ஒரு வீட்டிற்குள் இரு மாவட்டங்கள் எங்கு செல்வது?

0
தமிழகத்தின் 34வது புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி கடந்த சில தினங்களு க்கு முன்பு உதயமான நிலையில், அந்த மாவட்டத்தி லுள்ள உளுந்தூர் பேட்டை அருகே உள்ள 
ஒரு வீட்டிற்குள் இரு மாவட்டங்கள் எங்கு செல்வது?

கருவேப்பிலை பாளையம் கிராமத்தின் ஒரு பகுதி தற்போது விழுப்புரம் மாவட்டத்தி லும், 

கிராமத்தின் மற்றொரு பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வருவதால் கிராம மக்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகி யுள்ளனர்.

கருவேப்பிலை பாளையம் கிராமம் திருநாவலூர் ஒன்றியம் மற்றும் திருவெண்ணை நல்லூர் ஒன்றியம் என இரு ஒன்றியத்தில் பிரிந்து இருக்கிறது. 

மேலும், இந்த இரண்டு ஒன்றியத்தி ற்கும் உட்பட்ட மடப்பட்டு, சிறுத்தனூர், சிருளாப்பட்டு, காந்தலவாடி நான்கு ஊராட்சிகளும் கருவேப்பிலை பாளையம் கிராமத்தில் பகுதிகளாக வருகின்றன.

இந்த கிராமத்தில் சுமார் 6000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

நான்கு ஊராட்சிகள், இரண்டு தாலுக்கா அலுவல கங்கள் மற்றும் இரண்டு காவல் நிலையங்கள் உள்ளதால் இந்த கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளு க்கும், 

அரசின் திட்டங்களை பெறுவதிலும் ஒரே இடத்தை நாடி செல்ல முடியாமல் சுற்றி அலைய வேண்டிய சூழலுக்கு தள்ளப் பட்டிருக்கின் றனர். 

இதனால், இப்பகுதி மக்கள், தங்கள் கிராமத்தை ஒரே ஊராட்சியில் கொண்டுவர வேண்டுமென பல ஆண்டு களாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஒரு வீட்டிற்குள் இரு மாவட்டங்கள்

இந்நிலை யில், தமிழக அரசு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கள்ளக் குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தது. 

இதனை தொடர்ந்து நான்கு ஊராட்சி களில் பிரிந்து தனித் தனியே இருக்கும் கருவேப்பிலை பாளையம் கிராமம் தற்போது ஒரு பகுதி கிராமம் விழுப்புரம் மாவட்டத்திலும், 

மற்றொரு பகுதி கிராமம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வருவதால் மேலும் குழப்பத்தை ஏற்படுத்து கிறது என்கின்றனர் அப்பகுதி கிராமவாசிகள். 

இரு மாவட்டமாக பிரிந்திருக்கும் இந்த கிராமத்தின் சில தெருக்களில் உள்ள வீடுகள் சிலவற்றில் முன்பாதி விழுப்புரத்தி லும், பின்பாதி வீடுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தி லும் வருகின்றன.

மேலும், இந்த கிராமத்தில் தந்தை மகன் ஒன்றாக வசிக்கும் வீடு ஒன்றில் மகன் இருக்கும் முன் வாசல் விழுப்புரம் மாவட்டத்தி லும், தந்தை இருக்கும் பின் வாசல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தி லும் இருக்கிறது. 

இது குறித்து கருத்து தெரிவித்த அந்த வீட்டில் வசிக்கும் மகன் ரஞ்சித்குமார், "இரண்டு மாவட்டமாக பிரித்ததால் 
எனது வீட்டின் முன் வாசல் விழுப்புரம் மாவட்டத்தி லும், எனது தந்தை வசிக்கும் பின் வாசல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தி லும் இருக்கிறது.

சொந்த வீட்டிலேயே எங்களை பிரிந்து விட்டனர். அவசர தேவை களுக்கு மருத்துவமனை களுக்கோ, அரசு அலுவலகங் களுக்கு செல்லும் போது 

எந்த மாவட்டம் என்று குறிப்பிடுவதில் சிக்கல் நீடிக்கிறது ஒன்றுமே புரியவில்லை. 

மேலும், அரசு அலுவலகங் களுக்கு சொந்த தேவைக்கு செல்லும் போது கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு அதிகாரிகள் இது விழுப்புரம் மாவட்டத்தில் வருகிறது என்கிறார்கள். 

விழுப்புரம் மாவட்ட அரசு அதிகாரிகளிடம் சென்று கேட்கும்போது இது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிறது என்கிறார்கள். இதனால் எங்கு சொல்வதென்றே தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது," என்கிறார்.
கள்ளக்குறிச்சி

கருவேப்பிலை பாளையம் கிராமத்தில் வசிக்கும் அசோக் குமார் இதுகுறித்து, "இங்கே அருகே உள்ள விழுப்புரம் செல்வதற்கு 16 கி.மீ.,தான் ஆகிறது. 

ஆனால், கள்ளக்குறிச்சி செல்வதற்கு 100 கி.மீ., வரை செல்ல வேண்டிய திருக்கிறது. இங்கே வசிக்கும் மக்கள் அனைவரும் விவசாயத்தை தொழிலாக கொண்டு இருக்கின்றனர். 

அவர்களின் தேவை களுக்கு வெளிய பயணம் செல்ல நேரிடும் போது அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம் தான் அவர்களின் அன்றாடம் சென்று வருவதற்கு சுலபமாக இருக்கிறது.

மேலும், தினமும் 100, 200 ரூபாய் களுக்கு வருமானம் ஈட்டும் இவர்களுக்கு வெகு தொலைவு சென்று அங்கே தங்களின் தேவைகளுக்கு அலைவது என்பது அவர்களால் முடியாத ஒன்று. 

ஆகவே நான்கு ஊராட்சிகளில் பிரிந்து இருக்கும் இந்த கருவேப்பிலை பாளையம் கிராமத்தை ஒரே ஊராட்சியாக அறிவித்து இதை ஒரே மாவட்டமாக விழுப்புரத்தில் இணைக்க வேண்டும்," என்கிறார்.
அக்கிராமத்தில் வசிக்கும் அன்பரசன் கூறும் போது, "நான்கு ஊராட்சியில் இருக்கிற இந்த கிராமத்தை இப்போது இரண்டு மாவட்டமாக பிரிக்கப் பட்டதால் மக்கள் அதிக குழப்பத்திற்கு ஆளாகி விட்டனர். 

இதற்கு முன்பு நான்கு ஊராட்சி ளாக இருக்கும் போதே எங்களுக்கான அடிப்படை தேவைகள் சரியாக கிடைக்காமல் அவதிப் பட்டோம். 

அதற்காக எங்களை ஒரே வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி விழுப்புரம் மாவட்டம் ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். 
விழுப்புரம்

ஆனால், இப்போது இரு மாவட்டங் ளாக பிரித்திரு ப்பதால் மேலும் கிராம மக்களின் மனதில் இது அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது," என்கிறார்.

கருவேப்பிலை பாளையம் கிராமம் இரண்டு மாவட்டங்களில் தனித் தனியே பிரிந்து இருப்பதனால் எவ்வாறு மக்களுக் கான தேவைகளை சரி செய்து வருகிறீர்கள் என்று 

அரசு வருவாய் துறை அதிகாரி களிடம் கேட்டது பிபிசி தமிழ், "எங்கள் ஊராட்சி சார்ந்த கிராமப் பகுதியில் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றி வருகிறோம். 
மேலும், தற்போது மாவட்டங்களை பிரித்ததில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் குறித்து ஆராய்வதில் குழப்பான சூழலே நிலவுகிறது," என்றார்.

மேலும், "இந்த கிராமம் இரு மாவட்டங் களிலும் வருவது குறித்து மாவட்ட நிர்வாகம்தான் கூற முடியும்" என்றார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை பிபிசி தமிழ் பலமுறை தொடர்பு கொண்டு முயற்சித்த போதும், நமது அழைப்பு ஏற்கப்பட வில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)