ஆதாரை இணைக்காவிட்டால் பான் கார்டு இருந்தும் பயன் இல்லை !

0
விரைவில் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கா விட்டால் பான் கார்டு பயன்படுத்த முடியாத படி செயல் இழக்கும் வாய்ப்பு உள்ளது.
பான் கார்டு இருந்தும் பயன் இல்லை


மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க முதலில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை அவகாசம் அளித்தது.

பின், மார்ச் 31, 2019 வரை காலக்கெடு நீட்டிக்கப் பட்டது. ஆனால், கடந்த மார்ச் 31ஆம் தேதி இந்தக் காலக்கெடு மேலும் ஒரு முறை நீட்டிப்பு செய்யப்பட்டது. 

நேரடி வரி வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், பான் கார்டு – ஆதார் கார்டு இணைப்புக் கான காலக்கெடு செப்டம்பர் 30, 2019 வரை நீட்டிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது.

அத்துடன் வருமான வரி தாக்கல் செய்யும் போது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்திருப்பது கட்டாயம் என்றும் தெளிவு படுத்தியது.

இணைக்கா விட்டால்?

ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்பட வில்லை என்றால் அந்த பான் கார்டு முடக்கப்படும். இதனால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி யிருக்கும்.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. 

வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்டு முக்கிய ஆவணமாக இருப்பதால் பல வகைகளில் சிக்கல் ஏற்படும்.

இதனைத் தவிர்க்க பான் கார்டுடன் ஆதார் எண்ணை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைத்து விடுவது நல்லது. 
பான் கார்டை ஆதாருடன் இனைப்பது கட்டாயம்


கடந்த ஆண்டு மட்டும் 11.44 லட்சம் பான் கார்டுகள் பல்வேறு காரணங்களுக் காக முடக்கப் பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப் பட்டுள்ளன.

கடந்த 2018 மார்ச் நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 33 கோடி பான் கார்டுகளில் 16.64 கோடி கார்டுகளில் மட்டுமே ஆதார் எண்கள் இணைக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

இணைக்கவும் சரிபார்க்கவும்

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வருமானவரித் துறையின் www1.incometaxindiaefiling.gov.in/ என்ற இணைய தளத்துக்குச் சென்று Link Aadhaar பக்கத்துக்குச் செல்லவும்.

ஆதார் எண் பான் கார்டுடன் இணைக்கப் பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க, www1.incometaxindiaefiling.gov.in/ என்ற முகவரிக்குச் செல்லவும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)