உங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் !

ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்தி ற்காக காவல் நிலையத் தில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது, சந்திரனுக்கு பயணம் செய்வதைப் போன்ற சவாலான அம்சம் தான். 

 

ஏனெனில் ஒரு குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல் துறையிடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது.

காவல் துறையில் நிலவும் மிகக் குறைந்த மனிதவளம் உள்ளிட்ட வசதிக் குறைவு களை யாரும் மறுக்க முடியாது. 

எனவே காவல் துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரி களும், அலுவலர் களும் நேரம் – காலம் பார்க்காமல் பணி யாற்றுவதும் உண்மை தான். 

காவல் துறைக்கான பல அத்தியாவசிய தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப் படுவதில்லை என்பதும் ஏற்கத்தகுந்த வாதம் தான்.

எனினும், இதற்காக சாமானிய மனிதனை, காவல் துறையினர் புறக்கணிப் பதையும் அங்கீகரிக்க முடியாது. 


நடை முறையில் காவல் நிலையத்திற்கு வரும் எந்த ஒரு புகாரையும் விசாரணை க்கு ஏற்காமல்

தட்டிக் கழிப்பதற் கான காரணத்தை தேடுவ திலேயே ஒரு காவல் துறையின் அதிகாரியின் மூளை முதன்மை யாக செயல் படுகிறது. 

 

சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களால் தரப்படும் புகாரையோ, செல்வாக்கு மிக்க வர்களின் பரிந்துரை யுடன் வருபவர்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படும் முனைப்பு,

சாமானிய மக்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப் படுவதில்லை என்பதை காவல் துறையினரே ஒப்புக் கொள்வர். 

செல்வாக்கு மிக்க வர்களால் அனுப்பப் படும் புகார்களை புறக்கணி த்தால், காவல் துறையின ருக்கு விரும்பத் தகாத விளைவுகள் ஏற்படலாம். 

அவ்வாறில்லாத நிலையில் காவல் துறை அதிகாரி களுக்கு தனிப்பட்ட ஆதாயம் இல்லாத நிலையில் அந்தப் புகார்கள் கவனிக்கப் படுவதில்லை. இந்தச்சூழலில் பாதிக்கப் பட்டவர்கள், 

தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள் வதற்கு குற்றவியல் நடை முறைச் சட்டம் வழி காட்டுகிறது. 

 

இச்சட்ட த்தின் அத்தியாயம் 15 இல் உள்ள பிரிவு 200 இது குறித்து விளக்குகிறது.

இந்த சட்டப் பிரிவின் கீழ், ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப் பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம். 

இவ்வாறு பெறப்படும் ஒரு புகாரை விசாரிப் பதற்கு குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறான முதல் புகாரை பெறும் குற்றவியல் நடுவர், புகார் தருப வரையும், அவரது சாட்சி களையும் விசாரித்து அவர்களது வாக்கு மூலங்களை பதிவு செய்யலாம். 

இவ்வாறு பெறப்படும் புகாரை விசாரிக்கும் குற்றவியல் நடுவர், புகாரில் உண்மையும் – குற்றம் சாட்டப் பட்ட நபரை கைது செய்வதற் கான முகாந்திரமும் இருப்பதாக திருப்தி அடைந்தால்

அப்பகுதிக் குரிய காவல் துறை அதிகாரி களிடம், குற்றம் சாட்டப் பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தர விடலாம். 

இதற்கான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)ன் படி குற்றவியல் நடுவருக்கு வழங்கப் பட்டுள்ளது.

ஆனால் நடை முறையில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடை பெறுகிறது. 

 

ஏனென்றால் குற்றவியல் நீதி மன்றங்களில் தேங்கி யிருக்கும் ஏராளமான வழக்கு களோடு,

இது போன்று பாதிக்கப் பட்டவர்களால் நேரடியாக வழங்கப் படும் புகார்கள் கூடுதல் பணிச்சுமை என்பதால் நீதி மன்றங்கள் இது மாதிரியான மனுக்களை பரிவுடன் அணுகுவ தில்லை. 

மேலும் புகாரில் கூறப்படும் குற்றச் செயலை நிரூபிக்கும் பொறுப்பு பாதிக்கப் பட்டவரிடமே விடப் படுவதும் உண்டு. 

குற்றப் புலனாய்வில் அறிவோ, அனுபவமோ இல்லாத சாமானியர் களிடம் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது

என்பது நடை முறையில் சாத்திய மில்லாதது என்பதை புரிந்து கொள்ள சிறப்புத் திறமைகள் தேவை யில்லை. 

ஆனால் சில நேரங்களில் இது போன்ற உத்தரவு களை நீதிமன்றம் பிறப்பிப் பதையும் மறுக்க முடியாது.

இதற்கு மாற்றாக குற்ற நிகழ்வு களில் உயர் நீதிமன்றத்தை அணுகுவது பல நேரங்களில் பலன் அளிப்பதாக உள்ளது.

குற்றவியல் நடை முறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர் நீதிமன்ற த்தின் உயர் அதிகாரங்கள் குறித்து விளக் குகிறது. 

இந்த சட்டப் பிரிவின் அடிப்படை யில் கீழ் நிலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங் களுக்கும்,

காவல் துறைக்கும் உரிய அனைத்து உத்தரவு களையும் பிறப்பிக்கும் அதிகாரம் உயர் நீதி மன்றத்திற்கு வழங்கப் பட்டுள்ளது. 

இந்த அதிகாரத்தின் கீழ், நியாயமான காரணங் களுக்காக புகாரை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளு மாறு காவல் துறைக்கும்,

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணை நீதிமன்றங் களுக்கும் உத்தர விடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு உள்ளது. 

ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல் துறையி னரிடம் புகார் அளிக்கும் போது,

காவல் துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது.

புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத் துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங் களிலும் நடைபெறும் வழக்கமான நடை முறையே. 


சில காவல் நிலையங்களில், யார் மீது புகார் கூறப் படுகிறதோ – அவரையே தொடர்பு கொண்டு,

அவரிடம் முதல் புகாரைதாரர் மீது வேறு புகாரை பெற்று அதை முதல் புகாராக பதிவு செய்வதும் வழக்கத்தில் உள்ளது. 

இத்தகைய சிக்கல்களை தவிர்ப்ப தற்கு குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட ஒரு வழக்குரைஞர் உதவியுடன் புகார் களை அளிப்பது நல்லது. 

இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள் வதற்கு காவல்து றையினர் முனைப்பு காட்டாத நிலையில்,

அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டை யுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலைய த்திற்கு அனுப்பலாம். 

மேலும் புகாரின் நகல்களை, தொலை நகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரி களுக்கும் அனுப்பலாம்.

இதன் மூலம் காவல் துறையினர், குறிப்பிட்ட புகார் குறித்து விசாரணை நடத்து வதற்கான அழுத்த த்தை அளிக்கலாம். 

 

குறிப்பிட்ட புகார் சமூகத்திற்கு எதிரான குற்றச்செயல் குறித்ததாக இருந்தால், அந்தப் புகார் குறித்து அப்பகுதியில் இருக்கும் செய்தியாளர் களை

தொடர்பு செய்தி வெளி வரச் செய்வதும், அந்தப் புகார் மீது விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்ப தாக அமையும். 

இவ்வாறு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் கலங்காது,

அந்தப் புகாரை உரிய முறையில் விசாரிக் காமல் தள்ளி விட முயற்சிக்கும் அதிகாரி களுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை.

இத்தகைய சூழ்நிலை யில், புகார்தாரர் நீதிமன்ற விசாரணை யில் பங்கேற்கவும் சட்டம் வழி காட்டுகிறது. 

குற்றவியல் நடை முறைச் சட்டத்தின் பிரிவு 301 (2), புகார்தாரரின் தரப்பில் அரசு வழக்கறி ஞருக்கு துணையாக,

அரசு வழக்கறிஞர் அல்லாத ஒரு வழக்கறிஞர் செயல் படுவதற்கு அனுமதி அளிக்கிறது. 
குறிப்பிட்ட குற்றப் புலனாய்வு ஆவணங் களையும் புகார்தாரர் பெற முடியும். இதற்கு கிரிமினல் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் வழி வகுக்கிறது.
 

இதன் மூலம் ஆவணங் களைப் பெறும் புகார்தாரரின் வழக்கறிஞர், சாட்சிகள் மற்றும் சான்றா தாரங்கள் ஆய்வு முடிந்த பின்னர்,

அரசு வழக்கறிஞர் பரிசீலிக்கத் தவறிய அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதனை எழுத்து மூலமாக வடித்து குறிப்பிட்ட நீதி மன்றத்தில் சமர்ப்பிக் கலாம். 

இவ்வாறு குற்றவியல் வழக்கில் புகார்தாரர் சார்பில் தனி வழக்கறிஞரை அனுமதிப்ப தற்கு உயர் நீதிமன்றத்தை அணுகுவது நல்லது. 

இந்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையிலும், காவல் துறை நடத்தும் விசாரணை

அல்லது வழக்கின் போக்கு குற்றம் சாட்டப் பட்டவருக்கு ஆதரவளிப்ப தாக நம்புவதற்கு இடம் அளிக்கும் நிலையிலும் கூட புகார்தாரர் அதில் தலை யிடலாம். 

காவல் துறை நியாயமாக நடக்க வில்லை என்பதை நீதிமன்றம் ஏற்கும் வகையில் நிரூபித்தால்,

அந்த வழக்கின் விசாரணையோ, வழக்கையோ உள்ளூர் காவல் துறை அல்லாத வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்த உத்தர விட வேண்டி உயர் நீதிமன்றத்தை அணுக சட்டம் இடம் அளிக்கிறது. 

 

குற்றவியல் நடை முறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர் நீதிமன்றத் திற்கு அளிக்கும் அதிகாரத்தின  அடிப்படை யில் இத்தகைய வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரிக்கும். 

அப்போது இந்த புகார் அல்லது வழக்கு, சிபிசிஐடி எனப்படும் மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கோ

அல்லது சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப் புக்கோ மாற்றப் படும் வாய்ப்புகள் உள்ளன. 

அவ்வாறு புகார் மீதான விசாரணையோ, வழக்கோ வேறு புலனாய்வு அமைப்பு களுக்கு மாற்றப் படும்போது,

புகார்தாரர் உரிய புலனாய்வு அதிகாரி களை அணுகி, தங்கள் ஐயப்பாடு களை எடுத்துரைக்க முடியும். 


இவை அனைத்தி ற்கும் தேவை, புகார் அளிக்கும் நிலையிலும் அதைத் தொடர்ந்த நிலையிலும்

குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட வழக்குரைஞரின் உதவியே!

ஒரு புகார் காவல் துறையின் கவனத்தை கவர்ந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டால் அடுத்த நடவடிக்கை கைது செய்வ தாகவே அமையும். 

மிகச்சில நேரங்களில் குற்ற வாளிகளும், மிகப்பல நேரங்களில் குற்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நபர்களும் கைது செய்யப் படுவர். 

சில அரிதான நேரங்களில் நாம் மேலே பார்த்தது போல புகார் தரும் நபர் மீதே வேறு புகார் பதிவு செய்யப் பட்டு கைது செய்யப் படுவதும் உண்டு. 

எப்படிப் பார்த்தாலும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நடவடிக்கை யாக “கைது” இருக்கிறது. இந்த கைது குறித்து அடுத்து பார்ப்போம்…!
Tags: