ஆப்கன் விமானத் தாக்குதலில் 37 பேர் பலி !





ஆப்கன் விமானத் தாக்குதலில் 37 பேர் பலி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

ஆப்கானின் பார்யப் மாகாணத்தில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 3 தளபதிகள் உட்பட 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டு இராணுவ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.   

ஆப்கன் விமானத் தாக்குதல்
இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:  

இராணுவத்திற்கு கிடைத்த ரகசியத் தகவலை வைத்து பார்யப் மாகாணத்தின் கொய்சர்  மற்றும் கவாஜா  மாவட்டங்களில் அதிகாலை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த தாக்குதலில் தலிபான்களின் முக்கிய தளபதிகளான முல்லா சாதிக், முல்லா பஷீர் மற்றும் பைசுல்லா ஆகியோர் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர், அத்துடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

கொய்சர்  மற்றும் கவாஜா  மாவட்டங்களில் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளைத் தாக்க திட்டங்களைத் தீட்டுவதற்காக தலிபான் பயங்கரவாதிகள் கூடியிருந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது, இதனால் அவர்களின் திட்டம் தோல்வியடைந்தது என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது ஹனிப் ரெசாய் வித்துள்ளார்.

அந்தப் பகுதியில் செயல்படும் தலிபான்களிடம் இருந்து இதுவரை எதிர் வினையாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)