600 ரூபாய் கடனைத் திருப்பிக் கேட்டதால் ஒரு கொலை அரங்கேறியிருக்கிறது !





600 ரூபாய் கடனைத் திருப்பிக் கேட்டதால் ஒரு கொலை அரங்கேறியிருக்கிறது !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
ஒரு கொலைக்கான காரணம் இவ்வளவு சாதாரண மாக இருக்குமா என்று கேட்கலாம், ஆம் 600 ரூபாய் கடனைத் திருப்பிக் கேட்டதால் ஒரு கொலை அரங்கேறி யிருக்கிறது.
கடனைத் திருப்பிக் கேட்டதால் ஒரு கொலை


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கெரடமுத்தூரை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் நந்தகுமார்.

இவர் தனது நண்பர்களுடன் கடந்த ஞாயிறு அன்று விஜய், சுதாகர் என்ற இரு நண்பர்களுடன் மலைமேடு என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். 

நண்பர்கள் இருவரும் மது அருந்தி யுள்ளனர். நந்தகுமார் மது அருந்த வில்லை.

நந்த குமாரிடம் விஜய் ஏற்கெனவே 600 ரூபாய் கடனாக வாங்கி யுள்ளதாக தெரிகிறது.
அந்தப் பணத்தை திருப்பிக் கேட்ட நிலையில் இருவருக்கு மிடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விஜய் போதையில் நந்தகுமாரை தள்ளி விட்டதில் அவர் ஒரு பாறை மீது விழுந்து உயிரிழந் துள்ளார்.

இது தொடர்பாக நந்தகுமார் பெற்றோர் காமநாயக்கன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதனைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் விஜய் மற்றும் சுதாகர் இருவரையும் கைது செய்து காமநாயக்கன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 
அந்த விசாரணை யின் போதுதான் தங்களுக்கு கொடுத்த 600 ரூபாய் கடனை திருப்பி கேட்டதால் அவரை கொலை செய்தது தெரிய வந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)