கண்ணாடிக்குள் இருந்த சிறுவனை தாக்க வந்த புலி !

0
அயர்லாந்து நாட்டில் உள்ள டப்ளின் உயிரியல் பூங்காவிற்கு அந்நாட்டைச் சேர்ந்த சீன் என்ற 7 வயது சிறுவன் தன் தந்தையுடன் சென்றார். 
சிறுவனை தாக்க வந்த புலி


பூங்காவில் புலியைப் பார்த்த அந்த சிறுவன் புலியுடன் புகைப்படம் எடுக்க ஆசைப் பட்டுள்ளான்.

புலி ஒரு கண்ணாடிக்கு வெளியே இருந்தது. இவன் பாதுகாக்கப்பட்ட அறையில் நின்றே புலியைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

புகைப்படம் எடுப்பதற்காக அந்த கண்ணாடி அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது கண்ணாடி அருகே நின்ற புலி இரை தேடிக் கொண்டிருந்தது.

இந்த சிறுவனைப் பார்த்ததும் நமக்கு நல்ல இரை சிக்கி விட்டதாக நினைத்து அந்த சிறுவனைப் பாய்ந்து பிடிக்க நினைத்தது. ஆனால் நல்ல வேளையாகக் கண்ணாடி இருந்ததால் எதுவும் நடக்க வில்லை.

இந்த சம்பவத்தைப் புகைப்படம் எடுப்பதாக நினைத்து அந்த சிறுவனின் தந்தை வீடியோ எடுத்து விட்டார். 

இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை ஷேர் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர். 


இது குறித்து உங்கள் கருத்துக் களையும் கமெண்டில் சொல்லுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)