கடிக்க வந்த பாம்பை பாய்ந்து வந்து பஞ்சு பஞ்சாக ஆக்கி விட்ட நாய்கள் !

0
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒத்தக்கால் மண்டபம் அருகே இருக்கும் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் விவசாயி யாக பணி செய்து வருகிறார்.
கடிக்க வந்த பாம்பை


இவரது வீட்டின் அருகே ராமலிங்கத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த நிலையில்,

நேற்று காலை ராமலிங்கம் தனது நண்பருடன் தோட்டப் பகுதியில் இருக்கும் தனது மாடுகளுக்கு தீவனம் வைப்பதற் காக சென்றுள்ளார்.

இந்த நேரத்தில், இவருடன் பாதுகாப்பதற் காக வளர்க்கப்பட்டு வரும் மூன்று நாய்களும் உடனே சென்றுள்ளது. 

இந்த நிலையில், அப்பகுதி வழியாக சுமார் 6 அடி நீளமுள்ள விஷ பாம்பு இராமலிங்கத்தை நோக்கி வேகமாக வந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இராமலிங்கம் மற்றும் அவர் நண்பர் இருவரும் பயத்தில் செய்வ தறியாது திகைக்கவே, 


இதனை கண்ட 3 நாய்களும் தனது எஜமானருக்கு ஆபத்து வந்ததை உணர்ந்து பாம்பு நோக்கி சீறிப்பாய்ந்து கடித்து குதறி யுள்ளது.

இதனை யடுத்து பாம்பு கடித்து குதறி கொன்ற காட்சியை இராமலிங்கத் தின் நண்பர் தனது அலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். 

தனது எஜமானருக்கு ஆபத்து என்றதும், நாய்கள் பாம்பை கடித்து குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)