அமெரிக்க தூதரகத்தின் மீது இலக்கு வைத்து ஈரான் மீண்டும் தாக்குதல் !





அமெரிக்க தூதரகத்தின் மீது இலக்கு வைத்து ஈரான் மீண்டும் தாக்குதல் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி யுள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்


ஈரான் ராணுவ தளபதி சுலைமானி அமெரிக்காவால் கொல்லப் பட்டதால் இருநாடுக ளிடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் களை நடத்தி வருகிறது.

இதற்கு அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனாலும் ஈரான் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று பாக்தாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

அமெரிக்கா தூதரகம் அருகே 2 ஏவுகணைகள் விழுந்ததாக ஈராக் செய்திகள் தெரிவிக் கின்றன.

3-வது ஏவுகணை ஒன்றும் வீசப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)