முஷாரப்பின் தூக்கு தண்டனை ரத்து !

0
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை லாகூர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தர விட்டுள்ளது.
முஷாரப்பின் தூக்கு தண்டனை ரத்து !
முஷாரப் அதிபராக இருந்த போது 2007-ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது 2013-ஆம் ஆண்டு தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கு நடந்து கொண்டிருந்த போதே 2016-ல் துபாய் சென்ற முஷாரப் பாகிஸ்தான் திரும்ப வில்லை.

கடந்த டிசம்பர் 17-ம் தேதி தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், முஷாரப்பிற்கு தூக்கு தண்டனை அறிவித்தது. 

இதற்கு எதிரான மறுசீராய்வு மனுவை விசாரித்த லாகூர் நீதிமன்றம், முஷாரப் மீதான வழக்கு அரசியலமை ப்பிற்கு எதிரான என கூறி தண்டனையை ரத்து செய்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)