நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் பொழுது மேலும் சில அறிகுறிகள் ஏற்படலாம் . 

அந்த அறிகுறிகளாவன…

சிறுநீர் கழிக்க முடியாமல் போவது  (Inability to urinate)

என் முதுகின் ஒரு பக்கத்தில் வலி ஏற்படுவது 

எலும்புகளில் வலி ஏற்படுவது (Causing pain in the bones)

சோர்வான நிலையில் 

பாதங்களில் வீக்கம் உண்டாவது (Swelling of the feet)

பசி இல்லாத நிலை எடை குறைப்பு (Lack of appetite, weight loss)

போன்ற அறிகுறிகள் ஏற்படும்.(Such symptoms occur.)

பெண்களின் கவனத்திற்கு…
பெண்களின் கவனத்திற்கு
இந்த நோயானது பெண்களை விட ஆண்களையே அதிகமாக பாதிக்கிறது என்ற கருத்து உண்மையானது இல்லை (The notion that the disease affects men more than women is not true)  இறப்பு விகிதத்தில் பெண்கள் தான் அதிகமாக உள்ளனர்.  

பெண்கள் ஏன் இந்த புற்றுநோய் முற்றிய நிலையில் கண்டறிகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. 

ஏனென்றால் பொதுவாக ரத்தக்கசிவு ஏற்படும் போது இதனை எப்போதும் வரும் மாதவிடாய் கசிவு மற்றும் மாதவிடாய் இரத்த தட்டுக்கள் என்றும் (Because it is usually referred to as menstrual bleeding and menstrual blood clots that always occur when bleeding occurs), பெண்கள் நினைத்து அலட்சியப் படுத்துவது தான் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது (This is the main reason.).  

சிறுநீர் பாதை தொற்று மற்றும் மெனோபாஸ் சற்று முந்தைய காலகட்டத்தில் ஏற்படும் ரத்த பசியோடு இணைத்து குழப்பிக் கொள்வதும் ஒரு காரணமாக இருக்கிறது. 

பெண்கள் ரத்தக்கசிவு பிரச்சினையை சீராக அறிந்து உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.  

அது எந்த வகையான இரத்த கசிவு என்பது மருத்துவர்கள் அறிந்து சிகிச்சை அளிக்க பெரிதும் உதவியாக இருக்கும் .…

கவனிக்க வேண்டிய விஷயம்…
கவனிக்க வேண்டிய விஷயம்
புகைப்பிடித்தல் இந்த வகை புற்று நோயை இரண்டு மடங்கு அதிகரிக்கும் (Smoking doubles the risk of this type of cancer.). ஒரு முறை இந்தப் புற்று நோயிலிருந்து விடுபட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 

பிறக்கும் போதே சிறுநீர்ப்பையில் உண்டாகும் கோளாறுகள் இரசாயன பொருட்களுக்கு மத்தியில் வேலை செய்வது போன்றவை இந்த வகை புற்று நோயை உண்டாக்கும். 

எனவே மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது.

இதனை அலட்சியம் செய்யாமல் (without ignoring it)
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)