ரசிகர்களிடையே விரக்தியை வெளிப்படுத்திய விராட் !

0
ரிஷப் பந்த் கேட்சை விட்டதால் ரசிகர்கள் தோனி, தோனி என கூச்ச லிட்டதால் கேப்டன் விராட் கோலி ரசிகர்களிடையே விரக்தியை வெளிப்படுத்தினார்.
விரக்தியை வெளிப்படுத்திய விராட்


இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கு பின் தோல்வி குறித்து பேசிய விராட் கோலி “இந்திய வீரர்களின் மிக மோசமான பீல்டிங் தோல்விக்கு முக்கிய காரணம்“ என்று தெரிவித்தார்.

நேற்றைய போட்டியின்போது, புவனேஸ்வர் குமார் 5-வது ஓவரை வீசும் போது எவின் லூயிஸ் பந்து ரிஷப் பந்திற்கு கேட்சாக அமைந்தது. ஆனால் ரிஷப் பந்த் அந்த கேட்சை தவறவிட்டார்.

இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி, தோனி கூச்சலிட்டனர். இதனால் பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த கோலி கோபமடைந்தார். 
ரசிகர்களை பார்த்து இதுபோன்று தேவை யில்லாமல் கூச்சலிட வேண்டமென்று தனது விரக்தியை வெளிப்படுத் தினார். கோலியின் இந்த செய்கை இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

ரிஷப் பந்த் கேட்சை தவற விட்டால் தோனி, தோனி என்று கூச்சலிட வேண்டாமென்று செய்தியாளர்கள் சந்திப்பின் போதே கோலி கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)