யார் இந்த காவல் ஆணையாளர் விஸ்வநாத் சஜ்ஜனார் - ஹைதராபாத் என்கவுண்டர் !

0
ஐதராபாத் திஷா சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப் பட்டதை தொடர்ந்து, காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனாரை பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஹைதராபாத் என்கவுண்டர்


1996-ம் ஆண்டு தேர்வான, ஐ.பி.எஸ். அதிகாரியான சஜ்ஜனார், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்-ஆக அறியப் படுகிறார். 

2008-ம் ஆண்டு, தெலங்கானா வின், வாரங்கல் மாவட்ட காவல் கண்காணிப் பாளராக இருந்த போது, இவரின் தலைமையில் ஓர் என்கவுன்டர் நடந்துள்ளது.

இன்ஜினீயரிங் மாணவி ஒருவரை, ஸ்ரீனிவாஸ் என்ற இளைஞர் ஒருதலை யாகக் காதலித்துள்ளார். 

ஆனால், காதலை ஏற்க மறுத்ததால் ஸ்ரீனிவாஸ் தனது நண்பர் களுடன் சேர்ந்து மாணவி மீது ஆசிட் வீசி தாக்கி யுள்ளார்.

இந்த வழக்கில் தற்போது நடத்தப்பட்ட என்கவுன்டர் போன்று, சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற சஜ்ஜனார் தலைமை யிலான குழு, ஆசிட் வீச்சில் ஈடுபட்டவர் களை சுட்டுக் கொன்றது. 
யார் இந்த விஸ்வநாத் சஜ்ஜனார்


இதனிடையே, சஜ்ஜனார் சிறப்பு காவல் படை ஐ.ஜி.-யாக இருந்த போது தான், நக்ஸலைட் அமைப்பைச் சேர்ந்த நயாமுதீன் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். 

இந்நிலையில், ஹைதராபாத் திஷா சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் போலீசாருக்கு அறிவுறுத்தி யதாக கூறப்படு கிறது. 

இதன் காரணமாகவே, தப்பியோட முயன்ற 4 பேரையும், என்கவுன்டரில் சுட்டுக் கொல்ல சஜ்ஜனார் உத்தர விட்டுள்ளார்.

என்கவுண்டர் நடந்தது எப்படி?
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)