சீனாவில் திடீரென உருவான சிறப்பு மருத்துவமனை !

உலகை அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. 
சீனாவில் திடீரென உருவான சிறப்பு மருத்துவமனை !


சுவாசக் கோளாறு களை ஏற்படுத்தி, உயிரைக் குடிக்கும் கொரோனா வால் சீனாவில் மட்டும் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து உலக சுகாதார அமைப்பானது சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில், கொரோனா வைரசினால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,

நோயைக் கட்டுப் படுத்தும் நோக்கில் சீனாவில் சிறப்பு மருத்துவமனை ஒன்று 9 நாட்களில் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.
வுகான் நகரில் கட்டப்பட்ட இரண்டு புதிய மருத்துவ மனைகளில் 269,000 சதுர அடி கொண்ட கட்டிடத்தில் ஒன்று தற்போது செயல் பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. 
சீனாவில் திடீரென உருவான சிறப்பு மருத்துவமனை !

சார்ஸ் வைரஸை சமாளிக்க பீஜிங்கில் 2003 இல் கட்டப்பட்ட மருத்துவ மனையை அடிப்படை யாகக் கொண்டு தற்போது இந்த புதிய கட்டிடங்க ளுக்கான வடிவமைப்பை மேற்கொண் டுள்ளனர்.

சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் அரும்பாடு பட்டு இந்த மருத்துவ மனையை கட்டி முடித்துள்ளனர். 
பொதுவாக இம்மாதிரியான மருத்துவ மனைகளை கட்டி முடிக்க 2 ஆண்டுகள் வரை தேவைப்படும் என துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுமானத்தை விரைவு படுத்துவதற் காக நாடு முழுவதிலு மிருந்து பொறியாளர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.
சீனாவில் திடீரென உருவான சிறப்பு மருத்துவமனை !

மட்டுமின்றி இந்த மருத்துவ மனையானது மற்ற மருத்துவ மனைகளில் இருந்து

பொருட்களை வரவழைத்துக் கொள்ளவும் அல்லது தொழிற் சாலைகளில் இருந்து ஆர்டர் செய்யவும் அனுமதிக்கப் படும்.

1000 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவ மனையில் இன்று முதல் நோயால் பாதிக்கப் பட்டவர்கள் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள் என சீன அரசு அறிவித்துள்ளது.

இந்த மருத்துவ மனையானது சீன இராணுவத்தின் கட்டுப் பாட்டுக்கு வழங்கப் பட்டதாக கூறப்படுகிறது. 

சுமார் 1,400 இராணுவ மருத்துவர்கள் மக்கள் விடுதலை இராணுவத்தி லிருந்து புதிய மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இங்கு பணியாற்ற விருக்கும் பெரும்பாலான மருத்துவர்கள், 
கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் சீனாவில் 650 பொது மக்களை பலிகொண்ட சார்ஸ் வைரஸ் காலகட்டத்தில் பணியாற்றி யவர்கள் என கூறப்படுகிறது.
Tags: