200 ஆண்டுகளாக சேரில் யார் அமர்ந்தாலும் கொல்லும் பேய் !





200 ஆண்டுகளாக சேரில் யார் அமர்ந்தாலும் கொல்லும் பேய் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
ஒரு தூக்குத் தண்டனை கைதிவிட்ட சாபத்தால் இன்று ஒரு சேரில் யார் அமர்ந்தாலும் அவர்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள் என 
200 ஆண்டுகளாக சேரில் யார் அமர்ந்தாலும் கொல்லும் பேய் !
யார் சொல்லி நீங்கள் கேட்டாலும் அவர்கள் இது எந்த புத்தகத்தில் வந்த பேய்க்கதை என நீங்கள் திரும்பக் கேட்பீர்கள். 

ஆனால் இது ஒரு உண்மை சம்பவம். இப்படியான ஒரு சேர் உண்மை யிலேயே இருக்கத் தான் செய்கிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்.
கள்ளப்பணம்

17ம் நூற்றாண்டில் டேனியல் ஆவுட்டி என்பவர் லண்டனில் உள்ள வடக்கு யார்க் என்ற பகுதியில் உள்ள கிர்பே விஸ்கே என்ற பகுதிக்குக் குடிபெயர்ந்தார். இவர் அங்கு ஒரு தோட்டம் ஒன்றை வாங்கி அதில் விவசாயம் செய்து வந்தார். 

விவசாயம் தான் அவரது பிரதான தொழில் என அனைவரும் கருதி வந்த நிலையில் இவர் கள்ள நோட்டு தயாரிப்பதை ரகசியமாகச் செய்து வந்துள்ளார். 

இதன் மூலம் இவர் தனக்குத் தேவையான பணத்தைத் தானே பிரிண்ட் அடித்து அதைச் செலவு செய்துள்ளார்.

பாதாள அறை
200 ஆண்டுகளாக சேரில் அமர்பவர்களை கொல்லும் பேய்.. யார் அமர்ந்தாலும் மரணம் !
இதற்காக அவர் தனது தோட்டத்தில் ஒரு வீட்டைக் கட்டி அதை வீட்டிற்கு அடியில் ரசிகருமாக ஒரு பெரும் கள்ள நோட்டு அடிக்கும் தொழிற்சாலை போன்ற அமைப்பை உருவாக்கி யுள்ளார். 

அதன் மூலம் அவர் வீட்டிற்கு யார் சென்றாலும் அவர் கள்ள நோட்டு அடிக்கும் விஷயத்தைக் கண்டு பிடிக்கவே முடியாது.

மலர்ந்த காதல்

அந்த அளவிற்கு ரகசியமாகத் தனது வேலைகளைச் செய்து வந்தார். அவருக்கு எலிசெபத் என்ற மகள் இருந்தார். எலிசெபத்திற்கும், அதே பகுதியில் வசித்து வந்த தாமஸ் பஸ்பே என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. 

இந்த காதல் திருமணத்தில் போய் முடிந்தது. ஆனால் இந்த திருமணத்தில் டேனியல் ஆவுட்டிக்கு விருப்ப மில்லை.

குடிகாரர்
200 ஆண்டுகளாக சேரில் யார் அமர்ந்தாலும் கொல்லும் பேய் !
டேனியலுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லாததற்கு காரணம் பஸ்பே ஒரு குடிகாரர் என்பதால் தான். 

பஸ்பே தினமும் பாரிக்குச் சென்று குடிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தினமும் இவ்வாறு குடித்து விட்டுத் தான் வீட்டிற்கு வருவாராம்.
தனி சேர்

பஸ்பே தினமும் வருவதால் அவருக்கு என ஒரு சேரை அந்த பார் நிர்வாகம் வழங்கி யிருந்தது. அவர் தினமும் அந்த சேரில் தான் அமர்ந்து மது அருந்துவார். 

அவருக்கு அந்த சேர் மிகவும் பிடித்துப்போய் இருந்தது. இந்நிலையில் ஒரு நாள் வெகு நேரமாகியும் பஸ்பே வீட்டிற்கு வராமல் இருந்தார்.

சண்டை
200 ஆண்டுகளாக சேரில் அமர்பவர்களை கொல்லும் பேய்.. யார் அமர்ந்தாலும் மரணம் !
அப்பொழுது அவரது மாமனார் டேனியல் ஆவுட்டியும் அவரது மகள் எலிசெபத்தும் அவருக்காக வீட்டில் காத்துக் கொண்டிருந்தனர். 

வெகு நேரம் கழித்து பஸ்பே வீட்டிற்கு வந்த போது அவருக்கும் டேனியலிற்கும் பெரும் சண்டையே வெடித்தது. டேனியலுக்கு தன் மகள் எலிசெபத் பஸ்பே உடன் வாழ்வது படிக்க வில்லை.
கொலை

இந்நிலையில் இருவருக்குள் நடந்த சண்டை முற்றிப் போகவே குடி போதையில் இருந்த பஸ்பே அங்கிருந்த ஒரு சுத்தியலை எடுத்து டேனியல் ஆவுட்டியின் தலையில் அடித்தார். 

அதனால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டி அந்த இடத்திலேயே டேனியல் ஆவுட்டி மரண மடைந்தார்.

தூக்கு தண்டனை

இதை யடுத்து போலீசார் பஸ்பேவை கைது செய்தனர். அந்த வழக்கில் பஸ்பே மீது குற்றம் நிரூபிக்கப் பட்டது. 

அவருக்கு அந்நாட்டு சட்டப்படி தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. இந்நிலையில் அவர் சிறையில் அடைக்கப் பட்டார்.

கடைசி ஆசை
200 ஆண்டுகளாக சேரில் யார் அமர்ந்தாலும் கொல்லும் பேய் !
அவருக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் காலம் வந்தது. ஒவ்வொரு தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படும் போதும் 

அவருக்குக் கடைசி ஆசையைக் கேட்டு அதை நிறை வேற்றுவது வழக்கம் அவ்வாறாக பஸ்பேவின் கடைசி ஆசை கேட்கப் பட்டது.

மீண்டும் சேர்

ஆவர் தான் எப்பொழுதும் அமர்ந்து மது அருந்தும் சேரில் அதே பாருக்கு சென்று மது அருந்த வேண்டும் எனக் கூறியுள்ளார். 

இதை யடுத்து கோர்ட் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர் மது அருந்த அனுமதிக்கப் பட்டார்.
தவறை உணர்ந்தார்

இந்நிலையில் அதில் அமர்ந்து மது சாப்பிட்ட அவருக்கு நடந்ததை எல்லாம் யோசித்து பார்த்தார். 

அவருக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அவர் தினமும் மது குடித்தது தான் எல்லா பிரச்சினை களுக்கும் மூலக்காரணம் என்பதை உணர்ந்து கொண்டார். 

இவருக்குத் தினமும் இந்த பாருக்கு குடிக்க வருவதற்குக் காரணம் மது போதையை விட இந்த தனிச்சேர் மீதான பெறுமை குறித்த போதை தான் என்பதையும் உணர்ந்தார்.

சாபம்
200 ஆண்டுகளாக சேரில் அமர்பவர்களை கொல்லும் பேய்.. யார் அமர்ந்தாலும் மரணம் !
இதனால் கோபத்தில் அவர் அந்த முறை மது குடித்து விட்டு எழுந்து செல்லும் போது இனி இந்த சேரில் அமர்பவர்கள் அழிவை சந்திப்பார்கள் என சாபம் விட்டு சென்றுள்ளார். 

அதன் பின் அந்த பார் நிர்வாகம் அந்த சேரில் யாரையும் அமர அனுமதிப்ப தில்லை. அதையும் மீறி அமர்ந்த சிலர் மரணமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
பலிக்கும் சாபம்

இரண்டாம் உலகப் போரின் போது கனடாவைச் சேர்ந்த விமானி ஒருவர் இந்த பாருக்கு வந்து இந்த சேரை பார்த்து அதைக் கதையைக் கேட்டு, இது எல்லாம் சும்மா கட்டுக் கதை, இதை எல்லாம் நான் நம்ப மாட்டேன். 

நான் இதில் அமர்ந்து உங்களுக்கு நிரூபணம் செய்கிறேன் எனச் சொல்லி அதில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். 

அவர் அதன் பின் போர் விமானத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கிப் பலியாகி விட்டார். இப்படியாக அதில் அமர்ந்த பலர் உயிரை விட்டதாகக் கூறப்படுகிறது.

காட்சி பொருளாக மாறியது.
200 ஆண்டுகளாக சேரில் யார் அமர்ந்தாலும் கொல்லும் பேய் !
1970கள் வரை பலர் இந்த சேரில் அமர்ந்துள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம் மரண மடைந்து கொண்டே இருந்துள்ளனர். 

இதனால் அந்த பார் நிர்வாகம் அந்த சேரை சுவரில் ஒரு காட்சிப் பொருளாக மாட்டிவிட்டது. இனி அந்த சேரில் யாரையும் உட்கார அனுமதிக்க வில்லை என்றே கூறப்படு கிறது.

தற்போதும் கவனம்

தற்போது அந்த சேர் இங்கிலாந்தின் திரிஷ்க் என்ற பகுதியில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் அந்த சேர் மக்கள் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது. 

இன்று அதைப் பராமரிப்பு பணி செய்யும்போது கூட அதில் யாரும் அமர்ந்து விடாத படி அந்த அருங்காட்சியக நிர்வாகம் பார்த்து வருகிறது.
பலி வாங்கும் ஆவி

இந்த மரணங்கள் எல்லாம் எப்படி நடக்கிறது என பலர் பல விதமாக கூறுகிறார்கள். சிலர் இந்த மரணங்களை எல்லாம் பஸ்பேவின் ஆவி தான் செய்கிறது. 

அது இந்த சேர் இன்றும் தனது சேராகவே கருதுகிறது. அதனால் மற்ற யார் அதில் அமர்ந்தாலும் அவர்களை மரணத்திற்கு அழைத்து செல்கிறது என சொல்லுகி றார்கள்.

உண்மை காரணம்
200 ஆண்டுகளாக சேரில் அமர்பவர்களை கொல்லும் பேய்.. யார் அமர்ந்தாலும் மரணம் !
அதே நேரத்தில் சிலர் இது தற்செயலான சம்பவம் என்றும், அவரது சாபத்தால் மரணங்கள் ஏற்பட வில்லை என்றும், சிலர் இது எல்லாம் கட்டுகதை என்றும், சிலர் அந்த பாருக்கான விளம்பரம் தான் இது என்றும் கூறுகின்றனர். 

ஆனால் எது உண்மை என்பது இதுவரை யாருக்கும் தெரிய வில்லை. இதில் அமர்ந்து இறந்ததாக கூறப்படும் சிலர் இதில் அமர்ந்ததால் இறந்தார்களா என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை.

தீராத மர்மம்

அதே நேரத்தில் இதில் சாபம் விடப்பட்ட பின்பு அமர்ந்த யாரும் உயிருடன் இல்லை என்றும் கூறப்படுகிறது. 
இன்றும் உலகளவில் தீர்க்க முடியாத ஒரு மர்ம பொருளாக இந்த சேர் மாறி விட்டது. பலர் இந்த சேரை சாவிற்கான சேர் என்றே அழைக்கிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)