வேலைக்கு வரமாட்டேன் நேரலையில் கத்திய செய்தியாளர்.. நடந்தது என்ன?

0
ஸ்பெயின் செய்தியாளர் ஒருவர் தனக்கு லாட்டரியில் முதல் பரிசு கிடைத் ததாக எண்ணிக் கொண்டு, நாளையில் இருந்து வேலைக்கு வர மாட்டேன் என நேரலை யிலேயே கத்திய நிகழ்வு நடந்துள்ளது.
வேலைக்கு வரமாட்டேன் நேரலையில் கத்திய செய்தியாளர்


நடாலியா என்ற பெண் செய்தியாளர் ஸ்பெயினில் உள்ள தொலைக்காட்சி யில் பணியாற்றி வருகிறார்.

இவர் கிறிஸ்துமஸ் லாட்டரி பரிசு நிகழ்ச்சியை நேரலையில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். 

முதல் பரிசு சுமார் 220 கோடி ஆகும். இந்நிலையில், தனக்கு பரிசு விழுந்ததாக நினைத்துக் கொண்டு நேர்லையில் துள்ளிக் குதிக்க தொடங்கினார். 

எதிர் முனையில் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் அப்படியே வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, தான் பணியில் விலகுவ தாகவும் நேரலை யிலேயே கத்தியுள்ளார்.

ஆனால், உண்மையில் அவர் வென்றது 4 லட்சம் மட்டுமே. இதையறிந்த நடாலியா தான் உணர்ச்சி வசப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 

முதல் பரிசான 220 கோடியை வேறு ஒருவர் வென்றார். இந்த வீடியோ காட்சி உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)