குடியுரிமை திருத்தச் சட்டம் - உச்ச நீதிமன்றம் சென்ற கேரளா !





குடியுரிமை திருத்தச் சட்டம் - உச்ச நீதிமன்றம் சென்ற கேரளா !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் சென்ற கேரளா


குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பு களுக்கு மத்தியில் அதனை ஆளும் பாஜக அரசு சட்டமாக்கி யுள்ளது. 

எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மை க்கும், 

பாரம்பரியத்து க்கும் ஆபத்து வந்து விடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகளை இடம் பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களு க்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமும் பூதாகரமாகி யுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்த மாட்டோம் என மேற்குவங்கம், பஞ்சாப், கேரளா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இதனிடையே, நாட்டிலேயே முதன் முறையாக இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து கேரள சட்ட மன்றத்தில் டிசம்பர் 31ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 

இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும் மத்திய அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆனால் “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் கேரளம். மாநில சட்ட மன்றங்களுக் கென்று தனி உரிமைகள் உள்ளன. 

அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கை களை மீறும் வகையில் உள்ளதால் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப் பட்டது” என கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.


அதே சமயம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானம், சட்ட ரீதியாகவும், அரசிய லமைப்பின் படியும் செல்லாது. 

குடியுரிமைச் சட்டம் மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் உள்ளது.

எனவே மாநில அரசின் தீர்மானம் செல்லு படியாகாது என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 

அதில், குடியுரிமை சட்டத் திருத்தம் மதச்சார்பற்ற அடிப்படை கொள்கை களுக்கு முரணாக உள்ளது. அரசியல் சாசன பிரிவு 14, 21, 25க்கு இச்சட்டம் எதிரானது என தெரிவிக்கப் பட்டுள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த முதல் மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)