ப்ரா அணிந்த செம்மறி ஆடு ஏன் தெரியுமா? இணையத்தில் வைரல் !





ப்ரா அணிந்த செம்மறி ஆடு ஏன் தெரியுமா? இணையத்தில் வைரல் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
இங்கிலாந்தில் செம்மறி ஆடு ஒன்று ப்ரா அணிந்த படி நடமாடும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதன்பின் தான் அதற்கான காரணத்தில் மிகப்பெரிய சோகம் மறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ப்ரா அணிந்த செம்மறி ஆடு ஏன் தெரியுமா?
ப்ரா அணிந்த செம்மறி ஆட்டினை முதலில் வினோதமாக பார்க்க ஆரம்பித்தார். கேலிக்காக இப்படி செய்திருப்பார்கள் என்றும் சிலர் பேச ஆரம்பித்தார்கள். 
ஆனால் ஏன் என்ற உண்மை தெரிய வந்தபோது அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தார்கள்.

பிராங்க்ளின் வெட்ஸ் லைஃப்ஸ்டைல் ஃபார்ம்ஸ் தான் இந்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. “ரோஸ் என்ற செம்மறி ஆடு 3 குட்டிகளை பெற்றுள்ளது.
ப்ரா அணிந்த செம்மறி ஆடு
3 குட்டிகளை பெற்றதால் இந்த செம்மறி ஆட்டின் கர்ப்பப்பை கீழே இறங்கி உள்ளது. அதனை சரியாக பராமரிக்காமல் விட்டால் அந்த கர்ப்பப்பை தரையில் உரசி செம்மறி ஆடு இறக்கும் நிலை ஏற்படும். 

அதனை தவிர்க்க பெண்கள் அணியும் ப்ராவை செம்மறி ஆட்டிற்கு அணிவித்துள்ளனர்.
இதன் மூலம் கர்ப்பப்பை தரையில் உரசாமல் அது மேலே தூக்கி பிடிக்கும்“ என்றுள்ளனர். செம்மறி ஆட்டின் உயிரை காபாற்றும் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)